மேகத்தைக் கற்களாய் கொண்டு
காற்றை உளியாக்கி
அழகிய சிற்பம் உருவாக்க
முயல்கின்றது இயற்கை
மேகத்தைக் கலைத்திட
முயல்கின்றது தென்றல்
என்பதனை அறியாமல்...

பாறையாய் உறைந்து கிடந்த
உன் இதயத்தை
காதல் என்னும் உருவம் தீட்டி
அன்பெனும் உளி கொண்டு
செதுக்கினேன் நானே
பாறையாய் மாறிடுவேன் - என
அறியாமல்...

இயற்கையாய் உருப்பெற்ற
என் காதல்
முடிவற்ற முடிவாய்
முடிந்து போனது...