எனக்கு உயிர் அளித்துக்
கொண்டிருக்கிறது நாம்
பழக்கிய நாட்கள்...
இருமனம் இணைந்து
திருமணம் முடிந்த போது கூட
நான் நினைக்கவில்லையே
எமக்காய் ஒரு நீண்ட
அஞ்ஞாதவாசம் காத்துக்கிடப்பதை...
எதிர்காலத்தைத் தேடி
நிகழ்காலத்தைத் தொலைத்து
வாழ்கின்றேன் இங்கு நான்
தனிமையில் உன் நினைவுகளோடு...
முட்கள் மீதான -இந்த
நரக வாழ்க்கையில் இருந்து
உன்னோடு நான் வாழப்போகும்
வசந்த வாழ்க்கைக்காய்
நகர்த்திக் கொண்டிருக்கின்றேன்
கடிகார முட்களை வேகவேகமாய்...
விடியும் ஓவ்வொரு நாட்களும்
நீ என்னை வந்தடைவாய் என்ற
நற்செய்தியைக் கேட்க என் ஓவ்வொரு
அணுக்களும் துடித்துக் கொண்டிருக்கின்றன...
தவிக்கிறேன் அன்பே எதிர்கால
வாழ்வைச் சிந்தித்து நாம் பூண்டிருக்கும்
இந்த வனவாசம் எம் நிகழ்கால வாழ்வை
சுக்குநூறாச் சிதறடித்துவிடுமென...
வனவாசம் கலைத்து உன் வாசல்
தீண்டவே என் மனம் துடிக்கிறது
எதிர்காலம் என்ற கோடு என்னைத்
தடுக்கிறது...
நாளை விடியும் விடியலாவது
என்னிடம் உன்னைச் சேர்க்கட்டும்
கனவுகளோடும் நினைவுகளோடும்
இனியும் என்னால் நகர்த்த முடியாது
கடினமான இந்த வாழ்க்கையை...
(எதிர்கால வாழ்வுக்காய் கணவரைப் பிரிந்து வாழும் தோழியின் வேதனைகள் கண்டு மனம் துடிக்கிறது சீக்கிரம் கணவரோடு என் தோழி சேர்வதற்கு பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே )
Bookmarks