தமிழ் மன்றத்துக்கு வந்து பதிப்புகளை பதிந்து பின்னூட்டங்களை படித்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது நாம் செக் அறிமுகமானார். சென்னையில் வாசம் என்றதும் ஒரு பிடிப்பு வந்தது. தினமும் பேசாமல் தூங்குவதில்லை.
சில பல விஷயங்களை அலசி ஆராய்வோம். பேசுவோம் பேசுவோம் அப்படி பேசுவோம். திடீரென்று ஒருநாள் கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் பணி செய்து கொண்டு இருந்த என் உறவுக்கார பையன் ஒருவன் வீட்டிற்கு வந்து விட்டான். விசாரித்து பார்த்ததில் குறைந்த சம்பளத்தில் வாய்க்கும் கைக்கும் எட்டாமல் கஷ்டப்பட்டுகொண்டு இருந்ததாக சொன்னான். அந்த நேரம் பார்த்து நாம்செக் அவர்களின் அழைப்பு வர சும்மா தான் கேட்டேன் அவனுக்கு ஒரு வேலை சென்னையில் ஏற்பாடு செய்து தரலாமா என்று. பார்க்கிறேன் என்றார். பயோடேட்டாவை அனுப்பி வையுங்கள் ஏற்பாடு செய்யலாம் என்றார். அவரின் முகவரி வாங்கி கொண்டு , அடேய் பையா, இந்த முகவரிக்கு உனது பயோடேட்டாவை அனுப்பி வை. அவரே அழைப்பார் என்று சொல்லி விட்டு எனது பணியில் மூழ்கிவிட்டேன்.
ஐந்து நாட்கள் என் வீட்டில் இருந்த பையன் அவன் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றான். இரவு பையனின் அப்பா அழைக்கிறார். இன்னும் அவன் வரவில்லையே என்று வேறு சொல்லி திக்திக் என்றாக்கினார். எங்கு போனான் ? என்ன ஆனான் ஒன்றும் தெரியவில்லை. ஒரே மர்மம். அவனின் அப்பா வேறு அடிக்கடி அழைத்து ஏதாவது போன் பன்னினானா என்று கேட்க எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
இரண்டு நாள் கழித்து நாம்செக் போன் செய்கிறார். எப்படி இருக்கீங்க ? என்ன பண்ணுறீங்க என்று கேட்டு விட்டு மெதுவாக பையன் இங்கு இருக்கிறான் என்கிறார். எனக்கு எப்படி இருக்கும் பாருங்கள். சரியான கடுப்பு அவன் மேல். அடி போடுங்கள் அவனுக்கு என்றேன். சிரிக்கிறார். சரி நான் பார்த்துகொள்கிறேன் அப்புறம் பேசலாம் என்று சொல்லிவிடுகிறார்.
இன்று காலை பையன் போனில் அழைக்கிறான். பெரிய கம்பெனியில் நேற்று வேலைக்கு சேர்ந்து விட்டதாகவும் நல்ல சம்பளம் என்று சொன்னான். உடனே இந்த பதிவு...
தமிழ் மன்றம் எப்படி எல்லாம் உதவுகின்றது பாருங்கள். ஒரு பையனுக்கு அவனது வாழ்வில் விளக்கேற்றி வைத்த நாம்செக் நடமாடும் கடவுள் தானே... ??
குறிப்பு : பதிவை பார்த்ததும் திட்டு வருமென்ற காரணத்தால் நாம்செக்கின் அழைப்பை அட்டண்ட் செய்யபோவதில்லை இரண்டு நாட்களுக்கு. அதற்குள் கோபம் தீர்ந்து விடும் அல்லவா ? வேறு வழியில்லை நாம்செக் என் நன்றியினை தெரிவிப்பதற்கு...கோபம் வேண்டாம்...
Bookmarks