கதறி அழுதால்
காதல் வராது
இதயம் அழுதால்
காதல் வரும்!!!
எனக்கு
இதயம் அழுகிறது
ஆனால்
வார்த்தை வரவில்லை
காதலி
இன்னொருத்தனுடன்!!!
இதயம்
இன்றும்
அழுதுகொண்டேயிருக்கிறது
காதல்
இன்னும்
உள்ளே உறங்கிக்கொண்டிருப்பதால்!!!
கதறி அழுதால்
காதல் வராது
இதயம் அழுதால்
காதல் வரும்!!!
எனக்கு
இதயம் அழுகிறது
ஆனால்
வார்த்தை வரவில்லை
காதலி
இன்னொருத்தனுடன்!!!
இதயம்
இன்றும்
அழுதுகொண்டேயிருக்கிறது
காதல்
இன்னும்
உள்ளே உறங்கிக்கொண்டிருப்பதால்!!!
கவிச்சமரில் எழுதினேன். ஆனால் பெரிதாக வந்துவிட்டது. இங்கே பதித்துவிட்டேன்.
இதயத்தின் அழுகை!!
புத்துணர்ச்சியை புதைத்து
புண்முகத்தைத் தரும்
இதயத்தின் சிரிப்பு!!
இளமையாய் சிலிர்த்து
இன்முகத்தைத் தரும்.
அழுபவர்களிடம் காதல்
தங்குவதில்லை.
அசத்துபவர்களிடம் காதல்
கனிந்து இருக்கும்.
தயவுசெய்து இதயத்தை அழவிடாதீர்கள் −
காதலுக்காக. கவிதைக்குக் கூட!!
(தலைவா அரண், இதயம் அழுவது பொறுக்காமல் எழுதிவிட்டேன்.)
அளவில்லா அன்புடன்,
தளபதி.
எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.
ஹீம் இதயம் அழுகின்றது
இரத்தத்தை உடலெங்கும் பரப்பி
ஓவ்வொரு செல்களையும்
உயிர்ப்பிக்கும் உன்னை
உயிரற்றதாய் ஆக்கிச் சென்றுவிட்டாள்
உயிருள்ள ஒருத்தி ஆனாலும்
ஆரென் அண்ணா கவிதை அழகு வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இதயம் அழுது கண்ணீரை வெறியேற்றி அதை அடுத்த காதலுக்கான வெற்றிடமாக வைத்துக்கொள்ளட்டுமே..!!!
கலக்கிட்டீங்க ஆரென்.அதுவும் கடைசி பத்தி அபாரம்.
ஆனால் இதயம் அழுது வரும் காதல் ஐய்யோ பாவக்காதல்....அல்ப்பாய்சுதான் அதற்கு.இதயம் உணர்ந்து வரும் காதலே நிலையாயிருக்கும்.
வாழ்த்துக்கள் ஆரென்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கதறும்போதே தெரியவில்லையாகதறி அழுதால்
காதல் வராது
இதயம் அழுதால்
காதல் வரும்!!!
சீரியசான கேஸ் என்று?
அழும்போது
பிறப்பது விம்மல்..
எனக்கு
இதயம் அழுகிறது
ஆனால்
வார்த்தை வரவில்லை
காதலி
இன்னொருத்தனுடன்!!!
தப்பிப் பிறக்கும்
வார்த்தை
கரு தாங்குவதில்லை
மனதில் அது
தங்குவதில்லை.
உன்னை நினைத்தேஇதயம்
இன்றும்
அழுதுகொண்டேயிருக்கிறது
காதல்
இன்னும்
உள்ளே உறங்கிக்கொண்டிருப்பதால்!!!
அழுகிறது இதயம்
காதலைப் புரியாதவன்
என்ற பரிதாபத்துடன்...
இதயக்கண்ணீரிலாவது
துயில் கலைக்கட்டும்
உள்ளிருக்கும்
உண்மைக்காதல்..!
குடிவரட்டும்
இதயக்கனியாக
கன்னி...!
மரியாதைகள் சுருங்கியது
கவிவடிவம் பிரசவிக்க
மனச்சுருக்கம்
வேண்டாம் அண்ணா.
Last edited by அமரன்; 30-09-2007 at 03:43 PM.
இதயத்தை சிலிர்க்கவைப்பதும்
பின் துளிர்க்க வைப்பதும்
சில வேளை துடிக்க வைப்பதும்
இந்த காதல் தானே.....!!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அண்ணா கவிதை சூப்பர்.
வாழ்த்துக்கள்..
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks