Results 1 to 12 of 12

Thread: ஊர்வலம்

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஊர்வலம்

    இரண்டு ஊர்வலங்களில்
    நான் ஆணாயிருந்தும் அழுதேன்..!

    ஒன்று தாரைத்தப்பட்டையோடு..
    மற்றொன்று மேளதாளத்தோடு..

    முந்தையதில்
    அன்னை பிணமாகிப் போனாள்!
    பிந்தையதில்
    காதலி மணமாகிப் போனாள்!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    ந்த ஆணுடைய சூழ்நிலையை மிக

    ருமையாக சில வரிகளில் கவிதையாய்

    ள்ளிவிட்டு இருக்கிறீர்கள். அருமை நண்பா...
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    என்ன கொடுமை சிவாஜி இது??

    ஊர்வலம் என்று
    உல்லாசமாய் உள்ளெ வந்தால்
    உயிருக்கு உலை வைப்பது போல்
    உருக்கும் ஒரு கவிதை.

    கவிதையில் கரு கனம் இரண்டும் அதிகம். வலிக்கும்.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    சிவா.... அசத்தல் ஆரம்பமாகி அழுமூஞ்சியாக்கிட்டீங்களே... சுருங்க சொல்லியிருக்கீங்க சோகத்த... வாழ்த்துக்கள் நண்பா...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    முன்னையது உங்களை ஊட்டி வளர்த்த உறவு..
    பின்னையது உங்களை ஊட்டி வளர்க்கவிருந்த உறவு...
    இரண்டு பிரிவுகளுமே கொடுமைதான்....
    அதில் அழுகையைக் கட்டுப்படுத்த ஆணாலும் முடியாதுதான்...

    குறுங்கவிதைகள் "நச்" இரகமாக இருந்தாலே படிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். அப்படி அமைய தேர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் முக்கியம்...
    இங்கே உங்கள் கவிதையில் தேர்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் மின்னி கவிதையை ஜொலிக்க வைக்கின்றன...

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சிவா.ஜி!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    ஊர்வலத்தில் உறவுகளை தொலைத்த சேகத்தை கவிதை நன்றாகவே வெளிப்படுத்துகிறது. அன்னையின் மறைவும் காதலியின் பிரிவும் சமமாய் மதிப்பிட தோன்றவில்லை. அன்னையின் பிரிவுதான் அதிக துயரத்தை தரும். (காதலிக்கு திருமணமென்றால் அந்த திருமணத்திலேயே வேறொருத்திக்கு காதல் தூண்டில் போட்டு பிடித்துவிடமாட்டோம்.)
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இரண்டு ஊர்வலங்களில்
    நான் ஆணாயிருந்தும் அழுதேன்..!

    ஒன்று தாரைத்தப்பட்டையோடு..
    மற்றொன்று மேளதாளத்தோடு..

    முந்தையதில்
    அன்னை பிணமாகிப் போனாள்!
    பிந்தையதில்
    காதலி மணமாகிப் போனாள்!

    காதலி மணமாகிப் போனாள்
    ஊர்வலத்தில்
    கண்ணீருடன் காதலன்
    ஆணாய்த்தானா?

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அல்லிராணி View Post
    காதலி மணமாகிப் போனாள்
    ஊர்வலத்தில்
    கண்ணீருடன் காதலன்
    ஆணாய்த்தானா?
    சந்தேகம்தான்...

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    சந்தேகமா
    அவனுக்குத் தேவைப்பட்டது
    Some தேகமா?
    Last edited by அல்லிராணி; 27-09-2007 at 02:11 PM.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஊர்வலம் என்றதும் ஏதோ மண ஊர்வலம், கட்சி ஊர்வலம் என்று கற்பனை செய்து வந்த எனக்கு.... கனமான சோகத்தை மனத்தில் அப்பியது உங்களது கவி சிவா அண்ணா.
    தாயுக்கு பின் தாரம் என்பார்கள்.
    இங்கே தாயும் போகிறாள்... தாரமும் இல்லையென்று ஆகிறாள். எத்தகைய மீளமுடியா துயர் அந்த ஆணுக்கு... அழுகை வராமல் இருக்க அவர் என்ன கல் நெஞ்சு கொண்டவரா??
    மன வலியை உண்டாக்கியது கவிதை..!
    அருமையான வார்த்தைக் கோர்வை... கரு ஆழமானது.
    பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் சிவா அண்ணா.
    Last edited by பூமகள்; 27-09-2007 at 02:15 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அருவத்துடன் போராட
    ஆயுதம் இல்லையெனும்
    ஆற்றாமை கரைக்க
    அழுது தீர்க்கிறானோ?

    முன்செல்லும் பிணத்துக்கு
    பின் செல்லும் மனிதன்

    உள்ளக்கிடக்கையை சொன்ன கவிக்கு
    பரிசாகக் கிடைக்கிறது கரகோசம்.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றிகள் கமலக்கண்ணன்.
    நன்றி குமரன்.பாதிப்பை எழுதும்போது படிப்பவர் உணர்ந்தால் படைத்தவனுக்கு மகிழ்ச்சி.அந்த வகையில் உங்களால் எனக்கு மகிழ்ச்சி.
    நன்றி சுகந்தப்ரியன்.
    மிக்க நன்றி ஓவியன்.மிக அருமையான பின்னூட்டம்.நீங்கள் சொல்வதுபோல சிறிய கவிதைகள் அதிகம் படிக்கப்படுகிறது.
    ஆஹா...வெகு நாட்களுக்குப் பிறகு கவிதைச் சக்ரவர்த்தினி அல்லிராணியின் பின்னுட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.அதுவும் உங்கள் அந்த பஞ்ச் someதேகம் சூப்பர்.மிக்க நன்றி.
    நன்றி ஜே.எம். சரிதான் அன்னையின் இழப்பு ஈடு செய்யமுடியாததுதான். கடைசியில் குறும்பைக்க்காட்டிவிட்டீர்களே(நல்ல அனுபவம் போலிருக்கிறது)
    நன்றி தங்கையே.தாய்க்குபின் தாரம்தான் வாழ்வின் ஆதாரம்...அதுவே இல்லையென்று ஆகும்போது அழத்தானே முடியும்.
    நன்றி அமரன்.மிகவும் ஆழமான பின்னூட்டம்.உங்கள் அழகு தமிழில் படிக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •