இலைகளைச் சிந்தும்
சாலையோர சோலைகளின்
கிளைகளை தறிக்கின்றனர்
நகர சுத்திகரிப்பாளர்கள்..!?
இலைகளைச் சிந்தும்
சாலையோர சோலைகளின்
கிளைகளை தறிக்கின்றனர்
நகர சுத்திகரிப்பாளர்கள்..!?
அவர்களுக்கு வேலை எளிதாகிவிடும் என்ற காரணத்தினாலேயா. ஆனால் மரங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு இருக்கும் வேலையே இல்லாமல் போய்விடும் என்று நினைத்தார்களா?
நல்ல கவிதை அமரன். தொடருங்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
சாலையோரத்து கிளைகள் மட்டும் தறிக்கப்பட்டாலும்
மரங்கள் விட்டுவைக்கப்பட்டால்.. நலமே..!!
நல்ல கவிதை. பாராட்டுக்கள் அமர் அண்ணா.
நன்றி ஆரென் அண்ணா...நன்றி பூமகள்...நன்றி சாரா.
அலுவலகத்தில் இருந்து தங்ககம் திரும்பும்போது மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றிக்கொண்டு இருந்தனர்..ஊரிலும் இதே போல் செய்வது ஞாபகத்துக்கு வந்தது..அப்போது பிறந்தது இந்தக் கவிதை. நகரத்தை சுத்திகரிப்பதில் இவர்களை விட மரங்களின் பங்கு எத்துணை அதிகம்?...
அப்போது தோன்றிய இன்னொன்று...
தெருவில் இறைந்திருந்த
கண்ணீர் குழைந்த துகள்கள்
யாருக்காக..?
இயற்கை ரசிப்பதாலோ என்னவோ...
அமரனின் வரிகள் இயற்கையாக உள்ளது....
வாழ்த்துக்கள்.. அமரா....
இலையுதிர் காலத்தில் உம் வரிகளை ரசிக்கிறேன்.
நன்றி அறிஞரே!
கவிதை இயற்கையை இரசிக்கக் கற்றுகொடுத்தது...
இப்போ இயற்கை கவிதையை பெற்றுத் தருகிறது..
இரு குறுங்கவியும்
இரு முத்துக்கள் அமர்
வாழ்த்துக்கள்
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இலையகற்ற சோம்பல் பட்டு கிளையகற்றும் பணியாளர்கள்.... மரமகற்றாமல் விட்டார்களே வாழ்க அவர்கள்.
காற்றோடான ஊடலில் ரோமமுதிர்த்த மரங்கள்
சாலையோரங்களில் இலைகளாய்....
இயற்கயை எத்தனைமுறை பாடினாலும்..அத்தனையும் அழகு.
வாழ்த்துக்கள் அமரன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்ல இயற்கை ரசனை...
இலையைப் பெற்றெடுக்கும் கிளைகள்..
சாலைக்கு இடையூறாய்...
இருப்பதால்...
வெட்டப்படுகின்றன..
இடையூறாய் இருக்கும்..
எல்லா களைகளும்,
இந்தக் கிளைகள் போல
அவ்வப்போது வெட்டபட்டால்!!
நாடு சுபிட்சமாகும்...
வெட்டப்பட்ட் விருட்சம் போல...
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks