Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: நீயின்றி..!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    நீயின்றி..!

    இருக்கும் நிலையிலிருந்து
    இன்னும் உயர....
    தனக்கு கிட்டாதது
    தன் பிள்ளைக்குக் கிட்ட
    நீ உழைக்கச் சென்றாய் எட்ட..!

    பாசமாய் நீயனுப்பிய
    பகட்டுச் சேலையுடித்தினால்
    சகட்டுமேனிக்கு சுற்றம்
    சாடை பேசுகிறது,
    பார்ப்பதெல்லாம் தானமாகக் கேட்டு
    கேட்டது தராவிடில்
    ஈனமாக ஏசுகிறது..!

    வேலையாய் வெளிவாசல் போனால்
    வேசிப்பட்டம் சூட்டும்
    வேண்டியதைக் கொடுத்துவிட்டால்
    வெட்கமின்றி வாலையாட்டும்!

    ருசியுணர்ந்தவள்
    பசியோடிருப்பாளென
    கேவலப்பிறவிகள்
    விரசப் பார்வையோடு
    உரசிப் பார்க்கின்றன..!

    வில்லம்புகள் ஆயிரம் துளைத்தும்
    விடாமல் உயிர்பிடித்த
    வீரன் பீஷ்மனைப்போல்
    சொல்லம்புகள் அனைத்தும்
    உள்ளத்தில் தாங்கி
    உயிர்வாழ்வதே..
    உன் மீள்வருகைக்குத்தான்!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    பல முறை எழுதப்பட்ட கருவென்றாலும் தங்களின் எழுத்தின் மூலம் புதிய பரிணாத்தை காட்டுகிறீர்கள்.
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வில்லம்புகள் ஆயிரம் துளைத்தும்
    விடாமல் உயிர்பிடித்த
    வீரன் பீஷ்மனைப்போல்
    சொல்லம்புகள் அனைத்தும்
    உள்ளத்தில் தாங்கி
    உயிர்வாழ்வதே..
    உன் மீள்வருகைக்குத்தான்!
    அருமையான வரிகள். வில்லம்புகள் துளைத்த வேதனையை விட சொல்லம்பு வேதனைகள் அதிகம்தான்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    தலைவனின் வருகைக்காய் தலைவி காத்திருக்கும் நிகழ்கால நிகழ்வை அசத்தலான வரிகளில் வலியுணர்த்தியிருந்தீர்கள் சிவா அண்ணா.
    மனைவி படும் துயரை ஆணாக இருந்தும் அழகாக அவர் மனத்தினை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்..!!
    பாராட்டுக்கள் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    புலம்பெயர் நவீன வாழ்க்கையில்
    தலைவனுக்காய் காற்றுத்தூது கவிதை அன்று
    தலைவிக்காய் காத்தல் தவக் கவிதை இன்று.

    ஆழமான உணர்வுகளை அழகான படைப்புகளாக்கும்
    அன்பு சிவாஜிக்கு பாராட்டுகள்!
    Last edited by இளசு; 02-10-2007 at 06:46 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாராட்டுக்கு மிக்க நன்றி ஜே.எம்.ஆம் பலமுறை சொல்லப்பட்டதுதான்...காதலைப்போல,தாய்மையைப்போல,...இந்த தவிப்பும் வேதனைதான்.கூட அம்மா,அப்பா மற்றும் பலர் இருக்கும் குடும்பத்தலைவிகளுக்காவது பரவாயில்லை...தனியாய் தன் குழந்தைகளுடன்,கணவன் அருகில் இல்லாது வாழ்க்கை நடத்தும் மனைவிகள் நேரிடும் இன்னல்கள் ஏராளம்.எங்களைப் போன்றோர் இதனை நிறையவே அனுபவிக்கிறோம்.நீங்கள் சொன்னதுபோல சொல்லம்புகள் தரும் வேதனை சொல்ல இயலாதது.நன்றி ஜே.எம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி பூமகள்.நான் ஆண் என்பதைவிட முதலில் அன்பான கணவன் என்பதாலும்,எனக்காகவும்,தன் பிள்ளைகளுக்காகவும் அத்தனை வேதனைகளையும் தாங்கி வாழும் அந்த உயர்ந்த உறவின் உள்ளம் அறிந்தவனென்பதாலும் இதை எழுத முடிகிறது.இந்த சமூகத்தின் சொல்வீச்சிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே என் மனைவி புதிய சேலைகளைக்கூட நான் அருகில் இருக்கும்போதுதான் கட்டிக்கொள்கிறார்.என்ன செய்வது தங்கையே..பெண்களுக்கு எல்லா விதத்திலும் வேதனையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி இளசு.உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டு,ஆதரவாய் வரும் பின்னூட்டங்கள் மனதை நெகிழச் செய்கின்றன.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இந்த சமூகத்தின் சொல்வீச்சிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே என் மனைவி புதிய சேலைகளைக்கூட நான் அருகில் இருக்கும்போதுதான் கட்டிக்கொள்கிறார்.என்ன செய்வது தங்கையே..பெண்களுக்கு எல்லா விதத்திலும் வேதனையே.
    சமூகப் பார்வை எப்படி இருக்கிறது பாருங்கள் அண்ணா?? கொண்டவர் அருகில் இல்லையெனில் வேதனையே பெண்களுக்கு... அன்பாய் கணவர் கொடுத்த உடையைக் கூட அணியமுடியாத சூழலில் தான் நாம் வாழ்கிறோமா?? சரியான பார்வையை ஏன் மக்கள் தொலைத்துவிட்டனர்?
    பொறாமையாலும் வயிற்றெரிச்சலாலும் என்ன வேண்டுமானாலும் பேசும் சமூகத்தைப் பார்த்து நேர்மையாய் இருக்கும் நாம் பயப்படும் அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறேன் அண்ணா. எல்லோருக்கும் அவர் அவர் வாழும் சுதந்திரம் உண்டு. நேர்வழியில் அடுத்தவருக்குத் தீங்கிழைக்கா வண்ணம் நம் வாழ்வை நாம் வாழ கட்டாயம் உரிமை உண்டு. தாங்கள் சொன்ன நிலை பெண்களுக்கு மாற வேண்டும். விரைவில் மாறும் என்று நம்புவோம்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கட்டியவன் இல்லையென்றால்,
    கட்டில் முதல் தொட்டில் வரை,
    கதை தொடுக்கும் சமுகச் சரம்...

    பிரிந்தவர்களுக்கு
    பிரிந்து வாழும்
    சோகம்.., ஆற்றாமையாக...
    பார்ப்பவர்களுக்கோ,
    பொறாமையாக...

    பாராட்டுக்கள் சிவா.ஜி...
    குடும்ப நிலைமைகளால், உழைப்புக்காய் பிரிந்த குடும்பங்கள்,
    சில சாக்கடை நரகர்களின் விஷம் பரப்புரைகளால்,
    நிரந்தரமாகப் பிரிந்ததும் உண்டு.
    மனநிலை தளராது இருந்தால், வாழ்நிலை உயரும். அன்றேல், வேரோடு சரியும்...
    Last edited by அக்னி; 02-10-2007 at 07:10 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    குடும்ப நிலைமைகளால், உழைப்புக்காய் பிரிந்த குடும்பங்கள்,
    சில சாக்கடை நரகர்களின் விஷம் பரப்புரைகளால்,
    நிரந்தரமாகப் பிரிந்ததும் உண்டு.
    மனநிலை தளராது இருந்தால், வாழ்நிலை உயரும். அன்றேல், வேரோடு சரியும்...
    மிக மிக சரியான கருத்து அக்னி.இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனநிலை தளராது இருப்பது ஒன்றே நல்ல வாழ்க்கையை தக்க வைக்க உதவும்.
    தங்கை பூமகள் சொன்னதுபோல நம் வாழ்க்கையை நாம் வாழ யாருக்கும் பயப்படத்தேவையில்லை.ஆனால் சில சமயங்களில் காயத்தின் வலி அதிகமாகும்போது அதனைத் தவிர்த்திட ஆமையாய் ஓட்டுக்குள் பதுங்கவேண்டிய கட்டாயம் பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.
    ஆழ்ந்த பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி அக்னி
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எத்தனை முறை முழங்கினாலும் உறைப்பதில்லை. செவிடாக இருக்கும் சமூகத்திற்கு "ஸைகை" தான் சாலச் சிறந்தது என்று பாதிக்கப்பட்டவர்கள் வெகுண்டு எழுந்தால் பாதிப்பு யாருக்கு. கரங்கள் பிடுங்கும் களைகளுடன் ஒன்றிரண்டு பயிர்களும் சேர, பூதாகாரமான எதிர்ப்பு கிளம்ப புயலாக களை எடுக்க தொடங்குவார்கள். பயிர்களும் நாசமாகும். எத்தனை தடவை அடிபட்டாலும் திருந்தாத கூட்டம் இன்னும் இருக்கு சிவா. நல்ல சிந்தனைக்கவிக்கு எனது பாராட்டுதல்.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆம் அமரன் பல சமயங்களில் கோபம் வருகிறது...ஏன் இப்படி இருக்கிறார்களென்று...அதே சமயம் இவையாவும் வருங்காலத்தில் மாறும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது அல்லது உதாசீனப்படுத்திவிட்டு நம் வாழ்க்கையை நாம் பார்ப்போம் என்று போய்விடத்தோன்றுகிறது.நன்றி அமரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •