இலக்கணமா?இலக்கியமா?என்பதின் நாம் கவனிக்க வேண்டிய
விஷயம் பிழைகள்.
எழுத்துப் பிழை மட்டுமின்றி பொருட்பிழையும் நாம் நம்மையறியாமல்
இட்டுச் செல்வதுண்டு.
சந்திப்பிழைப் பிழை,சாரியைப் பிழை இல்லாமல் எழுத முயற்சிக்க வேண்டும்.
மரபுசார் விஷயங்களில் கவனமாக சொற்களை பயன் படுத்த வேண்டும்.
தலைவியை,காதலியை,மனவியை வர்ணிக்கும் சொற்களைப் பிறர்க்கு பயன் படுத்த இயலாது.
தேன் மயங்கு மொழியினள்,தசரதனை வணங்கி வரவேற்றாள்.
தேன் மயங்கு மொழியினள்,லட்சுமணனை வாழ்த்தி வரவேற்றாள்.
தேன் மயங்கு மொழியினள்,முனிவரை தண்டனிட்டு வரவேற்றாள்,
அல்லது சிரந்தாழ்த்தி,கரம் குவித்து வணங்கி வரவேற்றாள்.
தேன் மயங்கு மொழியினள்,தோழியரை நகைப்புடன் வரவேற்றாள்.
தேன் மயங்கு மொழியினள்,ராமனைக் கொஞ்சி வரவேற்றாள்.
இதனை மாற்றி பயன் படுத்தினால் நகைப்புக்கு உரியதாகிவிடும்.
(நான் 40 வருடங்களாக சிலேட்,குச்சி,காகிதம்,பென்சில்,பேனா என்றே எழுதிப் பழகியதால் தட்டச்சில் எழுத்துப் பிழைகள் மலிந்து விடுகிறது.
வார்த்தைகளில் எழுத்துகளையும் விட்டு விடுகிறேன்.எனவே பிழையைப்
பற்றி கூறும் இவர்கள் பதிவில் பிழைகள் இருக்கின்றதே எனக்கருது வோருக்காக இந்த தன்னிலை விளக்கம்.)
மன்ற தமிழ் ஆர்வலர்கள் தங்கள் பதிவின் கீழ் சிறு சிறு குறிப்புகளை இடலாம்.
ஒற்று மிகா இடங்கள்:
நமக்கு பெரும் பிரச்னை எந்த இடத்தில் ஒற்று வரும் எந்த இடத்தில் வராது என்பது தான்.
அது,இது,அவை,இவை என்னும் சுட்டுகளுக்கு பின்னும்,
எது,ஏது,யாது,யாவை,யா என்னும் வினாக்களுக்கு பின்னும் வலி மிகாது.
Bookmarks