அம்மா அம்மா
நீதான் எந்தன்
உ யி ர ம் மா.....
கருவை உயிராக்கி
சுமையை இதமாக்கி
வலியை சுகமாக்கி
உதிரத்தைப் பாலாக்கி
அன்பை உணர்வாக்கி
மொழியைத் தமிழ்ழாக்கி
என்னை உருவாக்கி
உன்னை மெழுகாக்கி
என்னை ஒளியாக்கிய
என் அன்புத்தாயே.....
அம்மா அம்மா
நீதான் எந்தன்
உ யி ர ம் மா.....
கருவை உயிராக்கி
சுமையை இதமாக்கி
வலியை சுகமாக்கி
உதிரத்தைப் பாலாக்கி
அன்பை உணர்வாக்கி
மொழியைத் தமிழ்ழாக்கி
என்னை உருவாக்கி
உன்னை மெழுகாக்கி
என்னை ஒளியாக்கிய
என் அன்புத்தாயே.....
எத்தனை கவிஞர்கள் எத்தனை வரிகள் எடுத்தாலும் தொடுத்தாலும் அன்னை புகழ் பாடி முடித்திடத்தான் இயலுமோ....
அவ்வழி அன்னை புகழ் பாடிய இலக்கிய வரிகளுக்கு சொந்தக் காரருக்கு வாழ்த்துக்கள் இருந்தாலும் இலக்கியன் இன்னும் முயற்சித்திருக்கலாமென்றே எனக்குப் படுகிறது.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அம்மாவைப்பாடும் இலக்கிய வரிகள் அருமை.பாராட்டுக்கள் இலக்கியன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அம்ம என்ற ஓற்றைச் சொல்லில்
அகிலமே ஒரு குடையின் கீழ்
இணைந்து பிண்ணிப் பினைகின்றது
அன்பில்
வாழ்த்துக்கள் இலக்கி
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அம்மா... எத்தனை முறை சொன்னாலும் சலிக்காத வார்த்தை... அலுக்காத உறவு... அழகான கவிதை...
கொஞ்சம் வரிகளை கலைத்துப் போட்டுப் பார்க்கிறேன்... உங்கள் அனுமதியுடன்...
கருவை உயிராக்கி
சுமையை சுகமாக்கி
வலியை இதமாக்கி
உதிரத்தைப் பாலாக்கி
அன்பை உணர்வாக்கி
மொழியைத் தமிழாக்கி
என்னை உருவாக்கி
உன்னை மெழுகாக்கி
என்னை ஒளியாக்கிய
என் அன்புத்தாயே.....
அம்மா அம்மா
நீதான் எந்தன்
உ யி ர ம் மா..... !!
வாவ்... அம்மாவே ஒரு கவிதை.. கவிதைக்கே ஒரு கவிதை.
Last edited by சாம்பவி; 02-10-2007 at 06:23 PM.
..
இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
.
அன்பு இலக்கியரே..!!
எத்தனைமுறை பாடினாலும் சலிக்காத ஒன்று அம்மா... சொல்ல சொல்ல மனம் சிலிர்க்கும் ஓர் வார்த்தை அம்மா...!
அந்த அம்மாவுக்காய் நீங்கள் பாடிய கவி அருமை..!! சாம்பவியின் அழகான வடிவமைப்பும் அருமை..!!
வாழ்த்துகள் இலக்கியரே...!!
Last edited by பூமகள்; 03-10-2007 at 01:45 PM.
எத்தனை கவிஞர்கள் எத்தனை வரிகள் எடுத்தாலும் தொடுத்தாலும் அன்னை புகழ் பாடி முடித்திடத்தான் இயலுமோ....
இயலாதுதான் ஓவியன்...
இலக்கியன். நீங்கள் மேலும் முயற்சித்திருக்கவேண்டும் என்பது எனது எண்ணம். நீங்கள் உருவாக்கியிருக்கும் வரிகள் அனைத்தையும் அன்னைக் கவிதைகளில் நான் கண்டிருக்கிறேன். இன்னும் விதமாக.... இன்னும் ஆழமாக.... அன்னை என்பவள் விழிகளல்ல காணுவதற்கு,, அவள் விழிப்படலம், உணர்வதற்கு...
வாழ்த்துக்கள்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நல்ல கவிதை...
ஆதவா சொன்ன குறைகளை நிவர்த்தி செய்திடுங்கள் அடுத்தடுத்த கவிதைகளில்.. உங்களிடம் கவித்திறன் நிறைய இருப்பது உங்களின் கவிதையில் தெரிகிறது. வாழ்த்துக்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரகளே
Last edited by இலக்கியன்; 14-10-2007 at 05:20 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks