தேடினான் தேவதையை
ராமனாய்மாறி சீதையை
கண்ணனாய்மாறி ராதையை
தேவதையோ தென்படவில்லை!
காத்திருந்தான் கண்ணகிக்கு!
பொறுமைக்கோ பொறாமை
மலர்தூவி மாதவியை அனுப்ப
மான்குட்டியாய் மருண்டோடினான்!
மதில்மேல் பூனையாய்
தனிமையில் தவிக்கிறான்!
கண்ணகிக்கு காத்திருப்பதா?
மாதவியுடன் மகிழ்வதாவென்று?
Bookmarks