மழை உனக்கு பிடிக்கும் என்பதால்
உடன் நானும் நனைவேன்....
உடல் நானைக்கும் திவலைகள்
என் உள் மனதினையும் நனைக்காமல்
போவதில்லை... சிறகு விரிக்கிறது
ஒதுங்கி நிற்கையில்
என் தலை ஆட்டி உன் முகத்தில் நீர் சிதற்றி
நீ சிலிர்ப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை...!
என்னை குனிய செய்து
கேசம் பற்றி இழுத்து
தலை துவட்டுகையில் உன் மார்பில் சாய்ந்து
உன் இதய வேகத்தை
உணராமல் இருக்க முடியவில்லை...!
மழை பொழிந்தால் நனைவது
என் நகரம் மட்டுமல்ல
நானும் தான்...!
தென்றல் வரும் பாதையில் காத்திருந்தேன்...
வசீகரன்
Bookmarks