கவிதைகளை கண்ணுற்றேன்
வரிவரியாய் வாசித்தேன்
வனப்புள்ள வாசகங்கள்
தித்தித்த திகட்டல்கள்
அத்துனையும் அருமைதான்
ஆனாலும் ஒரு ஏக்கம்
என்னத்த நான்
சொல்லுவது
சொல்லுவதை சொல்லிவிட்டால்
சொந்தங்கள் சேராது!
கவிதைகளை கண்ணுற்றேன்
வரிவரியாய் வாசித்தேன்
வனப்புள்ள வாசகங்கள்
தித்தித்த திகட்டல்கள்
அத்துனையும் அருமைதான்
ஆனாலும் ஒரு ஏக்கம்
என்னத்த நான்
சொல்லுவது
சொல்லுவதை சொல்லிவிட்டால்
சொந்தங்கள் சேராது!
துளித்துளியாய் உங்களின் ஏக்கம் மேலோங்கியிருப்பது தெரிகிறது.
சொல்லுவதைச் சொல்லாவிட்டாலும் சொந்தங்கள் சேராது சகோதரரே..!
உணர்வுப் பகிர்தல் மூலமே சொந்தங்கள் கிடைக்கும்.
தொடர்ந்து எழுதிப் பகிருங்கள்.
வாழ்த்துக்கள்.
முள்ளும் மலரும் சேர்ந்தது சொந்தம். பகிரல் முள்ளை தோற்றுவிக்கும் எனும் தடங்கலே முள்ளாகும் நிகழ்தகவு அதிகம். பரிவர்த்தனை சொந்தங்களின் பிணைப்புக்கு ஆதாரம் என்பது அப்பட்டமான உண்மை. தொடருங்கள் உங்கள் விருந்தை.
Last edited by அமரன்; 21-09-2007 at 04:01 PM.
மருந்து கசக்கத்தான் செய்யும். நோய் தீர வேண்டுமானால் நாம் கொடுத்துத்தானே ஆக வேண்டும். நாம் சரியென்று நினைத்ததை சொல்லித்தான் தீர வேண்டும். அதிலொன்றும் தப்பில்லை. சொல்வதை நீங்கள் சொல்லுங்கள். அப்படி விலகினாலும் காலம் கடந்த பின் உணர்ந்த சொந்தம் வருந்தும். மீண்டும் உங்களோடு உறவாடும்.
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
அர்த்தமுள்ள வரிகள்..
உங்கள் ஏக்கங்கள் தீரும் நண்பரே...
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
அடைத்து வைக்கும் ஏக்கங்கள் ஆபத்தானவை.பகிரப்பட்டால் மனம் லேசாகும்,ஜே.எம்.அவர்கள் சொன்னதைப் போல கசப்புமருந்தானாலும் கொடுத்துத்தானே ஆக வேண்டும்.உணர வைக்கும் வரிகள்.வாழ்த்துக்கள் நன்பரே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks