Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: புதுக்குடி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17

    புதுக்குடி

    1980களில் ஆண்டு விடுமுறை என்றால் தாத்தா வீட்டிற்கு தான். மன்னார்குடியிலிருந்து திருமக்கோட்டை வரை உள்ளூர் பேருந்தில் சென்று பிறகு மூன்று கிலோமீட்டர் நடந்து சென்றால் புதுக்குடியை அடையலாம். இப்போது பஸ் வந்துவிட்டதாக கேள்வி.

    ஒவ்வொருவரும் பம்பாய், தில்லி, அசாம், மற்றும் பல மாநிலங்களிலிருந்து எங்கள் உறவுகள் அனைவரும் வந்து சேர ஒரு பெரிய கூட்டமே சேர்ந்துவிடும்.

    நான்கு வீடுகள் சேர்ந்த ஒரு தெரு. நான்கும் பெரிய வீடுகள். ஓட்டு வீடுகள். எதிரே வலப்புறம் சிறிய குளம். அதில் தான் பாத்திரம் கழுவுது மற்றம் வீட்டு வேலைக்கான நீர். இடது புறம் பெரிய தென்னந்தோப்பு. சில மாமரங்களும் கொய்யா மரங்களும்.

    தெருவின் வலது கோடிக்கு சென்றால் ஒரு சிறிய பிள்ளையார் கோவில், இன்னொரு தென்னந்தோப்பு. ஒரு பெரிய குளம். அதில் தான் ஊர் மக்கள் குளிப்பது.

    இப்படியாக பசுமையான ஊர். அருகில் வயல் வெளிகள்.

    சில நேரம் பஸ் இரவில் திருமக்கோட்டை வந்து சேர்ந்தால் அவ்வளவுதான். ஏன்டாப்பா விடுமுறைக்கு வந்தோம் என்று ஆகிவிடும். காரணம் இரண்டு புறமும் வயல்வெளிகள். கும்மிருட்டு. மெல்லிய நிலவொளி. நான் சகோதர சகோதரிகள் மாமா வழிநடத்துதலில் ஒற்றையடியில் இரண்டு வயல்களுக்கு நடுவில் இருக்கும் வரப்பில் நடந்து செல்லவேண்டும். வழிதெரியாமல் தடுமாறி கால் வளுக்கு வயலில் கால் வைத்தால் மாமா மொடேர் என்று ஒரு அடி கொடுப்பார். ஆனால் அந்த கஷ்டம் எல்லாம் போய் சேரும் வரைக்கும் தான். அப்புறம் விடுமுறையில் புதுக்குடியில் கும்மாளமே கும்மாளம் தான்.

    நான்கு வீடுகளில் கடைசி வீடு ஓட்டை வீடு. பலகாலம் பயன்படுத்தாமல் விட்டுபோனது. அதில் ஒரு பழைய மில்லுவண்டி இருக்கும். நாங்கள் விளையாடுவதற்காகவே விட்டுப்போனது போல. அதற்கு வலதுபக்கம் இருக்கும் வீடு அமைச்சார் வீடு என்பார்கள். இந்த வீட்டில் தான் தாத்தாவை ஊர் மக்கள் பார்க்க வந்தாலோ அல்லது பெரிய மனிதர்கள் வந்தாலோ சந்திப்புகள் நடக்கும். அதுமட்டும் அல்ல, எங்கள் தாத்தா வீட்டு அனைத்து விசேஷங்களும் கனஜோராக நடக்கும். வெளியே பெரிய பெரிய திண்ணைகள். அதில் தான் மேளக்கச்சேரியே நடக்கும்.

    அதற்கு வலதுபுறத்தில் இருக்கும் வீட்டில் தான் தாத்தா, பாட்டி, சித்தி, மாமாக்கள் வசித்தனர். எங்கள் பெரிய பாட்டியும் இருந்தார். அப்போதே அவருக்கு வயது 95 தாண்டி இருக்கும்.

    அதற்கு வலதுபுறத்தில் இருக்கும் வீட்டில் தான் தங்கையன் குடும்பத்தினர். எங்கள் தாத்தாவின் பணியாள், மற்றும் எல்லாமே என்று சொல்லலாம்.

    வீட்டில் விசேஷம் என்றால் தெரு முழுவதும் கீற்றுப்பந்தல் இடவேண்டும் என்று உத்தரவிடுவார் தாத்தா. உடனே தங்கையன் உள்ளூர் இரண்டு மூன்று ஆட்களை ஏற்பாடு செய்வார். பல வேலைகளை தனியாகவே அவர் செய்வார். ஆறடிக்கு மேல் உயரம். ஆஜானபாகுவான உடல். கடுமையான உழைப்பாளி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது இருவருமே சிங்கப்பூரில் இருப்பதாக கேள்வி.

    முதலி் ஏதிரே இருக்கும் தோப்பில் இருக்கும் தென்னை மரங்களில் ஏறி பச்சை கீற்றுகளை வெட்டி சாய்பபார். பிறகு அதனை ஏதிரே இருந்த குளத்தில் சில நாட்கள் ஊற வைப்பார். அவை பழுத்த நிறம் ஆகும் வரையில். பிறகு பாளைகளை வெட்டி அதனை தண்ணியில் ஊற வைப்பார். அது சிறிது நாட்களில் காப்பி கலரில் ஆகும். அதனை எடுத்து நீள நீளமாக வெட்டுவார். அவை கயிறு போல தயாராகிவிடும்.

    சில நாட்களில் மூங்கில் கழிகளும் வர சுமார் 2-3 பேர் சேர்ந்தே தெரு முழுவதும் பந்தலிடும் காட்சி பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். கடப்பாறை கொண்டு குழிகள் தோண்டி, கழிகளை நட்டு பிறகு பாளை கயிறுகளால் கீற்றுகளை முடித்து, சாதாரண கயிறுகளால் மூங்கிலுடம் கட்டி, மின்சாரம் மிகவும் குறைவாக அந்த கிராமமும் ஒரு ஏஸி திருமண ஹால் போல ஆக்கிவிடுவார்கள்.

    தொடரும்..
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    தங்கையா பிள்ளைங்கெல்லாம் வடநாட்டுலேர்ந்து வந்திருக்காங்க நல்லா கவனிச்சிக்கோ என்பார். அப்புறம் என்ன இளநீர் மழையாக கொட்டும். என் அம்மாவும் பெரிய மாமாவும் சிறிய வயதில் யார் எத்தனை வேகமாக தேங்காய் உரிக்கிறார்கள் என்று போட்டியே நடக்குமாம். ஒரு கடப்பாறையை செங்குத்தாக நட்ட வைத்து, முனையை நன்றாக கூறாக்கி மடமடவென்று உரித்து தள்ளுவார்கள்.

    பிறகு கையில் இளநீரை எடுத்து நன்றாக பந்தை போல உருட்டி அரிவாளால் சடாரென்று வெட்டி சட்டென்று ஒரு ஓட்டை போட்டு கொடுப்பார். இளநீர் பீச்சியடிக்கும். பிறகு தென்னைகீற்றிலிருந்து ஒரு இலையை எடுத்து அதன் மீது நீளமாக வைத்து அதை கவிழ்த்து குடிப்போம்.

    நாங்கள் சிறுவர்கள் சட்டை மீது போட்டுக் கொண்டால் மாமா செய்முறை விளக்கம் வேறு செய்து காட்டுவார். ஒரே குதுகுலம் தான்.

    தேங்காய எண்ணெய் எடுப்பதற்காக வீட்டின் முற்றத்தில் வெட்டிய கொப்பறைகளை காயவைப்பார்கள். நாங்கள் அதை எடுத்துவிடாமல் இருக்க சிலர் காவல் வேறு. அதையும் தாண்டி உள்ளே நுழைந்து லவுட்டிக் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு திண்ணைக்கு கீழ் உட்கார்ந்து அங்கேயே தேங்காய் கொப்பறை டிஃப்ன் வேறு.

    அதுமட்டுமா செய்யாத கூத்தே இல்லை. பம்பாயிலிருந்து வந்த என் மாமா பையன் மிகவும் சுட்டி. ஒரு நாள் நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆட்டை பிடித்து பால் கறக்கலாம் என்று திட்டமிட்டோம். யோசனை சுட்டி பையன் ஆனந்த் தான். அதுபோலவே எதிரே இருந்த தோப்பில் நுழைந்து ஒரு ஆட்டை பிடித்து வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த டம்ப்ளரை மடுவில் கீழே நாங்கள் பிடித்துக் கொள்ள ஆனந்த் மடியை பிடித்து பால் கறக்க முயல மிரண்டு போன அந்த ஆடு ஓங்கி ஒரு உதை கொடுக்க அவன் தலையில் நல்ல அடி, நாங்கள் எல்லாம் அடிச்சோம் பிடிச்சோம் என்று நாலு புறமும் ஓடினாம். வீட்டில் சித்தி, அத்தை மாமா அனைவரும் என்ன ரத்தம் தலையில் என்று அவனை கேட்க திருட்டு முழி முழிப்போம்.

    தொடரும்....
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...' தொடருங்கள் லியோ உங்கள் ரசனையான பழைய நினைவுகளை...!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மோகன் விடுமுறையில் வேரினைத் தேடிப் போன உங்கள் ஞாபகங்களை எங்களோடு பகிர்ந்து கொள்வது மிகிழ்ச்சி...
    படிக்க படிக்க என்னையும் புதுக்குடிக்கு கொண்டு செல்கின்றது உங்கள் எழுத்துப் பிரவாகம் - பாராட்டுக்கள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    சினிமா பார்க்க வேண்டும் என்றால் கூட்டத்தோடு மாட்டு வண்டியில் கிளம்புவோம். திருமக்கோட்டையில் அப்போது ஒரு திறந்த வெளி தியேட்டர் இருந்தது. மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே.

    முதலில் தரை டிக்கெட், பிறகு பெஞ்ச், பிறகு நாற்காலி.

    பெரியவர்கள் மட்டும் நாற்காலி டிக்கெட் வாங்கி அமர சிறுவர் பட்டாளம் தரை டிக்கெட்டுதான். மணலி்ல் கோவில் கட்டி விளையாடும் அளவிற்கு நேரம் கிடைக்கும்.

    ஒரு முறை நாங்கள் படம் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது வண்டி குடை சாய எல்லோரும் வயல்வெளிகளில் விழ ஒரே களேபரம் தான். பிறகென்ன நடைபயணம் தான். மெல்லிய நிலவொளியில் நடைபயணம் அருமையாக இருக்கும், அதுவும் அரட்டை கச்சேரியுடன்.

    மாடுகளை விரைவாக ஓட்ட தங்கையனிடம் ஒரு கம்பின் அடிபுறத்தில் திருப்பி சொருகப்பட்ட ஆணி இருக்கும். அதால் மாட்டின் வயிற்று பின்பகுதியில் குத்துவார். ரத்தம் வழியும். எங்களுக்கு பார்க்க பாவமாக இருக்கும். அங்கிள் வேண்டாம் அங்கிள் மெதுவா போனால் பரவாயில்லை நீங்க மாட்டை அடிக்க வேண்டாம் என்போம். அவர் அதையெல்லாம் சட்டை செய்ய மாட்டார்.

    குளத்தில் குளிக்க எப்போதுமே சிறுவர்களுக்கு தடை. தனியாக போனால் உதை தான். அதனால் மாமாக்காள் சித்தப்பாக்கள் யாராவது கூட வந்தால் தான் குளக்குளியல். கனஜோராக இருக்கும்.
    பெரியவர்கள் குளத்தின் நடுவரையில் சென்று சாகசம் காட்ட, அருகில் இருக்கும் சிமென்ட் கைப்பிடி சுவரிலிருந்து டைவ் அடிப்பார்கள். சிலர் தலைகீழாக மிதந்து ரகளை செய்வார்கள். தங்கையன் அவர்களின் இரு பிள்ளைகள் தான் எங்களுக்கு உள்ளூர் கைடு.

    குளத்தின் ஓரத்தில் இருக்கும் களிமண்ணை எடுத்து தாத்தாவிடம் இருக்கும் ரேடியோ, டேபிள் பேஃன் முதலானவற்றை செய்து காட்டுவான். நாங்கள் ஆர்வமாக மலைப்புடன் அவனை பார்ப்போம்.

    தென்னை குரும்பைகளை தேர்ந்தெடுத்து, அதன் ஓரத்தில் ஈர்குச்சியை சொருகி வேகமாக சுற்றி தூக்கி எறிந்து விளையாடுவோம். எங்களால் முடிந்த மிசைல்.

    நான் கிறிஸ்துவ பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் சிறிய சிகப்பு பைபிள் புத்தகம் எப்போதும் என்னிடம் இருக்கும். கிராமத்தில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் பைபிளின் வசனங்களை படித்து காட்டுவேன். அவர்களுக்கு ஒன்றும் புரியாது. எனக்கு ஒன்றும் புரியாது. ஆனால் உடம்பு சரியாகிவிடும் என்று சொல்லி வருவேன். அவர்களும் பெரிய வீட்டு புள்ளைகள் கெட்டிக்கார பிள்ளைகள் தான் இங்கிலீஷ் எல்லாம் பேசுது என்று புகழ்வார்கள்.

    திருட்டுத்தனமாக கள்ளு குடித்த கதையும் சொல்கிறேன்.

    தொடரும்.....
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    நானும் தஞ்சாவூர் காரன் மோகன். உங்களது பதிவு, எனது இளமைக்காலங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. எழுதுங்கள்..
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    மோகன் சொல்வது அவரது கதை மட்டுமல்ல. நம் வாழ்க்கை கதையும்கூட....! தண்டவாளத்தில் இரும்பை போட்டால் காந்தமாக மாறிவிடும் கதை, பனங்காயில் மாட்டுவண்டி செய்த கதை, பனைஓலையில் காற்றாடி செய்த கதை, நோட்டுப்புத்தகத்தில் பட்டம் செய்து பறக்கவிட்ட கதை, வாத்தியாரின் இருக்கையில் முள் வைத்த கதை எல்லாம் இனிமேல் வருமென்று நினைக்கிறேன்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அருமையா ஆரம்பம் மோகன். கிராமத்து விசிட் அனுபவங்களை எழுதுவதே ஒரு தனி குசிதான். கிராமத்தில் வளர்ந்து பழக்கபட்ட எனக்கு உங்கள் பதிவை படிக்க ஆனந்தமாய் இருகிறது. என் பிள்ளைகளை கூட்டி சொல்லும்போது அவர்கள் மிகவும் சந்தோசபடுகிறார்கள். ஒரே கவலை எங்கள் ஊர் குலத்தில் தன்னீர் இல்லை.

    Quote Originally Posted by leomohan View Post
    மாடுகளை விரைவாக ஓட்ட தங்கையனிடம் ஒரு கம்பின் அடிபுறத்தில் திருப்பி சொருகப்பட்ட ஆணி இருக்கும். அதால் மாட்டின் வயிற்று பின்பகுதியில் குத்துவார். ரத்தம் வழியும்.
    இது தவறான பழக்கம். இப்படி செய்ய தேவையில்லை. எனக்கு மாட்டு வண்டி நன்றாக ஓட்ட தெரியும். அப்படி எல்லாம் குத்த வேண்டியதில்லை. ஆனால் வேகமாக ஓட்டுவேன்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மலரும் நினைவுகள் என்பதே...நம் இன்றைய குழப்பமான மனதை ஓவராலிங் செய்வதுபோலத்தான். இந்த பதிவைப் படித்ததும் அந்த வினாடியிலேயே நானும் என் பழைய காலங்களுக்கு பயணப்படுவதை நிறுத்த முடியவில்லை.நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்பதால் அந்த கிராமங்களின் காட்சிகளை மனதால் உணர முடிகிறது.தொடருங்கள் மோகன்.வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    தங்கையன் வீட்டில் ஒரு நாள் புதிதாக இறக்கப்பட்ட கள் கொண்டு வந்து வைத்திருக்க அவருடைய மகனும் நாங்கள் வீட்டிற்குள் நுழைந்தோம். அவருடைய மகன் பெயர் சுரேஷ் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை. அவன் எங்களை பார்த்து கள் குடிச்சிருக்கியா என்று கேட்க, அது என்னது என்று அப்பாவியாக நாங்கள் கேட்க, அது மோர் மாதிரி இருக்கும் என்று எடுத்து எங்கள் வாயில் ஊற்ற சற்று நேரத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. வீட்டு பக்கும் போகாமல் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்தோம்.

    அந்த நான்கு வீடுகளின் தென்கோடியில் நான்கு சிமெண்ட் தொட்டிகள் இருக்கும். அவற்றில் மாடுகளுக்கு தீவனம் போட்டு வைப்பார்கள். வீட்டின் பின்புறம் தான் மாட்டுத் தொழுவம்.

    அந்த தொட்டிகளுக்கு எதிரில் ஒரு குட்டிச் சுவர். பூச்சு முழுவதும் போய், செங்கற்கள் இளித்துக் கொண்டிருக்கும்.

    நாங்கள் ஊர் பிள்ளைகளுடன் இரண்டு கோஷ்டியாக பிரிந்து 5 புளியங்கொட்டைகள் எடுத்துக் கொண்டு விளையாடுவோம். அதாவது ஒரு கோஷ்டி அந்த சுவற்றில் 5 கொட்டைகளை ஒளித்து வைக்க வேண்டும். இன்னொரு கோஷ்டி கண்டு பிடிக்க வேண்டும். பல மணி நேரம் விளையாடிக் கொண்டிருப்போம். வீட்டில் இருந்து சாப்பாட்டிற்கு அழைப்பு வரும் வரை.

    வீட்டில் பெரிய கூட்டம் என்றால் பாட்டிக்கும் சித்திகளுக்கும் வேலை செய்து மாளாது. பத்து பாத்திரம் சுத்தம் செய்யும் வேலையை குறைக்க தாமரை இலையில் தான் சாப்பாடு. எங்கள் கூட்டத்தில் பெரியவனாக இருக்கும் யாராவது பொறுப்பேற்ற குளிக்கும் குளத்திற்கு சென்று தாமரை இலைகளை பறித்து வர வேண்டும். அந்த குளத்தை நாங்கள் தாமரை குளம் என்று சொல்வோம்.

    இலைகளை தண்ணீர் போட்டு சுத்தம் செய்து ஆர்வமாக உட்காருவோம். காரணம் - சுட சுட எண்ணெய் ஊற்றும் போது அந்த தாமரை இலையின் நடுவில் கொப்பளிக்கும். அதை பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

    சாப்பாடு முடித்துவிட்டு ஹாக்கி மைதானம் போல இருக்கும் திண்ணையில் படுத்து உறங்குவோம். பாய், தலைகாணி இருக்கிறதோ இல்லையோ வெறும் இயற்கை காற்றை மட்டும் ஆதாரமாக கொண்டு தூங்குவோம்.

    தொடரும்...
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கிராமத்து சூழலிலே தான்
    எத்துனை ரம்மியம்...
    எத்துனை ஆனந்தம்...
    அசராமல் அனுபவித்துள்ளேன்...
    மீள இப்போது
    உங்கள் கட்டுரையிலும்...

    தொடருங்கள் மோகன், தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் நாம்......
    Last edited by ஓவியன்; 22-09-2007 at 02:23 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு மோகன்,

    இத்திரியில் உள்ளவற்றை மிகவும் இரசித்து படித்து வருகிறேன். நினைவு கூறல்களை வாசிப்பது என்றாலே அலாதி இன்பம்தான். கடந்த காலம் கற்பனையில் வாழ்ந்த சொர்க்கலோகம் போலத்தான் பெரும்பாலோனோரின் வாழ்க்கையில் இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    Quote Originally Posted by leomohan View Post
    தங்கையன் வீட்டில் ஒரு நாள் புதிதாக இறக்கப்பட்ட கள் கொண்டு வந்து வைத்திருக்க அவருடைய மகனும் நாங்கள் வீட்டிற்குள் நுழைந்தோம். அவருடைய மகன் பெயர் சுரேஷ் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை. அவன் எங்களை பார்த்து கள் குடிச்சிருக்கியா என்று கேட்க, அது என்னது என்று அப்பாவியாக நாங்கள் கேட்க, அது மோர் மாதிரி இருக்கும் என்று எடுத்து எங்கள் வாயில் ஊற்ற சற்று நேரத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
    இதைப்படித்த பின்னர் தலைப்பிற்கும் இதற்கும் உள்ள தொடர்புபுரிந்தது...!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •