வணக்கத்தின் வரவுகளை வந்த நம் உறவுகளை
பிணக்கமற்ற மனதுகளை
இணைக்கவே எழுதுகின்றேன்.
விந்தியத்தை விலக்கி வந்தோம்
வீரத்தை விதைத்து நின்றோம்
தென்னகத் திருமக்கள்
நாம்
திராவிட முதுமக்கள்!
அர்த்த சாஸ்திரத்தின் அஸ்திவாரங்கள்
அதில்
மறைக்கப்பட்டன மனித நேயங்கள்
வேதத்தின் பாதகத்தால் வெறுமையாய் வாழ்ந்திருந்தோம்!
பாதக வேதத்தால் பலகாலம் பரிதவித்தோம்!
பகுத்தறிவு பதிலடியில்
பதுங்கிவிட்ட சாஸ்திரங்கள்
பண்பறிவு பரிணாமம்
நமக்கு
பசியாற்றும் பலகாலம்!
இமயத்தில் கொடியேற்றி இறுமாந்திருந்தவர் நாம்!
இமயத்தில் கொடியேற்றி இறுமாந்திருந்தவர் நாம்!
இன்று
சமயக் கொடியேற்றி சதிவலையில் விழுந்துவிட்டோம்!
வந்தவர்கள் வாசல் அது ராஜஸ்தான்!
நம்
சொந்தங்களின் சொர்க்கமது பலுசிஸ்தான்!
அறிவியலும் அகவியலு மண்ணியலும் மருத்துவமும்
இயல் இசை நாடகாய்
இயற்றிட்டோம் நம் இலக்கியத்தில்!
அய்வகை நிலங்களையும் கடல் ஓடும் கலங்களையும்
அயல்தேச அரசுகளை அடக்கியதும் நாமேதான்!
கணவாயில் வந்தவர்கள் கல்நெஞ்சக்காரர்கள்!
நம்மை
பிணவாயின் பற்களுக்கு
பீடபலியாக்கி
தஸ்யூக்களை தகர்த்துவிட்டோமென
தம்பட்டம் தட்டினவர்தான்
இன்று
இடஒதுக்கீடு இருக்கவே கூடாதென
இந்த
இறுமாப்பு மனிதர்களின் இறுதிதீர்ப்பு!
ஏற்க மாட்டோமென எந்தவொரு இந்தியனும்
தீர்க்கமாய் முடிவெடுக்க திடமில்லை நம்மிடையே!
இவர்களின் வேதங்களோ இதிகாசங்களோ
மாசுபேற்ற தத்துவங்கள்
மார்தட்டி மறுக்கின்றேன்!
Bookmarks