குளிர்ந்த காற்று நனைந்த உடலை நடுங்கச் செய்ய
மலர்ந்த நிலவு சற்று இருள்விரட்ட...
எங்கோ சில கடல் படறவைகள் சத்தமிட
மிதந்த மரத்துண்டில் உயிருக்குபோரடியபடி நான்...!
கப்பல் கவிழ்ந்து மூன்று நாட்களாகிவிட்டது
எத்தனை பேர் பிழைத்தனரோ தெரியவில்லை...
ஆனால் என்னுடன் துணைக்கு யாருமில்லை
சுற்றிலும் தண்ணீர்.... தாகம் தீர்க்கவில்லை...!
கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தேசம்தான்....
பற்றியிருந்த மரத்துண்டு என்னை
மூழ்கவிடாமல் சாகவிடாமல் சாதித்துக்கொண்டிருந்தது....
ஏதேனும் அதிசயம் நிகழாதா....?
ஏக்கப் பெருமூச்சு...திடீரென கடல்கொந்தளிக்க
என் துக்கம் தாளமல் வானம் அழத்தொடங்கியது...!
கைகள் மரத்திருக்க...
மரத்துண்டு நழுவிவிட்டால் என்ன செய்ய?
மரத்தின் துண்டின் மேலேறி
அமர்ந்து கிடைத்த கயிறின் உதவியால்
உடலை மரத்துண்டோடு இருக்கிக்கொண்டேன்...!
இன்றைய இளைஞன் போல் இலக்கில்லாத பயணம்...
எப்போது முடியும்....நம்பிக்கை தீ மெல்ல அணைகிறது....!
சூரியன் மெல்ல உதிக்கிறது...
இன்றோடு நான்காவதுநாள்...!
பசிமயக்கம் மெல்ல கண்களை மூட...
எவ்வளவு நேரம் தெரியவில்லை...
அருகில் ஏதோவொரு அரவம் கேட்க
கண்திறந்தால்.... எதிரே ஒரு காகம்...!
அதன் கண்களிலும் பசி தெரிந்தது...
பறக்க முடியாமல் அதுவும் சோர்ந்திருந்தது...
எங்கே விரட்டிடுவேனோ என்று
என்னை பயத்துடன் பார்த்தது...!
எனக்கோ ஒரு பேச்சுத்துணை
கிடைத்த சந்தோசம்...!
இன்னும் காகம் என்னைநெருங்கியது...!
சில மணித்துளிகளில் இருவரும்
நெருங்கிவிட்டோம்...!
என் உயிரோடு கலந்த மனைவி
என் உணர்வான குழந்ததைகள்
பசமான பந்தகங்ள்...நேசமானநண்பர்கள்..
இவர்களை இனி காண்பேனா..?
புலம்பினேன் காகத்திடம்....
புரிந்ததா தெரியவில்லை...!
தூரத்தில் ஏதோ ஒரு பொருள் மிதந்துவர
அருகில் வந்ததும் கைகளால் பிடித்து பிரித்தேன்...!
ஏதோவொரு கப்பலிலிருந்து ஏறிந்த சாப்பாட்டின்மிச்சம்...!
ஆசையோட வேகமாய் பிசைந்து உண்ண எத்தனித்தேன்...
அருகினில் காகமோ என்னைப் பசியுடன் நோக்க...
யோசிக்காமல் அதனை நோக்கி நீட்டினேன்...!
காகம் பாதி தின்றது. மீதி நான் தின்றேன்...
இருவரின் பசியும் இறந்து போனது...!
தூரத்தில் ஏதோவோரு கப்பல்...
கடவுளின் கருணை என்னை நோக்கிவந்தது...
அது மீட்புக் கப்பல்...!
உடன் இருந்த காக்கை என்னை
நோக்கிக் கேட்டது 'நீதானே மனிதன்...!'
கேட்ட காகம் எங்கோ எழும்பிப் பறக்க....
நிம்மதியுடன் நான் கப்பலை நோக்கி....
மிதக்கத் தொடங்கினேன்...!
Bookmarks