மனம் திறக்க முற்படுகின்றேன்
உயிர்கொண்டு உணர்வு விற்கும்
வீணர்களிடையில்
என் உணர்வினை உரைக்க
உணர்வுள்ள உயிர் கேட்கின்றேன்!
மனிதர்களை மனிதர்களாய் நடத்த
நானெடுக்கும் முயற்சி என்மனதினைப் புண்படுத்த....
பிரம்மன் அவசரத்தில் படைத்தான் போலும்
ஆறறிவுமின்றி ,ஐந்தறிவுமின்றி சிலமனிதர்கள்
தவறு மனித விலங்குகள் நாட்டிற்குள்!
இங்கு
வீடுகளை மட்டுமல்ல
மனங்களையும் கற்களால்.......
கற்களுக்குள் ஈரம்தேடித்தேடி
என் கன்ணின் ஈரம் காய்ந்ததுதான் மிச்சம்!
Bookmarks