ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
மன்னிக்கவேண்டும் சுகந்தபிரீதன்... உங்கள் கவிதை அழகாயினும்... கவிதைக்கான உங்கள் விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை.
உங்கள் கவிதையை நான் வாசித்த போது கலாசார கட்டுபாடுகள் உள்ளடங்கிய ஜாதி, மதம், காலாசார வித்தியாசம் போன்றவற்றை சொல்லுகிறிர்கள் என்று இருந்தேன்.... அதில் நான் ஒரு பங்கு வரை ஒத்து போகிறென்.
ஆனால் மனமானவளை கண்ணியென்று சொல்லுவது இந்த இடத்தில் ஒத்து போகாது.
மணமானவளிடம் தன் ஒருதலை காதலை சொல்ல நினைப்பது தவறு என்றே சொல்லுவேன். இதில் கலாசாரத்தை குறை கூற என்ன இருக்கறது. சமுதாய கட்டுபாடுகள் எல்லாமே அடுத்தவர்களுக்கு நம் சிந்தனையாலோ, செயலாலோ பாதிப்புகள் வரக்கூடாது என்பதாலே வகுக்கபடுகின்றன.
மேலும் மன்றத்தில் வரு கருத்து மாற்ரங்கள் ஆரோக்கியமாக எடுத்து கொள்லபடவேண்டும். இதில் தாக்குதல் என்று எதுவும் இல்லை. தக்குதல்களை மன்றம் அனுமதிக்கவும் செய்யாது....
தொடருங்கள் உங்கள் கவி சிந்தனைகளை...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
என் விளக்கத்தை எழுதிவிட்டு நான் எதிர்பார்த்தேன் இப்படி ஒரு கேள்வியை யாராவது ஒருவர் கேட்பார் என்று ...கடைசியில் அதை நீங்களே கேட்டுவிட்டீர்கள்! அத்ற்கான விளக்கம் இதோ... நான் எந்த இடத்திலும் கலாச்சாரத்தை மீறவில்லை நண்பரே... அவள் கன்னியாய்
மணமாகாமல் இருந்தபோது உருவான அந்த காதல் அவளுக்கு திருமணமானபோது கருகிபோனது... இங்கே நான் கலாச்சாரத்தை குறைகூறவில்லை... என் கண்ணியத்தைதான் அவளிடம் அப்படி உறைத்திருக்கிறேன்... காதலை உறைக்கவில்லை! ஏனெனில் மணமானவளை நேசிப்ப*து மரபல்ல என்று எனக்கும் நன்றாக தெரியும் நண்பரே... புரிந்துகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது அது தாக்குதலா? தாக்கமா என்று... !
Last edited by சுகந்தப்ரீதன்; 23-09-2007 at 09:15 AM.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks