நீ உதிர்த்த சொல்லில்
உதிர்ந்ததடி நெஞ்சம்,
ஓரவிழியில்......
உத்திரமாக உதிரச் சொல் படிகங்கள்,
பகல் சுருங்கிய வேகத்தில்
இருள் படர்ந்த இதயத்தில்
நீண்ட இரவுகளின் தாக்குதலில்
துவண்டதடி தூக்கம்!
சேர்த்து சேர்த்து வைத்த
காதல் தேகம்....
காலத்தின் கோலத்தில்
வரை தாண்டிய
விதி வகுத்த சதியின்
சகதியில் புரண்டு புரண்டு அழுகிறதே.....
பார்த்து பார்த்து சிவந்த கண்களில்
ஈரமாக கசியும்
உன் எழில் ஓவிய வண்ணங்கள்,
அவலத்தின் உச்சியில்
காதல் கசிந்து காணாமல் போகிறதே.....
காதலின் காப்பியத்தில்
பழிவாங்கும் படலத்தில்
பரிதாப கதாமாந்தர்களா நாம்?
சுவாசக்குழாயில் காதலே நஞ்சாய்.....
போதுமடி இந்த இறுக்கம்,
இதயம் சுறுங்கி அழுகின்ற வேதனை......
நரகத்தின் வாசலில்
மரணங்களின் சேர்க்கையா?
காதலே...
உன்னைக் காதலித்ததற்காகவா இந்த இதய மரணம்?
Bookmarks