Last edited by சாம்பவி; 26-09-2007 at 07:53 PM.
..
இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
.
அன்பு சாம்பவி,
அகமகிழ்ந்தேன்.
இங்கு நான் சொற்களைத் தந்ததால் மட்டுமே நான் பாராட்டப்பட வேண்டியவன் அல்ல. பாராட்டுக்கள் எல்லாம் 1944-ஆம் வருடத்திலேயே இவற்றைக் குறித்த தமிழ்மேதை தேவநேயப்பாவணர் அவர்களுக்கே பொருந்தும். இதில் உள்ள சொற்களும் அவருடைய புத்தகத்தில் உள்ளவையே.
நானும் தமிழைப் பொறுத்த வரை ஒரு மாணாக்கனே. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. உங்கள் அரும்பணி தொடர வேண்டும்.
ளகர ழகர வேறுபாடுகள் திரியில் பின்னூட்டம் இடுகையில் எனக்கு அரிய தொகுப்பு என்று எழுதிய இடத்தில் சிறுதடுமாற்றம் ஏற்பட்டது.. அரிய என்பதா இல்லை அறிய என்பதா என்று..!
சிறிது யோசனைக்கு பிறகு சரியாக எழுதிவிட்டாலும் உங்களிடம் சொல்லி அடுத்து 'றகர ரகரச் சொற்கள்' தொகுத்து ஒரு திரி ஆரம்பிக்க சொல்லவேண்டுமென்று எண்ணி வெளியே வந்தால்.. அதன் கீழேயே இந்த திரி அமைந்திருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி..!
தங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி பாரதி அண்ணா..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
அருமையான தொகுப்பு... பகிர்தலுக்கு நன்றி பாரதி அண்ணா.
சாம்பவி சுட்டிய பிழைகள் சரி என்றே எனக்கும் படுகிறது.
கருத்து - கறுத்து
இரண்டும் ஒன்று அல்ல....
கறுத்து என்றால் - கறுப்பான, கறுப்பு நிறமுடைய
கருத்து - ஒரு விசயத்தைப் பற்றிய உங்கள் "கருத்தை"ச் சொல்லுங்கள்... கனிமொழி உருவாக்கிய "கருத்து" அமைப்பு குறிப்பிடத்தக்கது.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
அப்படியே, வல்லினம் எங்கு பயன்படுத்த வேண்டும், மெல்லினம் எங்கு, இடையினம் எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள்!
நன்றி பாரதி அவர்களே!!
ம்ம் தமிழ் அறிய அதுவும் இலக்கணம்..
தொடர்ந்து எழுதுங்க..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
நல்ல உபயோகமான பதிவு.. தாமதாகப் பார்த்தமைக்கு வருந்துகிறேன்..
றகர-ரகத்தில் பயன்படுத்தாத சொல்கள் இன்னும் இருப்பில்(Reserve) நிறைய இருக்கின்றன. காட்டாக
நிறம் - நிரம் ( இந்த வார்த்தையை தனியாக இன்னும் பொருள் கொள்ள ஏதுவான
வார்த்தைகள் வரவில்லை.. ஒரு வினைத்தொகையுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ( நிரம்பிய)
நிறம்ப - ?
சரம் நமக்கு தெரியும் - தொகுத்திருப்பது
சறம்=?
உரம் தெரியும் = உறம்..?
பூரம் - தெரியும் பூறம்=?
இதெல்லாம் கொஞ்சம்.. இப்படிப் பார்க்க பார்க்க தன்னேரில்லாத தமிழில்
இன்னும் பயன்படுத்தவியலா ஆயிரக்கணக்கான வார்த்தைகள்
இருக்க கூடும்..
கேளடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் 3 லட்சம்..
மீதம் எத்தனை லட்சம்.. ? :-)
======
இந்த இழைப் படிக்கையில் ஒரு அரதப்பழசான கடியும் நினைவுக்கு வந்ததை
தவிர்க்க முடியவில்லை
"சார் தகறாருக்கு சின்ன ர போடுறதா பெரிய ற போடுறதா? "
"சின்ன தகராறா இருந்தா சின்ன ரா போடு.. பெரிய தகராறா இருந்த பெரிய றா போடு"
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
இந்த சந்தேகம் எனக்குள்ளும் உண்டு..
கறுப்பு - Black
கருப்பு ??
கருப்பு என்பது கரிய நிறத்தைக் குறிக்காது... ஆனால்... "கருநிறம்" என்று சொல்கிறோம்.. "கறுநிறம்" என்று சொல்வதில்லை..
கருமை... கருநிறம், கருத்த.... ...... எல்லாம் சரி..
கருப்பு ??? - காத்து கருப்பு என்கிறார்களே,. அதற்கு என்ன அர்த்தம்?
தமிழ் லெக்ஸிகன் சொல்வது :
கருப்பு karuppu : (page 760)
கருப்பிணி karuppiṇi
, n. < garbhiṇī. Pregnant woman. See கர்ப்பிணி.
கருப்பு karuppu
, n. < கரு-மை. [T. karuvu.] Famine, dearth, scarcity; பஞ்சம். மழையின்றிப் பசையில் கருப்புவர (சேதுபு. வேதாள. 20).
குழப்பம்தான்....
தீர்த்து வைக்க யாரேனும் வருவார்களா என்ன?
கருப்பு - கர்ப்பிணிக்கு ஈடாய் பொருள் கொள்வது சரிதான் தென்றல்
கரு - கருப்பு- இவை எல்லாம் அப்படி வரக்கூடியதே
கரு - theme..
கரு - Concept - கருப்பொருள்..
பொறுப்பு - கடமை
பொருப்பு - மார்பு
பறவை - உயிரினத்தில் ஒன்று
பரவை - ஊர், பரம் என்பது உலகம்.. அல்லது இடம்
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks