Results 1 to 7 of 7

Thread: முடிச்சுகள்!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2

    முடிச்சுகள்!!!

    அளைப்பற்றி முழுமையாக
    அறிந்திருக்கவில்லை
    அவள் ஏமாற்றுபவள்
    என்றும் நான் நினைக்கவில்லை
    என்னிடம் காதலை
    அவள் சொன்னபொழுது!!!

    இன்று கல்யாணம் பற்றி
    பேசும்பொழுது
    அந்தஸ்தும் அப்பாவின்
    அனுமதியும் ஞாபகத்திற்கு வருகிறது!!!

    அமெரிக்க மாப்பிள்ளையின்
    வரம் வீட்டிற்கு வந்திருக்கிறது!!!

    தலையை நீட்ட தயாராகும்பொழுது
    இடையில் இருக்கும்
    என்னை அவிழ்த்துவிட
    அவளுக்கு அவளே போட்டுக்கொள்ளும்
    முடிச்சுகள்
    அவளை வெளிக்காட்டியது!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆரென் அண்ணாவின்
    கவிதை நாயகி
    காதலுக்கே
    ஒரு கரும்புள்ளி.....!


    தலையை நீட்ட தயாராகும்பொழுது
    இடையில் இருக்கும்
    என்னை அவிழ்த்துவிட
    அவளுக்கு அவளே போட்டுக்கொள்ளும்
    முடிச்சுகள்
    அவளை வெளிக்காட்டியது!!!

    அழகான வார்த்தைப் பிரயோகம் அண்ணா!!

    வாழ்த்துக்கள்......!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கவிதையின் நாயகி ஒருபோதும் ஒரு காதலியாக இருக்கவே முடியாது.இதயங்களின் பரிமாறல்தான் காதல்..இவள் பணப்பரிமாற்றத்தில் மனம் மாற்றப்பட்டவள்...இவளிட்ட முடிச்சிலிருந்து நாயகன் அவிழ்ந்ததே நல்லது....இல்லையெனில் நாயகன் போடும் மூன்று முடிச்சு..மூச்சை முடிக்கும் முடிச்சாகியிருக்கும். நல்ல வார்த்தைப் பிரயோகம் ஆரென் வாழ்த்துக்கள்.
    Last edited by சிவா.ஜி; 30-09-2007 at 01:35 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஆரென் அண்ணாவின்
    கவிதை நாயகி
    காதலுக்கே
    ஒரு கரும்புள்ளி.....!




    அழகான வார்த்தைப் பிரயோகம் அண்ணா!!

    வாழ்த்துக்கள்......!!!

    நன்றி ஓவியன். இப்பொழுது இருக்கும் யதார்த்த உலகத்தில் இது ஒரு சகஜமான விஷயமாகி ஆகிவிட்டது. நீங்களே இதை பார்த்திருப்பீர்கள். காதலித்தது ஒருவனை கல்யாணம் செய்வது இன்னொருத்தனை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், இதுவும் ஒன்றாக இருக்கிறது என்பதைச் சொல்லவே இதை எழுதினேன்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கவிதையின் நாயகி ஒருபோதும் ஒரு காதலியாக இருக்கவே முடியாது.இதயங்களின் பரிமாறல்தான் காதல்..இவள் பணப்பரிமாற்றத்தில் மனம் மாற்றப்பட்டவள்...இவளிட்ட முடிச்சிலிருந்து நாயகன் அவிழ்ந்ததே நல்லது....இல்லையெனில் நாயகன் போடும் மூன்று முடிச்சு..மூச்சை முடிக்கும் முடிச்சாகியிருக்கும். நல்ல வார்த்தைப் பிரயோகம் ஆரென் வாழ்த்துக்கள்.

    நன்றி சிவா. பல சமயங்களில் இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது காதல் முறிவிற்கு.

    வார்த்தைப் பிரயோகம் நல்லா வந்திருந்தால் சந்தோஷம்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கடைசி பாரா வார்த்தை பிரயோகம் அருமை ஆரென்ஜி.. அமெரிக்க மாப்பு வச்சிட்டான் ஆப்பு... வாங்க நாமும் அமெரிக்க செல்வோம்..!!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எந்த ஒரு செயலையும் செய்ய முன்னர் அக,புற தாக்கங்களுக்கு ஈடுகொடுத்து எதிர்தாக்குதல் செய்ய துணையாக வலுவை சேர்த்துக்கொள்ளலும் கட்டிக்காத்தலும் அவசியம். இதை புறந்தள்ளுதலே எதிர்விளைவுகளை தந்து புரட்டி எடுக்கின்றன..காதலும் அப்படித்தான். மீறியவர்களை நினைத்து கவலைப்படாமல் பரிதாபப்படுதலே நன்று. பாராட்டுகள் அண்ணா.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •