Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: கு(றை)ழந்தைகள்....!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    கு(றை)ழந்தைகள்....!



    தேவகுமாரன் தானம் கேட்டதால்
    தேகமறுத்து கவச குண்டலமீந்தான்
    அன்றைய கர்ணன்.....

    தேவனே விரும்பி
    எடுத்துக்கொண்டான்
    தேக பாகங்களை
    நான் இன்றைய கர்ணன்...

    ஊறும் எறும்பையும்
    உபத்திரவிக்க கால்களில்லை
    ஆண்டவனுக்கு நன்றி..!

    கடிக்கும் கொசுவையும்
    அடிக்க கைகளில்லை
    ஆண்டவனுக்கு நன்றி...!

    பசித்தால் சோறூட்ட
    பாசமுள்ள கைகளுண்டு
    கழிவுக் கழுவிட
    கருணையுள்ள கரங்களுண்டு!

    எத்தனை வளர்ந்தாலும்(?)
    எப்பவும் குழந்தைதான்,
    அங்கம் சிறிது
    குறைந்த குழந்தைதான்!

    அய்யோபாவமும்,
    பரிதாபப் பார்வையும்
    தேவையில்லை எனக்கு...
    உங்களோடு ஒருவனாய்
    என்னையும் சேர்த்துக்கொள்ளும்
    தோழமை கிடைக்குமா....?
    Last edited by சிவா.ஜி; 05-10-2007 at 07:07 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஐயோ என்ன கொடுமை இது,
    இயற்கையின் மறுபக்கமோ
    பிறந்தவுடன் கள்ளிபால் கொடுக்காமல்
    உறுதியாக* வளர்க்கும் அந்த தாய் பாசம் பாராட்டகுறியது.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இயற்கையின் மறுபக்கம்தான் வாத்தியாரே...ஆனாலும் இதில் ஒரு கொடுமையான விஷயம்...இவன் தன் தாயாலும் நிராகரிக்கப்பட்டவனே....இவர்களைப்போலுள்ளவர்களைப் பாதுகாக்க கிருஷ்ணகிரியில் ஒரு இல்லம் இருக்கிறது.அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மனி அதனை நடத்திவருகிறார்.அந்த இல்லத்துக்கு நானும் போயிருந்தேன்...நம் மக்களிடமும் மனித நேயம் குறையவில்லையென்பதை அங்கு கண்டேன்.நிறையபேர் இவர்களுக்கு உதவ வருகிறார்கள்.இவனைப் போல பலர் அங்குள்ளார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இதில் ஒரு கொடுமையான விஷயம்...இவன் தன் தாயாலும் நிராகரிக்கப்பட்டவனே
    வருத்தமாக தான் இருகிறது. ஆனால் அன்த தாய் தந்தை ஏழைகளாக இருந்தால் அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து பார்த்தால் வேறு மாதிரி தெரியும். இ ந்த குழந்தை அவர்கள் எப்படி வளத்தி சமூகத்தில் புலங்க வைக்க முடியும். அவர்களுக்கு பிறகு யார் இதை பார்த்து கொள்வார்கள். பாவம் என்ன செய்வார்கள் அதனால் இங்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இயற்கையின் மறுபக்கம்தான் வாத்தியாரே...
    இயற்கையை திட்ட மணமில்லை. விலங்குகளில் கூட இது போன்ற ஊனத்துடன் பிறக்கும். அவற்றை பரமாரிக்க முடியாது தாய் விட்டு விட்டு சென்று விடும். பிறகு அந்த குட்டிகள் நரிகளுக்கு இரையாகிவிடும். தாய் எஞ்சிய குட்டிகளை வளர்க்கு கடமையை தொடர்ந்து விடும்.
    இயற்கையின் மிக பெரிய தத்துவம் பிட்டஸ்ட் மஸ்ட் ஓன்லி சர்வைவ்.

    செயற்கையாக வளர்க்க பட்ட நமக்கு நான் சொல்வது கேட்க நாரசமாக இருக்கும். ஆனால் இயற்கை உன்மையாகவே இருக்கும்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மக்களிடமும் மனித நேயம் குறையவில்லையென்பதை அங்கு கண்டேன்.
    மனித நேயத்தை பாராட்டுவதை விட கை எடுத்து கும்பிட வேண்டும்
    Last edited by lolluvathiyar; 24-09-2007 at 07:21 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சிவா அவர்களே...

    வரிகளில் எல்லாம் ஒரு நிறைவு காணப்படுகிறது...

    எத்தனை வளர்ந்தாலும்(?)
    எப்பவும் குழந்தைதான்,
    அங்கம் சிறிது
    குறைந்த குழந்தைதான்!

    மிக மிக ரசிக்க வைத்தது...

    வாழ்த்துக்கள் சிவா....

    இப்படி நிராதரவான குழந்தைகளின் எதிர்காலம் சிரமம்தான் என்றாலும் அவர்களின் வைராக்கியம் நம்மைவிட அதிகமாய் இருக்கும்...

    மனம் கனக்க செய்கிறது...

    தொடருங்கள் சிவா...
    Last edited by ஷீ-நிசி; 24-09-2007 at 07:44 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எத்தேசம் போனாலும் கலங்க வைப்போர்..படைப்பாளிமேல் கோபம் கொள்ள வைப்போர்...படைப்பாளிகளை தீவிரமாக கோபம் கொள்ள வைப்போர்..வளர்ந்த நாடுகள் பலவற்றில் சகல இடங்களிலும் இவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். கொடுப்பவர்களை நினைத்து மகிழ்ச்சியும் பெறுபவர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்று ஒருகணம் தோன்றும்போது தோன்றும் கனமான நிலையும் கலந்து சொல்லொணா உணர்வு நெஞ்சை அடைக்கும். பரிதாபம் மீறி வாழ வழி செய்கின்றனரே என்ற நினைப்பு என்பது மயிலிறகாய் வருடும்...எல்லாத் தேசத்திலும் அவர்களை தோழமையுடன் நோக்கும் நாள் வெகு விரைவில் வரவேண்டும்....அந்த மனப்பாங்கு எல்லோரிடத்திலும் ஓங்க வேண்டும்....எம்மாலும் வாழ முடியும் என்னும் வைராக்கியத்தை அவர்களுள் புகுத்தி வளர்க்க வேண்டும்...
    உருகவைக்கும் கருவை அழகான வார்த்தைகளால் சீவி சிங்காரித்து கவிதையாக தந்த சிவாவுக்கு பாராட்டுக்கள்....

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    இப்படி நிராதரவான குழந்தைகளின் எதிர்காலம் சிரமம்தான் என்றாலும் அவர்களின் வைராக்கியம் நம்மைவிட அதிகமாய் இருக்கும்...

    மனம் கனக்க செய்கிறது...

    தொடருங்கள் சிவா...
    மிக சரியாகச் சொன்னீர்கள் ஷீ..அவர்களின் வைராக்கியம் உண்மையிலேயே ஆச்சர்யப்படுத்துகிறது.அதுதான் அவர்களை மனக்குறையின்றி வாழவும் வைக்கிறது.நன்றி ஷீ-நிசி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ..எல்லாத் தேசத்திலும் அவர்களை தோழமையுடன் நோக்கும் நாள் வெகு விரைவில் வரவேண்டும்....அந்த மனப்பாங்கு எல்லோரிடத்திலும் ஓங்க வேண்டும்.......
    கண்டிப்பாக இந்த மனப்பாங்கு இன்றைய இளைஞர்களிடம் உள்ளது அமரன். வெறும் பொழுதுபோக்கும்,ஊர்சுற்ரலும் மட்டுமல்ல எங்கள் வாழ்க்கை அதையும் தாண்டிய வேறொன்று இருக்கிறது என்று உணர்ந்திருக்கிறார்கள்.
    நன்றி அமரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    மனம் காணத்து போகிறது... படத்துடன் தந்திருக்கிறீர்கள்....
    இன்பமும் துன்பமும் இரண்டற கலந்த உலகிது....!

    வசீகரன்

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by vaseegaran View Post
    மனம் காணத்து போகிறது... படத்துடன் தந்திருக்கிறீர்கள்....
    இன்பமும் துன்பமும் இரண்டற கலந்த உலகிது....!

    வசீகரன்
    கண்டிப்பாக வசீகரன்.இரண்டும் கலந்ததுதான் உலகமென்றாலும் இவர்களின் வாழ்வு.....என்றும் ஒரு கேள்விக்குறிதானே.....?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சபாஷ் சிவா.ஜி அண்ணா.

    ஷீ-நிசி சொல்வது போல வரிகள் அனைத்திலும் ஒரு நிறைவு காணப்படுகிறது. அதேசமயம் கவிதை வரிகளால் வித்தியாசப்படுகிறது... வாழ்த்துக்கள். (கபாலி, வர வர நீங்க சரியாவே விமர்சனம் போடுவதில்லை.... இதெல்லாம் நல்லாயில்லை.... ஆமாம்.)

    இன்றைய கர்ணன்...

    தேகங்களின் ஊனம், ஒரு மன ஊனத்தை மறைத்துவிடலாம். அங்க வீனத்தை? பெரும்பாலான ஊனர்கள் (மன்னிக்க) பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருப்பது மனக்கஷ்டம். ஆனால் ஒருசில மக்களைக் காணுகையில் வியப்பு.. பல உதாரணர்கள் இருக்கிறார்கள். கையில்லையே காலில் ஓவியமிடும் அக்காக்கள், காலின்றி மென்பொருளின் ஆராயும் அண்ணாக்கள், இவ்வளவு ஏன், பீத்தோவனுக்கு அவ்வளவாக காது கேட்காது (சரியாகத் தெரியவில்லை. மறந்துவிட்டது. காது ஊனமா அல்லது மாலைக்கண் நோயா என்று தெரியவில்லை.). எனினும் சிம்பொனி இயற்றவில்லையா? வான் காப் கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அவ்வளவாக காது கேட்காது, ஐன்ஸ்டீனுக்கு மறதி அதிகம்.... இவர்கள் பெரும் பிரபலர்கள். நான் கண்ட வரையில் எத்தனையோ அங்கவீனர்கள் சிறப்பாக வாழ்வதைக் கண்டிருக்கிறேன்...

    ஒவ்வொரு வரிகளும் நிறைவு நிறைவாய் சொல்லுகின்றன. அவர்களின் இயலாமையை அழகாய் அடுக்குகின்றன.

    எத்தனை வளர்ந்தாலும்(?)
    எப்பவும் குழந்தைதான்,
    அங்கம் சிறிது
    குறைந்த குழந்தைதான்!


    வரிகளின் நேர்த்தி கவிதையின் வெற்றி. வெட்டியெறிய வார்த்தைகளின்றி அடக்கமாய் உருக்கிய சிலையாக கவிதை.. வாழ்த்துக்கள் சிவா.ஜி./ கவிதை மட்டுமல்ல. கவி மாந்தனும் பேரழகே!
    Last edited by ஆதவா; 05-10-2007 at 03:24 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அங்கஹீனம் உள்ளவர்களின் தன்னம்பிக்கை என்னை பல சமயங்களில் பிரமிக்க வைத்ததுண்டு.அப்படி தன்னம்பிக்கையோடு வாழ்பவர்கள் ஒருபோதும் பரிதாபம் தேடுவதில்லை,அவர்களுக்குத் தேவை அவர்களையும் தங்களில் ஒருவராக இணைத்துக்கொள்ளும் தோழர்கள்தான்.மிகச்சரியாக விமர்சித்துள்ளீர்கள்.

    கவி மாந்தனும் பேரழகே!
    இந்த ஒற்றை வரியில் தெரிகிறது உங்களின் உயர்ந்த சிந்தனை.நன்றி ஆதவா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •