Results 1 to 7 of 7

Thread: சொந்தங்கள் சேராது

                  
   
   
  1. #1
    இளையவர்
    Join Date
    14 Sep 2007
    Posts
    52
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0

    சொந்தங்கள் சேராது

    கவிதைகளை கண்ணுற்றேன்
    வரிவரியாய் வாசித்தேன்

    வனப்புள்ள வாசகங்கள்
    தித்தித்த திகட்டல்கள்

    அத்துனையும் அருமைதான்
    ஆனாலும் ஒரு ஏக்கம்

    என்னத்த நான்
    சொல்லுவது
    சொல்லுவதை சொல்லிவிட்டால்
    சொந்தங்கள் சேராது!

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by thulithuliyaa View Post
    என்னத்த நான்
    சொல்லுவது
    சொல்லுவதை சொல்லிவிட்டால்
    சொந்தங்கள் சேராது!
    என்னத்த சொல்லி என்னத்த பண்ணி.... என்பது போல் உங்கள் வரிகளில் ஒரு ஏக்கம் தெரிகிறது...
    அணைத்துவிடுங்கள் அனைத்தையும். ஏக்கங்கள் அணைந்துவிடும். பாராட்டுக்கள் துளி...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    துளித்துளியாய் உங்களின் ஏக்கம் மேலோங்கியிருப்பது தெரிகிறது.
    சொல்லுவதைச் சொல்லாவிட்டாலும் சொந்தங்கள் சேராது சகோதரரே..!
    உணர்வுப் பகிர்தல் மூலமே சொந்தங்கள் கிடைக்கும்.
    தொடர்ந்து எழுதிப் பகிருங்கள்.
    வாழ்த்துக்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முள்ளும் மலரும் சேர்ந்தது சொந்தம். பகிரல் முள்ளை தோற்றுவிக்கும் எனும் தடங்கலே முள்ளாகும் நிகழ்தகவு அதிகம். பரிவர்த்தனை சொந்தங்களின் பிணைப்புக்கு ஆதாரம் என்பது அப்பட்டமான உண்மை. தொடருங்கள் உங்கள் விருந்தை.
    Last edited by அமரன்; 21-09-2007 at 04:01 PM.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    மருந்து கசக்கத்தான் செய்யும். நோய் தீர வேண்டுமானால் நாம் கொடுத்துத்தானே ஆக வேண்டும். நாம் சரியென்று நினைத்ததை சொல்லித்தான் தீர வேண்டும். அதிலொன்றும் தப்பில்லை. சொல்வதை நீங்கள் சொல்லுங்கள். அப்படி விலகினாலும் காலம் கடந்த பின் உணர்ந்த சொந்தம் வருந்தும். மீண்டும் உங்களோடு உறவாடும்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    அர்த்தமுள்ள வரிகள்..
    உங்கள் ஏக்கங்கள் தீரும் நண்பரே...
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அடைத்து வைக்கும் ஏக்கங்கள் ஆபத்தானவை.பகிரப்பட்டால் மனம் லேசாகும்,ஜே.எம்.அவர்கள் சொன்னதைப் போல கசப்புமருந்தானாலும் கொடுத்துத்தானே ஆக வேண்டும்.உணர வைக்கும் வரிகள்.வாழ்த்துக்கள் நன்பரே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •