Results 1 to 8 of 8

Thread: உயிரானவளே!!!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0

    உயிரானவளே!!!

    வாயாடியாய் இருந்தும்
    அமைதியாய் வந்தமரும்
    புதிய மாணவிபோல்
    வந்தமர்ந்தாய் என்
    இதய வகுப்பறையில்
    நீ.

    *
    என் முதல் வரி
    நீ காதலித்தையும்
    மறுவரி
    நீ கைவிட்டதையும்
    எப்படியாவது காட்டிக்
    கொடுத்துவிடுகிறது
    என் கவிதைகள்

    *
    பலரோடு இருக்கையிலும்
    தனிமையே உணர்கிறேன்
    நீ இல்லாததால்

    *
    உனை மாதத்தில் மூன்று
    நாட்களில் என் மடியில்
    தாலாட்டியதுதான் ஞாபகம்
    வருகிறது தாய்மார்களை
    காணுகையில்

    *
    வானவில்லாய் நீ வந்து
    போனாலும் வானமாய்
    காத்திருக்கும் என்
    கவிதைகள் எப்போதும்
    உனக்காக



    -யாழ்_அகத்தியன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    காதலும் அழகு...!
    கவிதையும் அழகு..!
    அவை அகத்தியன் வரிகளிலே
    கை கோர்கையில் அழகோ அழகு...!

    யாழ் அகத்தியரே, அருமையான வரிகள் உங்கள் வரிகளிலே காதல் தேவதை இளமையோடு துள்ளிக் குதிக்கிறார் மனமார்ந்த பாராட்டுக்கள், இன்னும் நிறைய படைக்க என் வாழ்த்துக்கள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கவிதையில் கலக்கும் அகத்தியன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். வார்த்தைகள் அழகாக வந்துவிழுகின்றன உங்களுக்கு, தொடருங்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கவைக்கிறது இந்தக் கவிதை.

    நன்றி வணக்கம்
    ஆரேன்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    யாழ் காதல் கவிதைகளை திகட்டத் திகட்டத் தருகிறீர்களே... அப்படியே கொஞ்சம் சமூகக்கவிதையும் தாருங்கள்..!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0
    உங்கள் வாழ்த்துக்களுக்கு
    மிகவும் நன்றிகள்

    இந்த கவிதை இன்று
    எழுத பட்டதால் சில
    வேளை உங்களுக்கு
    அழகாக தெரிகிறதோ
    தெரியவில்லை

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காதலின் ஒவ்வொரு துடிப்பையும் வரிகளில் கொண்டு வருகின்றீர்கள்..முதலில் ஒரு இடத்தில் காதலை நீங்கள் காதலிக்கின்றீர்கள் என்று சொன்னேன்..இப்போது சொல்கின்றேன் காதல் உங்களைக் காதலிக்கின்றது..

    உனை மாதத்தில் மூன்று
    நாட்களில் என் மடியில்
    தாலாட்டியதுதான் ஞாபகம்
    வருகிறது தாய்மார்களை
    காணுகையில்

    கணமும் உன்னை
    தாயாய் பருகுபவளுக்கு
    நீ தாயானது
    மூன்று நாட்கள்
    மட்டும்தானா...


    உன் காதலில்
    உண்மையின் ஆயுள்
    மூன்று நாட்களா?


  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0
    நான்
    யாரையும் காதலிக்கவில்லை என்பதை
    கண்டுபிடித்து விட்டீர்கள்

    வாழ்த்துக்கள்

    நான்
    ஆசையால் தினமும்
    அவளை தாலாட்டினாலும்

    அவள் அழும்போது
    தாலாட்டுவது மாதத்தில்
    மூன்று நாள்தானே


    இதைத்தான் சொல்ல
    வந்தேன் குருவே
    Last edited by யாழ்_அகத்தியன்; 04-10-2007 at 05:50 PM.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    தாலாட்டும் கால அளவு கடுகளவே எனினும், ,
    காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிதன்றோ.

    ஆதரவாய் கரம் தேடும் தருணமது.
    தலை சாய்க்க மடி கிடைத்தால்
    வேறே சொர்க்கமெது. !

    யாழிசை போலவே இனிமையாக இருக்கிறது உங்கள் கவிதை.
    Last edited by சாம்பவி; 04-10-2007 at 09:02 PM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •