உறவுகள் பிரியும் வேதனை
மனதுக்கு ஏற்படும் சோதனை!
கூடிக் குதூகலித்து
ஆடி அகம் களித்து
வாழ்ந்த தருணங்கள்....
காட்டுகின்றது கரணங்கள்!
பிரிவுக்கு எத்தனையோ
தனிக் காரணங்கள்....!
நகையாடி,விளையாடி,
உறவு உணர்ந்து,
உள்ளம் மகிழ்ந்து,
கழிந்த நிமிடங்கள்
இனி இழந்த நினைவுகள்தானா?
நட்பான அந்த
நல்லுறவு நாளையேனும்
வருமென்ற
எதிர்பார்ப்புதான்
காயமடைந்த இதயத்துக்கு
களிம்பாகிறது.........................!
Bookmarks