வாயாடியாய் இருந்தும்
அமைதியாய் வந்தமரும்
புதிய மாணவிபோல்
வந்தமர்ந்தாய் என்
இதய வகுப்பறையில்
நீ.
*
என் முதல் வரி
நீ காதலித்தையும்
மறுவரி
நீ கைவிட்டதையும்
எப்படியாவது காட்டிக்
கொடுத்துவிடுகிறது
என் கவிதைகள்
*
பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்
*
உனை மாதத்தில் மூன்று
நாட்களில் என் மடியில்
தாலாட்டியதுதான் ஞாபகம்
வருகிறது தாய்மார்களை
காணுகையில்
*
வானவில்லாய் நீ வந்து
போனாலும் வானமாய்
காத்திருக்கும் என்
கவிதைகள் எப்போதும்
உனக்காக
-யாழ்_அகத்தியன்
Bookmarks