பிற ந்தநாள் 2007
புவியில் பிறந்திட்ட இன்னாள்
பூவுலகம் கண்ட பொன்னாள்
பெற்றெடுத்த அன்னைக்கும்
வளர்த்திட்ட தந்தைக்கும்
வந்தனங்கள் சொல்லும் நன்னாள்
இத்தனை வருடங்கள்
இனிதே காத்திட்ட
இறைவனை இன்றும், என்றும்
இதயத்தில் போற்றி துதிக்கிறேன்.
ஆரம்பவகுப்பில் ஆர்வம் தந்த ஆசானையும்
நடுத்தரவகுப்பில் வித்திட்ட வித்தகரையும்
மேல்வகுப்பில் கொட்டிட்ட மோலாளரையும்
கல்லூரியில் கற்பித்த பேராசிரியரையும்
தொழில் கல்விபழக்கிட்ட தோழரையும்
ஒரு முறை உள்மனதில் நினைக்கின்றேன்
சாதித்திட துடித்திட்ட இதயதிற்கு
சவுரியங்கள் செய்த உள்ளங்கள்
சரிந்திடும் பொழுது சறுக்காது
கைதந்த நெஞ்சங்கள்
நினைக்கிறேன் நன்றியை உதிர்க்கிறேன்.
பறந்து வந்த தருணங்கள்
தனிமை உணர்ந்த நேரங்கள்
தவிப்புகள் தவிர்த்திட
இங்கே புகுந்தேன்....
மலர்ந்தது புது உறவு
விரிந்தது இதய உணர்வு
இன்னும் இனித்திடும் பதிப்பு
உண்ணும் போதும் உறைத்திடும் கனவு
வாழ்த்திடும் உள்ளங்கள்
கண்ணில் கண்டதில்லை
வாய்விட்டு பேசியதில்லை
உள்ளஉணர்வுகள் பதிவாய்
நன்றிகள் என் இணைய
இதயஉறவுகள் அனைவருக்கும்!!
Bookmarks