சென்னைத் தமிழ் என்றால் கஸ்மாலம்,இஸ்த்துகின்னு,ஜல்பு,வூண்டண்டா
என்பது தான் என்று அறிவோம்.கொஞ்சம் நல்ல தமிழுக்கும் சென்னைத் தமிழுக்கும் இடைப்பட்ட தமிழும் உண்டு.அது கல்லூரிமாணவ தமிழ்.
பச்சைப்பன் கல்லூரியின் முன்,குறிப்பாக சுவரின் முன் நின்ற சில மாணவர்களின் முன் நம் மன்ற நிருபர்(நான்தான்)பேட்டி எடுக்கிறார்.
நிருபர்;-நான் தமிழ் மன்றத்திலியிருந்து உங்களை பேட்டி எடுக்க வந்துயிருக்கிறேன்.உங்கள் கொள்கை என்ன?எதற்காக இவ்வாறு பெயர் வைத்திருக்கிறீர் என்ற விளக்க முடியுமா?
சம்பத்;-இதோடா ஔவையார் சுடிதார் போட்டு வந்திருக்கு போல...
நிருபர்;-என்னடா கலாய்கிறீங்க
சுந்தர்;-பின்ன என்னக்கா பாருங்க எங்க பசங்க மெர்ஜாயிட்டாங்க.தமில்ல பேசுங்க.
நிருபர்;-அக்காவா
சுந்தர்;-மேடம் மாம் எல்லாம் கூப்பிட மாட்டோம் யாரயிருந்தாலும் யக்காதான்.
நிருபர்;-சரிடா,தமிழ் தமிழ்ன்னீரிங்க பெயர ஏன்டா குருப்ன்னு வைச்சியிருக்கீங்க?
மகேஷ்;-அது தமில் இல்லையா
தனஸ்;-நாங்க வைச்சுருக்கோமில்லை அது தமில்தான்.
நிருபர்;-க்ளாஸூக்கு போகமா இங்க நின்னு என்னடா செய்றீங்க?
விஜி;-க்ளாஸூக்கு போன ப்ராபளத்த எப்படி சால்வ் பண்ணறது
நிருபர்;-ப்ராபளத்த சால்வ் பண்ண லேப்புக்கு,மாத்ஸ் க்ளாஸ்குல்ல போகனும்.இங்க நின்னு எப்படிடா?
கிளி விஜி;-மாம்ஸ் யாரப் பாத்து என்ன கேள்வி கேட்குறாக பாத்தியா?
சுந்தர்;-ஊர் நாட்டுல படிச்சா இப்படித்தான் ஒன்னும் தெரியாது.கோவிக்கதா மச்சி.பாவம் தெரியாமத்தான கேட்குறங்க.நீ சொல்லு மாம்ஸ்
நெட்ட சங்கர்;-வர ரூட்ல மத்த காலேஜூ பசங்க மாப்பு,கெத்து,பிலிமு காட்டிட்டு வந்தா நாங்க சும்மாவா யிருக்க முடியும்.அது என்னன்னு பார்க்க தாவல.
இடையிடையே தலை நீ சொல்லவே இல்லை.நீ கேட்கவே இல்லை என்ற
வசனத்தை எங்கு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Bookmarks