Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: காதல் குளிர் - 2

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0

    காதல் குளிர் - 2

    காதல் குளிர் - 1

    பெங்களூர் ஏர்ப்போர்ட் ரோட்டில் எல்லா வண்டிகளும் டிராஃபிக் கடவுளின் வரத்திற்காக அமைதியாக நின்றபடித் தவமிருந்தன. அவ்வளவு நெருக்கடி. அந்த நெருக்கடியில் ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவிற்குள் ரம்யா. ரம்யாவிற்குள் எரிச்சல்.

    "எட்டரைக்கு ஃபிளைட். சீக்கிரம் போலாம்னு கெளம்பி வந்தா இப்பிடி டிராஃபிக். எறங்கி நடந்தாக் கூட பத்து நிமிசந்தான் ஆகும். முருகேஷ்பாளையா சிக்னலயே இன்னமும் தாண்டலை. ஆட்டோமேட்டிக் சிக்னல் போட்டா எல்லாம் ஒழுங்காப் போகும். எப்ப டிராபிக் போலிஸ் வந்து நிக்குறாங்களோ அப்பல்லாம் டிராபிக் ஜாம்தான்!!!!" எரிச்சலில் நினைத்ததைச் செயல்படுத்தியும் விட்டாள் ரம்யா.

    "தொகளி மூவத் ரூபாய். நானு இல்லே இளிக்கொள்ளுதினி (இந்தாங்க முப்பது ரூவா. நா இங்கயே எறங்கிக்கிறேன்)" பணத்தைக் குடுத்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். அவள் இறங்கிய நேரம் டிராஃபிக் தெய்வம் கடைக்கண்ணைத் திறந்து சிக்னலும் கிடைத்து. ஆட்டோவும் விருட்டென்று போய் விட்டது.

    ரம்யாவின் எகிறிப்போன எரிச்சலையும் கூடிப்போன கடுப்பையும் சொல்ல வேண்டுமா? விடுவிடுவென கோவத்தோடு நடந்து ஏர்ப்போர்ட்டிற்குள் நுழைந்தாள்.

    நெருக்கடி ரோட்டில் மட்டுமல்ல ஏர்ப்போர்ட்டிலும் இருந்தது. சிறிய விமான நிலையம். ஆனால் நிறைய கூட்டம். பெட்டியை ஸ்கேன் செய்ய ஒரு நீள வரிசை. செக்கின் செய்ய ஒரு நீள வரிசை. செக்யூரிட்டி செக் செய்ய இன்னொரு நீள வரிசை. பார்க்கும் பொழுதே தலையைச் சுற்றியது ரம்யாவிற்கு. "என்ன நேரத்துல கெளம்புனோமோ! ச்சே! கெளம்புறப்போ ப்ரகாஷாவுக்குக் கூட ஃபோன் பண்ணலை. சரி இப்பவாச்சும் கூப்புடுவோம். வரிசையப் பாத்தா செக்கின் பண்ண இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷம் ஆகும் போல இருக்கு...."

    மொபைல் ஃபோனில் அவனை அழைத்தாள். "ஹலோ ப்ரகாஷா...நான் கெளம்புறேன். ஏர்ப்போர்ட் வந்துட்டேன். வீட்டுலயே கூப்பிடலாம்னு நெனச்சேன். கெளம்புற அவசரத்துல மறந்துட்டேன். அதான் ஏர்ப்போர்ட் வந்ததும் கூப்டேன்."

    "இருக்கட்டும் ரம்யா. பத்திரமா போய்ட்டு வா. டிராபிக் மோசமா இருந்திருக்குமே இந்நேரம். ஆட்டோ கெடைச்சதா?"

    "ஆட்டோதான...கெடைச்சது..கெடைச்சது. டிராபிக் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம். இந்தா இருக்குற ஜீவன்பீமா நகர்ல இருந்து ஏர்ப்போர்ட் வர முப்பது நிமிஷம். ஆமா. நீ எங்க இருக்க?"

    "நானா? திரும்பிப் பாரு. வரிசைல ஒனக்கு நாலு பேருக்குப் பின்னாடி நிக்கிறேன்."

    ஆச்சரியத்தில் படக்கென்று ஆந்தை முழி முழித்துக்கொண்டே திரும்பினாள். அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.

    "நீ எங்கடா இங்க?" கேட்டுக்கொண்டே வரிசையில் தனக்குப் பின்னாடி இருந்த நாலு பேரையும் முன்னாடி விட்டுவிட்டு ப்ரகாஷாவோடு சேர்ந்து கொண்டாள்.

    நறுக்கென்று அவன் தலையில் கொட்டினாள். "எங்கயோ போறேன்னு எனக்குச் சொல்லவேயில்லையேடா? நீ எங்க இங்க?"

    "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....மெதுவா மெதுவா...என்னோட தலையில ஒன்னோட கன்னம் மாதிரி குழி விழுந்திருந்திரப் போகுது. சரி..சரி..முறைக்காத. நீ டெல்லிக்குப் போற.....கூடப் போய்ப் பாத்துக்கோன்னு ஹெச்.ஆர் என்னையக் கேட்டதால...சரி..சரி..முறைக்காத...உண்மையச் சொல்லீர்ரேன். நீ டெல்லிக்குப் போற. சப்யாவையும் சித்ராவையும் பாக்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? அதான் நான் ஹெச்.ஆர் கிட்ட பேசி....நீ கெளம்புற அதே பிளைட்டில்...அதே மாதிரி வெள்ளிக்கிழமை லீவு போட்டு....எப்படி என் ஐடியா?" பெருமையாகக் கேட்டான்.

    பொய்க் கோவத்தோடு மூஞ்சியைக் கோணங்கியாய் வைத்துக் கொண்டு சொன்னாள். "ஓ! சப்யாவையும் சித்ராவையும் பாக்கத்தான் டெல்லி வர்ரியா? நாங்கூட ஏதோ நான் தனியாப் போறேனோன்னு தொணைக்கு நீ வர்ரதா தப்பா நெனைக்க இருந்தேன்."

    உள்ளபடி சொன்னால்....டெல்லிக்குப் போவதை ப்ரகாஷாவிடம் அவள் சொன்னதே அவனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான். சொன்னால் எப்படியாவது இவனும் வருவான் என்று நினைத்தாள். அவனும் வந்தது ரம்யாவிற்கு மகிழ்ச்சியே. ஆனால் சப்யாவையும் சித்ராவையும் பார்ப்பதற்காக அவன் வருவதாகச் சொன்னது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

    இவள் இப்படியென்றால் ப்ரகாஷா வேறுமாதிரி. அவள் வந்து சொன்னதுமே ஹெச்.ஆரை உடனடியாகத் தொடர்பு கொண்டான். ஒருவேளை அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இவன் டெல்லிக்குப் போவதாகவே முடிவு செய்ந்திருந்தான். நல்லவேளையாக ஹெச்.ஆரில் உடனே ஒத்துக்கொண்டார்கள். ஏற்கனவே வர ஒப்புக்கொண்ட யாரோ வரமுடியாது என்று சொல்லி விட்டதால் ப்ரகாஷாவிற்கு டெல்லி பயணம் எளிதானது.

    அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா? சூப்பரப்பு. ரம்யா...ப்ரகாஷா...டெல்லி....குளிர்...காதல்..இப்படித்தானே முடிச்சுப் போட்டு வைத்திருப்பீர்கள். அந்த முடிச்சுப்படியேதான் போகப் போகிறோம். ஆகையால் தொடர்ந்து இப்பிடியே சரியாக ஊகித்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது கதைக்குப் போவோம்.

    சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள். இரண்டு குலாப்ஜாமூன்கள். எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள்கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.

    "ஏண்டா...நீ வரப்போறன்னு சொல்லீருக்கலாம்ல. உங்கூட கார்லயாவது வந்திருப்பேன். ஆட்டோவுல வந்து...சிக்னல்ல எறங்கி....பெரிய கூத்தாப் போச்சு..." ஆட்டோ கதையைச் சொன்னாள்.

    "ஹா ஹா ஹா....ஒரு சர்ப்ரைசுக்கு மஸ்த் பிளான். அதான் சொல்லலை. சப்யாவுக்கும் சித்ராவுக்கும் ஃபோன் போட்டுச் சொல்லீட்டேன்."

    "சரி சரி பொழைச்சுப் போ. பாரேன்...இந்த ரெண்டையும்....எங்கிட்ட நீயும் வர்ரேன்னு சொல்லவே இல்லை. ஏர்ப்போர்ட்ல இருந்து நொய்டாவுக்குப் போக டாக்சி புக் பண்ணீருக்கான் சப்யா. ஒரு மொபைல் நம்பர் குடுத்திருக்கான். எறங்குனதும் அதுல கூப்புடனும். அது டாக்சி டிரைவரோட மொபைல் நம்பர்."

    "அந்த நம்பர் எங்கிட்டயும் இருக்கு. சப்யா குடுத்தான்." பேசிக்கொண்டேயிருந்தவன் படக்கென்று ரம்யாவின் டிரேயில் இருந்து ஒரு குலாப்ஜாமூனை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விட்டான். ரம்யா சுதாரிப்பதற்குள் அவனுக்குக் குடுத்திருந்த குலாப்ஜாமூனையும் முழுங்கி விட்டான்.

    ரம்யாவுக்கு ஆத்திரம். அட....செல்லமாதான். அந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள். அவன் விடுவானா? அந்த பிரியாணியை எடுத்து அவள் பிரியாணியோடு கலந்து விட்டான். அட...எப்பொழுதும் அப்படித்தான். நட்பான காலத்திலிருந்தே இப்படித்தான். ப்ரகாஷா, சப்யா, ரம்யா, சித்ரா சாப்பிட உட்கார்ந்தால் வேறு யாரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. மில்க் ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்...இப்படித்தான்...யாருடைய தட்டில் யார் எதைக் கலந்தார்கள் என்ற வரைமுறையே இல்லாமல் இருக்கும். ஆனால் நால்வரும் நிம்மதியாம மகிழ்ச்சியாக சாப்பிட்டிருப்பார்கள். சப்யா சித்ரா போன பிறகு ப்ரகாஷா ரம்யா...

    "வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.

    "ஸ்டாப் ஸ்டாப்..எனக்கு எதுவும் அர்த்தாகலை. நிதானா நிதானா."

    "என்னடா நிதானா....நாங்க மறத் தமிழர்கள். அப்படித்தான் பேசுவோம்."

    "மரமா? என்ன மரம்?"

    "ஆகா...தமிழக் கேவலப் படுத்துறியா...ஒன்ன........அது மரம் இல்ல. மறம்...சொல்லு பாப்போம்."

    "மர்ரம். என்ன மர்ரமோ.எனக்கு ஷமா குடுத்துரு." தலையைக் குனிந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான். பெருந்தன்மையாக ரம்யாவும் மன்னித்து விட்டாள். இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரர் இவர்களது பொய்ச்சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார்.

    "அம்மா தாயீ....உன்னோட இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்."

    "பின்னே...நாங்க யாரு...மர்ர்ர்ர்ர்ர்ர்ர...சரி... விடு. என்னோட இருக்குறது இருக்கட்டும்...ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."

    தொடரும்...
    காதல் குளிர் - 3
    Last edited by அமரன்; 01-11-2007 at 05:26 PM. Reason: சுட்டி இணைக்க.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வாசிக்கும் போதே சுவையாகத்தான் இருக்கிறது. நமக்கு இப்படி ஏதுமில்லையே என்ற ஏக்கத்துடன் அடுத்த பாகத்திற்றாக காத்திருக்கிறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    ராகவன் அண்ணா,,,
    உங்கள் காதல் குளிர் கதையை படித்து எங்களுக்கு குளிர் வராமல் இருந்தால் சரி..
    பாருங்கள் அன்பு எல்லாம் குளிரில் ஆடிப்போய் இருக்கார்....

    ரமணிச்சந்திரன் நாவல்கள் படிக்கும் போது இருக்கும் விறுவிறுப்பு காதல் குளிர் படிக்கும் போதும் இருக்கு...
    கதையோடு ஒன்றி போக வைத்து விட்டீர்கள்.அண்ணா...
    இந்த தங்கையின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மலர் View Post
    ராகவன் அண்ணா,,,
    உங்கள் காதல் குளிர் கதையை படித்து எங்களுக்கு குளிர் வராமல் இருந்தால் சரி..
    பாருங்கள் அன்பு எல்லாம் குளிரில் ஆடிப்போய் இருக்கார்....
    நெசமாவா???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நெசமாவா???
    அட ஆமாங்க

    நாங்க எல்லாம் பொய்யே சொல்லமாட்டோம்....

    (அட நம்புங்க)
    (பின்ன அந்த பொம்மை ஏன் இப்படி சிரிக்குது...
    குளிரில் தான)
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மலர் View Post
    அட ஆமாங்க
    நாங்க எல்லாம் பொய்யே சொல்லமாட்டோம்....
    (அட நம்புங்க)
    (பின்ன அந்த பொம்மை ஏன் இப்படி சிரிக்குது...
    குளிரில் தான)
    நான் நம்பீட்டன்...

    அது சிரிக்கிறது குளிரால் தான். ஆனால் ராகவன் அண்ணாவின் காதல் குளிரால் என்று எவ்வாறு கூறினீர்கள்?? அனுபவமோ???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நான் நம்பீட்டன்...

    அது சிரிக்கிறது குளிரால் தான். ஆனால் ராகவன் அண்ணாவின் காதல் குளிரால் என்று எவ்வாறு கூறினீர்கள்?? அனுபவமோ???
    இதாவே வேண்டாம் எங்கிறது...?
    அன்பு இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை
    சைக்கிள் கேப்பில ரிக்ஷா ஓட்டுறீயளே....
    ஒரு பச்ச புள்ளைய பாத்து கேக்குற கேள்வியா இது..?
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மலர் View Post
    ஒரு பச்ச புள்ளைய பாத்து கேக்குற கேள்வியா இது..?

    நானாவது பரவாயில்லை. நீங்கள் சைக்கிள் கப்பில ஏரோப்பிளேன் அல்லவா ஓட்டுகிறீர்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post

    நானாவது பரவாயில்லை. நீங்கள் சைக்கிள் கப்பில ஏரோப்பிளேன் அல்லவா ஓட்டுகிறீர்கள்.
    எங்க... அதைத்தான் ஓட்டவிடாமல்
    கரெக்டாக பிடித்து விட்டீர்களே...

    ஒரு உண்மையை சொன்னால் கூட நம்ப மாட்டேன் என்கிறீர்களே
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஒரு காதல் கதையின் முடிவு சொல்லீட்டு அப்புரம் கதை ஆரம்பிச்சு தொடர்ந்து கொண்டு போகும் விதம் வித்தியாசமாக இருக்கு
    குறிப்பாகா எங்களுக்கு சிக்கனில் குலோப்ஜாமுன் கலந்து தந்து அடுத்த ஐட்டத்துக்கு ஏங்க வைத்து இருக்கிறீகள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கதையை ஊகித்து விட்டீர்கள்தானே என்று கதையில் நீங்கள் கேட்பது,
    ஊகிக்க முடியாத திசையில் கதை நகரப்போகின்றது என்ற ஐயத்தை தருகின்றது... ஆனாலும் சுவைக்காக ஏங்க வைக்கின்றது...
    எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள்கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.
    வித்தியாசமான விவரிப்பு... கவர்கின்றது முழுமையாக...
    அடுத்த பாகத்திற்கு அவசரமாக பிளைட் பிடித்துப் போகின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    வாசிக்கும் போதே சுவையாகத்தான் இருக்கிறது. நமக்கு இப்படி ஏதுமில்லையே என்ற ஏக்கத்துடன் அடுத்த பாகத்திற்றாக காத்திருக்கிறேன்.
    குலாப்ஜாமூனைத்தானே சொல்கின்றீர்கள்...
    அப்பச்சரி...
    Last edited by அக்னி; 16-10-2007 at 03:38 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •