Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: பிரிந்த உறவுக்கு...!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    பிரிந்த உறவுக்கு...!

    உறவுகள் பிரியும் வேதனை
    மனதுக்கு ஏற்படும் சோதனை!
    கூடிக் குதூகலித்து
    ஆடி அகம் களித்து
    வாழ்ந்த தருணங்கள்....
    காட்டுகின்றது கரணங்கள்!
    பிரிவுக்கு எத்தனையோ
    தனிக் காரணங்கள்....!
    நகையாடி,விளையாடி,
    உறவு உணர்ந்து,
    உள்ளம் மகிழ்ந்து,
    கழிந்த நிமிடங்கள்
    இனி இழந்த நினைவுகள்தானா?
    நட்பான அந்த
    நல்லுறவு நாளையேனும்
    வருமென்ற
    எதிர்பார்ப்புதான்
    காயமடைந்த இதயத்துக்கு
    களிம்பாகிறது.........................!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பிறக்கும்போது,
    தொப்புள்கொடியில்
    தொடங்கும் பிரிவு...
    இறக்கும் போது,
    உயிர் பிரிகை வரை
    தொடர்கின்றதே...

    இடைப்பட்ட வாழ்வில்,
    சேர்வதே பிரிவதற்காகவா...
    பிரிவதே சேர்வதற்காகவா...
    என்று,
    சோர்ந்த மனதோடு,
    வாழும் மனிதர்கள்...

    பாராட்டுக்கள் சிவா.ஜி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா அருமையான அதே அக்னியின் அசத்தல் பின்னூட்டக் கவிதை.பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் அக்னி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    இறுகும் என்ற நினைத்து நட்போடு
    இணைந்திருக்கும் வேளையில் - உறவு
    உருகும் சூழ்நிலை வந்து
    உள்ளம் துடிக்க வைத்ததேன்..?

    அன்பு என்ற மூன்றெழுத்தால்
    ஆதரித்த நீ - இரக்கமின்றி
    பிரிவு என்ற மூன்றெழுத்தை தந்து
    பித்துப்பிடிக்க வைத்ததேன்..?

    முகம் காணாமல் நட்பென்ற மலர்
    முழு மதியாய் தோன்றியதில் மகிழ்ந்தேன்.
    முடிவில் அதனுள் பிரிவென்ற கொடு முள்
    முளைத்து உதிரம் கசிய நின்றேன்.

    மன்றத்தால் மனம் நிறைந்த நான் - பிரிவில்
    கொண்ட துயர் கண்டு துடித்து நிற்கிறேன்.!
    சூழ்நிலையின் சூழ்ச்சியா இது? - அல்லது என்
    ஊழ்வினையின் உச்ச தண்டனையா?

    என்னென்று சொல்வேன் என் நிலையை..?
    என் உயிர் ஊசலாடுது நட்பின் பிரிவில்..!
    கண்ணை விட்டு இமை நீங்கலாம்
    என்னை விட்டு இனிய நட்பு நீங்கலாகுமோ..?

    நீங்குதல் என்பது நெஞ்சின் நிம்மதிக்கு எதிரி..!
    ஏங்கி நிற்கும் என் நிலை உணர்ந்து - உயிர்
    தாங்கிப்பிடித்து இந்நிலை போக்க
    நீங்கா நட்பே மீண்டு(ம்) நீ வருவாயா..?
    Last edited by இதயம்; 03-09-2007 at 02:49 PM.
    அன்புடன்,
    இதயம்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    அய்யோ!எந்த கவிதையை படிப்பது, எதை ரசிப்பது என்றே தெரியவில்லை.முன்றும் வித்தியாசம்.முன்றும் அருமை.சிவா.ஜி,அக்னி,இதயம் முன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.அருமை.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ஓவியாவுக்கு இந்த கவிதைகள். அடடா... கொன்னுட்டீங்க மூன்று பேரும். ஓவியாவை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. என்ன ஆச்சோ ஏதாச்சோ தெரியலை.. ஒன்னும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். என்ன பன்றது. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.. என்ன நாஞ்சொல்லுறது சரிதானே...
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நினைத்தேன் இப்படி கவிதைகள் வரும் என்று... கவிஞர்கள் என்ன நினைத்தாலும் சரி... எனது கருத்து : இதற்கெல்லாம் கவிதை எழுதுவது அர்த்தமற்றது... (ஓவியாவைக் காரணமிட்டு எழுதின கருத்திற்கு...)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    நினைத்தேன் இப்படி கவிதைகள் வரும் என்று... கவிஞர்கள் என்ன நினைத்தாலும் சரி... எனது கருத்து : இதற்கெல்லாம் கவிதை எழுதுவது அர்த்தமற்றது... (ஓவியாவைக் காரணமிட்டு எழுதின கருத்திற்கு...)
    ஓவியா என்று மட்டுமில்லை ஆதவா,பொதுவாக எந்த உறவின் பிரிவும் வலிதானே.அதனாலதான் பொதுவாக எழுதினேன்.பாதிக்கும் எதையும் கவிதையில் வடிப்பது வாடிக்கைதானே....இதில் அர்த்தமுள்ளது,அர்த்தமற்றது என்ற வித்தியாசமில்லை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    நினைத்தேன் இப்படி கவிதைகள் வரும் என்று... கவிஞர்கள் என்ன நினைத்தாலும் சரி... எனது கருத்து : இதற்கெல்லாம் கவிதை எழுதுவது அர்த்தமற்றது... (ஓவியாவைக் காரணமிட்டு எழுதின கருத்திற்கு...)
    மன உணர்வின் மறு பிரதிபலிப்புகள் தான் படைப்புகள். குறிப்பாக, கவிஞர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதால் சிறு விஷயமும் அவர்களை வெகுவாக பாதித்து அதை தன் கவிதைகள் மூலம் வெளிப்படுத்த வைத்துவிடுகிறது. நம் மன்றம் வெறும் தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளும் தளமல்ல, மன உணர்வுகளையும் கூட தான். அந்த வகையில் நட்பின் பிரிவு என்பது மிகப்பெரிய இழப்பு..! நட்பின் ஆழத்தை பொறுத்து அதன் தாக்கம் வேறுபடுகிறது. இங்கு ஓவியாவின் பிரிவு கவிதைகளை உருவாக்கியிருக்கிறது என்றால் அது நட்பின் ஆழத்தை குறிப்பிடுகிறதே தவிர வேறில்லை.!!

    இந்த கவிதைகளில் ஓவியாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால் அதை விமர்சிக்க வழி உண்டு. காரணம், நட்பும், பிரிவும் மன்றத்தில் சகஜமென்பதால்..! ஆனால், நம் நண்பர்கள் நாலும் அறிந்தவர்கள் என்பதால் இதை நட்பின் பிரிவு என்ற கண்ணோட்டத்தினோடே பார்த்து கவி எழுதியிருக்கிறார்கள். எனவே, ஆழ்ந்த நட்பு கொண்டவர்கள் தன் எண்ணத்தை பிரதிபலிக்க இங்கே கவி புனைவது தவறாக படவில்லை. இதை ஓவியாவின் பிரிவாக மட்டும் பார்க்காமல், நல்ல நட்பின் பிரிவாக பாருங்கள். இந்த கவிதைகளுக்கு முழு அர்த்தம் கிடைக்கும்.
    அன்புடன்,
    இதயம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அவர்தான் தற்காலிக பிரிவு என்று சொன்னாரே! அதற்கு கவிதை தேவையில்லையே!!...

    அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டபடி, ஓவியாவின் பிரிவாக இருப்பின் அது அர்த்தமற்றது.... (எஸ்கேப் ஆகறதுக்கு வழி வெச்சோம்ல..)

    அங்கே அவ*ர் பிரிய*, இங்கே அதுபோல*வே க*விதை தோன்ற*,, ந*ண்ப*ர் சிவாஜி. நீங்க*ள் உண்மையைச் சொல்லுங்க*ள். ஓவியாவை குறிவைத்துதானே எழுதினீர்க*ள்??? போக*ட்டும். அது என் க*ருத்து... என*க்கு அர்த்த*ம*ற்ற*தாக*த் தெரிகிற*து... (கவிஞர்கள் மன்னிக்கவும்..)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான் ஆதவா,ஓவியாவை நினைத்துத்தான் எழுதினேன்.அதேசமயம் இது பொதுப்படையாக இருக்க வேண்டுமென்றும் நினைத்துத்தான் பெயரோ மற்ற அவரைக் குறிப்பிடும் எந்த குறிப்புகளும் இல்லாமல் எழுதினேன். அக்னியின் கவிதையையும் பாருங்கள்...பிரிவைப் பற்றி மட்டும்தான் எழுதியிருக்கிறார்.இதயம் சொன்னதுபோல் கவிஞர்கள் கொஞ்சம் சீக்கிரமே உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்(இந்த சாக்குலயாவது கவிஞர்ன்னு சொல்லிக்கிறோம் கண்டுக்காதீங்க ஆதவா...)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உண்மைதான் ஆதவா,ஓவியாவை நினைத்துத்தான் எழுதினேன்.அதேசமயம் இது பொதுப்படையாக இருக்க வேண்டுமென்றும் நினைத்துத்தான் பெயரோ மற்ற அவரைக் குறிப்பிடும் எந்த குறிப்புகளும் இல்லாமல் எழுதினேன். அக்னியின் கவிதையையும் பாருங்கள்...பிரிவைப் பற்றி மட்டும்தான் எழுதியிருக்கிறார்.இதயம் சொன்னதுபோல் கவிஞர்கள் கொஞ்சம் சீக்கிரமே உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்(இந்த சாக்குலயாவது கவிஞர்ன்னு சொல்லிக்கிறோம் கண்டுக்காதீங்க ஆதவா...)
    அந்த உணர்ச்சியிலேதான் சிவா அவர்களே நானும் எழுதினேன். எனக்கு அவரின் பிரிவும் அதற்கான பதிவும் பிடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் மிகச் சரியான காரணம் பிரிவிற்கு இல்லை. அவர் மன்றம் வந்தால் மகிழ்ச்சியே! இங்கே யாராவது அவரை துன்புறுத்தியிருக்கவேண்டும்... அந்த பதிவருக்கு எனது கண்டனம். அவர் சொல்லுவது போல சொந்த அலுவல்தான் காரணம் என்றால் அவர் இணையெமே திறக்கப் போவதில்லையோ???? மேலும் விவாதம் சொல்ல விருப்பமின்றி கவிதைகள் தொடரட்டும்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •