பழுத்துவிழும் இலைகளை
எருவாக்கி விருட்சமா(க்கு)வது
ஓரறிவு ஜீவன்களாம்..!
சருகாக உருவகிப்பது
ஆறறிவு ஜீவன்களாம்.
யாரறிவு ஆறறிவு????
பழுத்துவிழும் இலைகளை
எருவாக்கி விருட்சமா(க்கு)வது
ஓரறிவு ஜீவன்களாம்..!
சருகாக உருவகிப்பது
ஆறறிவு ஜீவன்களாம்.
யாரறிவு ஆறறிவு????
Last edited by அமரன்; 02-10-2007 at 01:23 PM.
அருமையான கேள்வி அமரன்..! பழுத்த இலைகளை ஆக்கும் சக்தியாய் உபயோகிக்கிறது ஒரறிவு ஜீவன். அதையே அழிக்கும் சக்தியாக உபயோகிக்கிறான் ஆறறிவு மனிதன். இந்த சந்தேகம் அடிக்கடி எனக்கும வரத்தான் செய்கிறது. ஆறறிவை விட குறைந்த அறிவைக் கொண்டுள்ள எந்த இனமும் இயற்கையை நாசப்படுத்தவில்லை. ஓசோனில் ஓட்டை போடவில்லை. உணவை வேதிப்பொருள் கொண்டு நஞ்சாக மாற்றிவில்லை. ஒரு வேளை அதீத அறிவும் அழிவிற்குத்தானோ..?
Last edited by ஜெயாஸ்தா; 02-10-2007 at 10:20 AM.
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
ஆறறிவு.--ஆறு அறிவுடையவர்கள்----ஆறு போன்ற அறிவுடையவர்கள்...
ஆறை நாம் பயன்படுத்தும் விதத்தில் விளைவை பெற்றுக்கொள்ளலாம்.
இலைகளை சருகாக நினைத்து எஇத்தால் அது மாசு..அதையே புதைத்தார்களானால் பசளை.
புரிவார்களா என ஏக்கம் கவிதையாக..நன்றி ஜே.எம்
இயற்கை எருவுக்காக ஒரு இயக்கமே போராடும் இந்த வேளையில் சிந்தனையை ஓங்கித் தட்டி எழுப்பும் சிறந்த கவிதை.ஆறறிவு பல சமயங்களில் ஓரறிவாகிறது...ஓரறிவு சில நேரங்களில் ஆறறிவைவிட மேலானதாகிறது.பாராட்டுக்கள் அமரன்.
விருட்சமாவது என்ற இடத்தில் விருட்சமாக்குவது என வந்தால் நன்றாக இருக்குமா..?
Last edited by சிவா.ஜி; 02-10-2007 at 01:08 PM.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மனிதன் கண்ணில் பட்டுவிட்டால் அது சருகாகிறது. படாத போது எரு ஆக்கப்படுகிறது. சுயமாக உரமாக்கும் என்பதை சுட்டவே அப்படி இட்டேன். நீங்கள் சொன்ன மாற்றமும் சிறப்பானது. ஆனால் நான் நினைத்ததை வெளிக்கொணரும் வீரியம் சற்று குறைவானதாக உணர்கின்றேன். நன்றி சிவா..அந்த மாற்றம் உங்களுக்கு தோன்றிய காரணத்தை சொல்ல முடியுமா?
என்னமா யோசிக்கிறாய்ங்க பசங்க...
பழுத்துவிழும் இலைகளை
எருவாக்கி விருட்சமாவது
ஓரறிவு ஜீவன்களாம்..!
சருகாக உருவகிப்பது
ஆறறிவு ஜீவன்களாம்.
உண்மையை நாம் எப்போது ஏற்றுக்கொண்டுள்ளோம் அமரா... நான் தான் பெரியவன் என்பதற்காக போராடியே நம் வாழ்க்கை கழிகிறது.
பாராட்டுக்கள் அமரா..
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நான் ஓரறிவு ஜீவன்களாக இங்கு கண்டது மண்புழுக்களை.அவைதான் விழுந்த இலைகளை மக்கச்செய்து மரத்துக்கு உரமாக்கி அவற்றை கம்பீரமான விருட்சமாக்குகிறது என்பதால் அப்படி தோன்றியது அமரன்.
விருட்சமாவது என்பது தானே உருவாவது...விருட்சமாக்குவது உருவாக்கப்படுவது....
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வாங்க சார். கொஞ்சம் கொஞ்சமாக செவ்வந்த்தி மன்றம் உங்களை கவர்கிறதே.
நான் பெரியவன் என்னும் மமதைத்தான் அழிவுகள் பலவற்றை கைதட்டிக் கூப்பிட்டு நட்பு பாராட்டுகிறது. அதற்கான தண்டனைகளை இயறகை அரசன்பாணியிலும், ஆண்டவன் பாணியிலும் வழங்கிக்கொண்டே இருக்கிறது. இருந்தும் பயனில்லை. தொற்று தீவிரமாகிறது.
ஆஹா..ஒன்றுக்குள் ஒன்றென ஒரு கவிதைக்குள் பல பார்வை...வெற்றிபெற்ற கவிதையின் இலக்கணம் இதுதான் அமரன்.மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks