பூக்களைப் பறிக்காதீர்
பொறிக்கப்பட்ட ஏட்டை
முட்டி வீழ்த்தும் வேகத்தில்
பூவனச் செடி...தலை
கொய்யவந்த பிஞ்சு விரலை
கட்டிய கை கண்டு...!
***************************************
இடுங்கிய மாங்கனியின்
விழியில் ஒரு துளி
அணில்பிள்ளை நகக்கீறல்
கிட்டாத சோகமோ...!
*******************************
அழுகிய தக்காளி
வரைந்தது ஈரஓவியம்
கொவ்வை அலகு
கொத்தாத தாபமோ..!
*******************************
வெடித்த முட்டை
இரத்தம் சிந்துகிறது
குஞ்சு அலகு
கொஞ்சல் நினைவில்...!
***********************************
பறவைகள் பலவால்
சல்லடையான மூங்கில்காடு
காய்ந்து கிடக்கிறது
கோகிலத்தின் மூச்சுக்காற்றில்
கோகுலம் ஆவதற்கு...!
***********************************
~~அமரன்
Bookmarks