கதறியதால்
அவிழ்த்துவிட்டேன்
அம்மாவை
தலை தெரிக்க ஓடியது
தன் கன்றை நோக்கி
என்ன ஆகியதோ
என்ற பதற்றத்தில்!!!
தாய்ப்பாசம்
இங்கேயும் உண்டு
ஆனால் அவை
இதை
பெரிதுபடுத்துவதில்லை!!!
இயற்கையின் நியதியை
நாம் பெரிதாக
நினைக்கிறோமோ!!!
புரியாமல் நான்!!!
கதறியதால்
அவிழ்த்துவிட்டேன்
அம்மாவை
தலை தெரிக்க ஓடியது
தன் கன்றை நோக்கி
என்ன ஆகியதோ
என்ற பதற்றத்தில்!!!
தாய்ப்பாசம்
இங்கேயும் உண்டு
ஆனால் அவை
இதை
பெரிதுபடுத்துவதில்லை!!!
இயற்கையின் நியதியை
நாம் பெரிதாக
நினைக்கிறோமோ!!!
புரியாமல் நான்!!!
அம்மா-வளமான எச்சப் பாசப்பிணைப்பு எல்லா உயிரிடத்தும் உண்டு. மனிதனை விலத்தி மற்றவற்றை பார்க்கும்போது ஒரு கட்டத்தில் அது உடைக்கப்பட்டது/உடைந்துவிட்டது போன்று ஒரு மாயை தோன்றுகின்றது. ஆனால் அவை தமக்குத் தெரிந்த பரிபாசையில் வெளிக்கொண்டு இருக்கின்றன என்று நினைக்கின்றேன், பாக்கியராஜின் ஒரு திரைப்படத்தில் (ஓர் ஊரில் ஓர் இராஜகுமாரி?) இதை மையப்படுத்தி ஒரு காட்சி அமைத்திருப்பார்....
பாராட்டுகள் அண்ணா.
Last edited by அமரன்; 30-09-2007 at 03:10 PM.
கையிலே தீ சுடும் போது நாம் மூளையின் உத்தரவின்றி வெடுக்கென்று கையை வெளியே இழுப்போமே (முண்ணானின் வேலை இது) அதனைப் போன்றது தாயன்பு....
ஒவ்வொரு தாய்மையிடம் அது தானாக ஊறி வ்ருவது, சொல்லி வருவதல்ல அது...
இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்....
பாராட்டுக்கள் ஆரென் அண்ணா!.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நல்ல கவி அரென் அண்ணா.
இயற்கைத் தாயின் மாறா நியதிகளில் இதுவும் ஒன்று. ஐந்தறிவு விலங்குகளுக்கு இருக்கும் தாயுள்ளம் கண்டு வியந்திருக்கிறேன் பலசமயம்.
உங்களின் கவி அதனை நினைவூட்டியது.
பாராட்டுக்கள்.
தாய்ப்பாசத்தை தாய்ப்பசு பெரிதாக நினைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.பாசமில்லாமலா பதறி ஓடுகிறது?
இது இயற்கையின் நியதிதான் இருந்தும் மற்றவையெல்லாம் தாய்ப்பாசத்தின் மிகுதிதான்.சில சமயங்களில் பெரிதுபடுத்தப்பட்டாலும்,அப்படி படுத்தப்படாமலே அது பெரிதாக இருப்பதுதான் அதன் சிறப்பே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கவிதை கலக்கல்...
அண்ணா தற்போது தாங்கள் அதிகமாக கவி படைக்கிறீர்கள்.
இதை மென்மேலும் பெருக்குங்கள்.உங்களின் கவிகளை ரசிக்க காத்திருக்கிறோம்..
வாழ்த்துக்கள்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks