Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: வலி'கள்'

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    வலி'கள்'

    பூக்களைப் பறிக்காதீர்
    பொறிக்கப்பட்ட ஏட்டை
    முட்டி வீழ்த்தும் வேகத்தில்
    பூவனச் செடி...தலை
    கொய்யவந்த பிஞ்சு விரலை
    கட்டிய கை கண்டு...!
    ***************************************
    இடுங்கிய மாங்கனியின்
    விழியில் ஒரு துளி
    அணில்பிள்ளை நகக்கீறல்
    கிட்டாத சோகமோ...!
    *******************************
    அழுகிய தக்காளி
    வரைந்தது ஈரஓவியம்
    கொவ்வை அலகு
    கொத்தாத தாபமோ..!
    *******************************
    வெடித்த முட்டை
    இரத்தம் சிந்துகிறது
    குஞ்சு அலகு
    கொஞ்சல் நினைவில்...!
    ***********************************
    பறவைகள் பலவால்
    சல்லடையான மூங்கில்காடு
    காய்ந்து கிடக்கிறது
    கோகிலத்தின் மூச்சுக்காற்றில்
    கோகுலம் ஆவதற்கு...!
    ***********************************


    ~~அமரன்
    Last edited by அமரன்; 11-09-2007 at 12:09 PM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    பறவைகள் பலவால்
    சல்லடையான மூங்கில்காடு
    காய்ந்து கிடக்கிறது
    கோகிலத்தின் மூச்சுக்காற்றில்
    கோகுலம் ஆவதற்கு...!
    இதுவன்றோ அமரனின் கவிக் கோகுலம்..

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அமரன் அசத்தலான ஒரு புதுப் பரிமானத்தில்.....வாவ்....அருமை.
    பிஞ்சுக்கைகளில் படரும் பாக்கியத்தைத் தட்டிப் பறிக்கும் தாயின் கைகள் நோக்கி மலரின் ஆவேசம்.
    சூம்பிய மாவின் மனவேதனை,அழுகிய தக்காளியின் ஆதங்க கண்ணீர்,உடைபட்ட முட்டையின் அடைபட்ட ஆசை,காய்ந்த மூங்கில் காட்டின் காணம் கேட்பதற்கான காத்திருப்பு...அடடா அருமை அமரன்.மனமார்ந்த பாராட்டுக்கள்.
    Last edited by சிவா.ஜி; 11-09-2007 at 01:28 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வெடித்த முட்டை
    இரத்தம் சிந்துகிறது
    குஞ்சு அலகு
    கொஞ்சல் நினைவில்...!

    ரொம்ப தூரம் போய்டீங்க அமரரே....என்ன எங்காவது காட்டுக்கு பொய்டு வந்திங்களா..?மிக அருமையாக இருக்கிறது அத்தனையும்...வாழ்த்துக்கள்...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    இயற்கையின் மடியில்
    இளமையாய் தவழ்த தாங்களின்
    இந்த கவிதை அருமை அமரன்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by jpl View Post
    இதுவன்றோ அமரனின் கவிக் கோகுலம்..
    நன்றி புஸ்பலதா அவர்களே. உங்கள் தில் பெற்ற முதல் வாழ்த்தில் உள்ளம் புளகாங்கிதம் கொள்கிறது.
    Last edited by அமரன்; 11-09-2007 at 08:55 PM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அமரன் அசத்தலான ஒரு புதுப் பரிமானத்தில்.....வாவ்....அருமை.
    பிஞ்சுக்கைகளில் படரும் பாக்கியத்தைத் தட்டிப் பறிக்கும் தாயின் கைகள் நோக்கி மலரின் ஆவேசம்.
    சூம்பிய மாவின் மனவேதனை,அழுகிய தக்காளியின் ஆதங்க கண்ணீர்,உடைபட்ட முட்டையின் அடைபட்ட ஆசை,காய்ந்த மூங்கில் காட்டின் காணம் கேட்பதற்கான காத்திருப்பு...அடடா அருமை அமரன்.மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அழகான பின்னூட்டம். நினைத்ததை எழுதுவது பெரிதல்ல. நினைத்து எழுதியதை விளங்கி விளம்புவது மிகப்பெரிது. நன்றி கலந்த பாராட்டுக்கள் சிவா.
    Last edited by அமரன்; 11-09-2007 at 08:55 PM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    ரொம்ப தூரம் போய்டீங்க அமரரே....என்ன எங்காவது காட்டுக்கு பொய்டு வந்திங்களா..?மிக அருமையாக இருக்கிறது அத்தனையும்...வாழ்த்துக்கள்...!
    ஆமாங்க சுகந்தா...ஜெர்மன் சாலை ஓரங்கள் காடுகளாக காட்சி கொடுக்க நீண்ட தூரம் போய்விட்டேன். அப்போதுதான் இவைகளைப் பிடித்தேன். நன்றி.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by மனோஜ் View Post
    இயற்கையின் மடியில்
    இளமையாய் தவழ்த தாங்களின்
    இந்த கவிதை அருமை அமரன்
    ஊட்டத்துக்கு நன்றி மனோஜ்..
    சின்ன வயதில் தவழும் போது பல விடயங்கள் தெரிவதில்லை. வளர்ந்து தவழும்போது நடப்பதில் காட்டிலும் அதிகமா விடயங்கள் பல புலப்படுகிறது. என்ன ஒரு விந்தை.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    புதிய பரிமானத்துடன் உங்கள் கவிப்படைப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இயற்கையின் படைப்புகள்
    இரம்மிய வண்ணம், மணம், சுவை, வனப்பு...
    இயல்பான முதிர்வுகள்.. சிதிலங்கள்..
    இவை யாவுமே இன்னொரு நிகழ்வால்
    இன்னும் பயனாகி, இடையறாச் சங்கிலிக்கணுக்களாகி...

    இடையில் தடைகள் வந்த சோகங்கள் சொல்லும்
    இன்னொரு உயர் பரிமாணக் கவிதை!

    அமரனின் உயரம் கண்டு
    அண்ணனின் அண்ணாந்த பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இயற்கையின் ஏக்கநிலைகள்,
    அமரன் கவித்துவத்தில்...
    தூக்கி எறியும் சிதிலங்களால்,
    வடிக்கப்பட்ட கவிச்சிற்பங்கள்...

    அருமை... சிகரம் நோக்கி போகின்றீர்கள்...
    முகில்கள் சாமரம் வீச, தொடர்ந்தும் பொழியுங்கள் கவிமழையை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •