Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: முறையோ இது முறையோ...?

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0

    முறையோ இது முறையோ...?

    பகர்தல் முறையோ
    வீணன வதந்திகளை...!
    பகிர்தல் முறையோ
    தீயான மதவெறியை...!
    நுகர்தல் முறையோ
    கேடான போதைப்பொருளை...!

    பணித்தல் முறையோ
    தொண்டர்களை வன்முறைக்கு...!
    ஜனித்தல் முறையோ
    பயமாய் வாழ்வதற்கு...!
    மரணித்தல் முறையோ
    அர்த்தமில்லா காதலுக்கு...!


    மௌனித்தல் முறையோ
    அநீதிகளைக் கண்டு...!
    'கவனித்தல்' முறையோ
    அதிகாரிகளை லஞ்சம் கொண்டு...!
    பயணித்தல் முறையோ
    இலக்கில்லா பயணத்தில் இன்று....!


    முறையற்ற செயல்களுக்கு
    முடிவு கட்ட....
    திரும்பி வா... இளைஞனே...
    திருந்தி வா... இளைஞனே...
    எதிர்மறை வாதமெல்லாம் -இனி
    கதிர்கண்ட பனியாய் மறையும்...!

    (நம் மன்றத்து கவிச்சமரில் கலந்துகொள்வதில் அலாதி ஆர்வம் எனக்கு. சில நேரங்களில் ஒரு கவிதை படித்துமுடித்து அதன் முடிவைக்கொண்டு அடுத்த கவிதையை ஆரம்பித்து, யோசித்து எழுதி அதை நான் பதிப்பிப்பதற்குள் நம் மன்றக்கவிகள் மின்னல் வேகத்தில் பல கவிதையைப் படைத்துவிடுகிறார்கள். அவர்களோடு போட்டியிடமுடியாமல் எழுதிய என் கவிதைகள் என் கணிணியிலே தூங்கிவிடுகிறது. இந்த கவிதைகூட அப்படித்தான்.

    Quote Originally Posted by பூமகள் View Post
    என்றும் உனக்கே
    நானிருப்பேன் என்று
    நின்றே தவம் செய்தாய்..
    நன்று சொல்லி சரி என்றேன்
    இன்றோ...
    சென்று விடு வாழ்வை விட்டு
    என்று பகர்தல் முறையோ??

    பூமகளின் கவிதைக்கு சமராட நினைத்து எழுதிய கவிதை. இதை அப்படியே விடாமல் பதிப்பித்தால் நலமோயென தோன்றியதால்தான் இந்த தனிதிரி.)
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    முறை கெட்ட மானிடர்க்கு
    முறை சொல்லும் உங்கள் கவிதை
    முறையாக இருக்கிறது
    முறையான வாழ்த்துக்கள்!!!!
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முறையில்லா முறைகள்...
    மறையவேண்டிய முறைகேடுகள்...

    அருமை... ஜே.எம்...
    அழகிய கவிதை... கருத்தான விதை... நிச்சயம் வளரும்...

    பி.கு:
    கவிச்சமரில், இப்படியான கவிதைகள் இடம்பெற்றால், பலர் நுகர மாட்டார்கள்.
    எனவே, இப்படியான பெருங்கவிதைகளை தனித்திரியில் பதிவேற்றுங்கள்.
    உங்கள் கணினியை களஞ்சியமாக்காதீர்கள். மன்றத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    சிறிய கவிதைகளை, நீங்கள் வேகத்தில் பிந்திப் போனாலும், கவிச்சமரில் இட்டுவிடுங்கள்...
    கவிச்சமர்... பலரின் பன்முக உணர்வின் சங்கமம்...
    என்றாவது கவிதைத் தொகுப்பாக வரலாமல்லவா...

    மிகுந்த பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 27-09-2007 at 10:28 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையான கவிதை ஜே.எம். இந்த மாதிரியான பெரிய கவிதைகளை தனித்திரியாக இங்கே பதிவு செய்வதே சிறந்தது. இதை மக்கள் படித்து சந்தோஷப்படுவார்கள். ஆகையால் இங்கேயே பதிவு செய்யுங்கள்.

    கவிச்சமரில் மக்கள் வேகம் மிகவும் அதிகம். நான் எழுதிய பல பதிவு செய்யமுடியாமல் பின்னர் கொஞ்சம் திருத்தப்பட்டு இங்கே பதித்திருக்கிறேன். இதுமாதிரி பலருக்கும் வந்திருக்கலாம். கவலை வேண்டாம், மீண்டும் கவிச்சமரில் முயற்சி செய்யுங்கள், வெற்றி உங்களுக்கே.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பகர்தலும் பகிர்தலும்
    போதை தருமெனில்
    பகிஸ்கரிப்பு அவசியம்
    நுகர்வோர் எம்மிடம்.

    ஜனனமும் மரணமும்
    எல்லையிட்ட பயணத்தில்
    தேவை அச்ச நாட்டம்
    மனசாட்சிக்கு மட்டும்.

    வாழ்க்கை முறையை
    வாழ்வாதார சுருதியை
    சொன்ன கவிதைக்கு
    நன்றி நவில்கிறேன்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கவிதை பிரமாதம் ஜே.எம்.நல்ல கருத்துக்களை "முறை"யாக சொல்லியிருக்கிறீர்கள். இதை எல்லோரும் முறையாகச் செய்தால் இன்னொரு முறை சொல்லவேண்டியத் தேவையில்லாமிலிருக்கும்.

    எதிர்மறை வாதமெல்லாம் -இனி
    கதிர்கண்ட பனியாய் மறையும்...!


    இந்த வரிகள் மிகப்பிடித்திருக்கிறது.வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    தங்களின் நிறைவான விமர்ச்சனத்திற்கு நன்றி நாரதரே....!

    கவிச்சமருக்கு தகுந்த ஆலோசனை அளித்தது வாழ்த்திய தோழர்கள் அக்னி மற்றும் ஆரெனுக்கும் நன்றி.

    கவிதைக்கே கவியால் வாழ்த்திய அண்ணன் அமரனுக்கும், முறை பற்றி முறையாய் சொன்ன சிவாஜிக்கும் நன்றி.
    Last edited by ஜெயாஸ்தா; 27-09-2007 at 11:52 AM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  8. #8
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    முறையோ முறையோ என்று முறையாக கவிதை படைத்தீர்கள் வாழ்த்துக்கள்

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    நன்றி இலக்கியன்...!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    முறைமையும் முறமையின்மையும் சில இடங்களிலே பிரித்தறிவது கொஞ்சம் சிக்கலான விடயம். ஏனென்றால் ஒரு இடத்தில் முறையாக இருப்பது இன்னொரு இடத்திலே முறையில்லாமற் போக சந்தர்ப சூழ் நிலமைகள் வழி வகுத்து விடும்.

    ஆனால் இங்கே ஜே.எம் கையாண்ட கவிக்கரு அத்தனையும் மனிதம் என்பதற்கு ஒவ்வா முறைமையே....

    அதனைச் சாடிய விதம் அருமை ஜே.எம்....

    தொடர்ந்து உங்கள் சமூகக் கவிதைகளைத் தவழ விடுங்கள் ஜே.எம்...
    கவிச்சமர் ஒரு களம் அதனை நல்ல முறையிலே பாவித்து வரும் உங்களைப் போன்றோருக்கு என்றும் மன்றத்தின் ஊக்கம் கிடைக்கும்...

    தொடருங்கள் நண்பரே, தொடந்து வருவோம் நாங்களும்.......

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆஹா... எனது கவிதையின் ஒரு சொல்லை வைத்து... இவ்வளவு அழகான சமூகக் கவியா?? அசத்தல் சகோதரரே...!!
    மிகுந்த நன்றிகள்...!!
    முறையில்லா விடயங்களைத் தேர்ந்த வார்த்தைக் கோவையில் பகிர்ந்த உமது திறன் வியப்பில் ஆழ்த்துகிறது..!!
    தொடர்ந்து இம்மாதிரியான கவிதைகளை... தாருங்கள்...!!
    கவிச்சமரில் சிறிய கவிதைகளைப் பகிருங்கள்.
    பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் ஜே.எம்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் ஜே.எம்.
    மிக்க நன்றி பூமகள்.... தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும்.... (அப்பாட ஒரு வழியாக பி.எம் அனுப்பி பூமகளையும் இந்ததிரிக்கு வரவழைச்சாச்சி...! ஜே.எம்.-ன் மனசாட்சி : 'யேய்... ஜே.எம், இதெல்லாம் ஒரு பொழப்பாடா.... பாரட்டுங்கிறது தானா கிடைக்கணும்.... நீ என்னடான்னா இந்தத்திரியைப் இன்னும் பார்க்கவில்லையான்னு பி.எம். அனுப்பி அப்புறம் பராட்டு வாங்குற..... இரு உன்னைப் பற்றியும் ஒரு கவிதை எழுதி கிழிச்சாத்தான் சரிபட்டுவரும்...!)
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •