Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 56

Thread: 500வது படைப்பு-கொக்கரக்கோகுமாங்கோ பூமகளைக

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    500வது படைப்பு-கொக்கரக்கோகுமாங்கோ பூமகளைக

    கொக்கரக்கோகுமாங்கோ பூமகளைக் காணலைங்கோ......!!

    மன்றம் தந்த அன்பாலும் ஆசியாலும் மன்றத்தில் இன்று எனது 500 வது பதிப்பை தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    எனக்கு என் மழலைப் பருவத்தில் நடந்த சுவையான சம்பவத்தை உங்களோடு பகிர விரும்புகிறேன். இந்தச் சம்பவம் என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒன்று.

    என் ஆரம்பக் கல்வி ஒரு ஆங்கில வழி பள்ளிக் கூடத்தில் எல்.கே.ஜி (ப்ரி கே. ஜி எல்லாம் அப்ப இல்லீங்க மக்களே...!)ஆரம்பித்தது. முதலாம் வகுப்பு வரை அங்கு பயின்றேன். என் குடும்பத்தின் தமிழ் பற்று காரணமாக நான் இரண்டாம் வகுப்பில் பள்ளி மாற்றப்பட்டேன். ஏதும் அறியாமல் விழி பிதுங்கி மழலை உள்ளத்தோடே உள் சென்றேன் அரசு பள்ளிக்கு.

    தரையில் அமர்ந்து படிப்பு, புதிய முகங்கள், நாலணா நெல்லிக்காய், காரமான மாங்கா துண்டு,பத்து பைசா தேன் மிட்டாய் என்று எல்லாமே எனக்கு புதியதாக இருந்தது. அப்போதெல்லாம் அம்மா தான் எப்போதும் பள்ளி முடிந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.

    இரண்டாம் வகுப்பின் ஆரம்ப நாட்கள். முதல் இரண்டு நாட்கள் வந்து அழைத்துச் சென்றார். எனக்கு அரை நாள் மட்டுமே வகுப்புக்கள் நடந்தன. முதல் வரிசையில், தரையில் கரும்பலகை அருமே அமர்ந்து நிமிர்ந்து பார்த்து படிப்பது விசித்திர அனுபவம் எனக்கு.

    அப்போது தான் அந்த நாள் வந்தது.

    முத்தான புதன் கிழமை. பள்ளிக்கு எப்போதும் போல் புறப்பட்டு சென்றேன் அம்மாவுடன். அம்மா புதிதாக ஒரு கட்டளை இட்டார். பள்ளி முடிந்ததும் என்னையே திரும்பி வரச் சொன்னார். ஏனெனில் அது நான் முதலில் சென்ற பள்ளி செல்லும் வழியிலேயே இருந்தது தான். நானும் சரி என்று சொல்லி வைத்தேன் விழித்துக் கொண்டே. அன்றைய காலங்களில் சாலையில் செல்வது மிகப் பெரிய சாதனையாக நினைப்பேன். சாலையில் செல்லும் பலதரப்பட்ட மனிதர்கள், விர் என்று பறக்கும் வாகனங்கள், வாகன நச்சுப்புகை, வாகன ஒலிப்பான்கள் எல்லாம் பூச்சாண்டி காட்டி பயமுறுத்தும் என் பிஞ்சு மனத்தை.

    அன்று காலை வகுப்புகள் நன்றாகச் சென்றன. காலம் கரைந்து கொண்டிருந்தது. காலை இடைவேளை மணி அடித்தது. எல்லோரும் வெளி சென்று தேன் மிட்டாயும் எனக்குப் பிடித்த நெல்லிக்காயும் வாங்கி ருசித்தவண்ணம் இருந்தோம். புதிய முகங்களின் அறிமுகம் மட்டுமே இருந்தது. நான் புதிதாகையால் யாருடனும் ஒட்டவில்லை மனம் அப்போது.
    நட்பு பாராட்ட ஆளின்றி தனி தேவதையாய்(சும்மா தாங்க சொன்னேன்....... கோவிச்சுகாதீங்க... குழந்தைகள் தெய்வம் தானுங்களே...) பள்ளியைச் சுற்றி(புதிய பள்ளியாகையால்) வலம் வந்த வண்ணம் இருந்தேன்.

    இடைவேளை முடிந்தது. வகுப்புக்கள் மீண்டும் கூடின. எனது முதல் இருக்கை தேடி சென்று அமர்ந்து கொண்டேன். பின் பாடங்கள் நடத்தி முடிந்து மீண்டும் மணி அடித்தது. எல்லோரும் வெளியில் சென்றனர்.அனைவரோடும் நானும் சென்றேன். யாரோடும் அறிமுகம் இல்லாததால் எனக்கு திக்கு தெரியாத காட்டில் விட்டதாய் உணர்ந்தேன். சிட்டாய் பறந்தனர் என் வகுப்பு மாணவர்கள். என்னுடன் வகுப்பில் அப்போது படித்துக் கொண்டிருந்த பரிச்சயமே சரியாக ஆகாத முகங்களை நினைவில் நிறுத்தி பள்ளிக்குள் தேட முற்பட்டு தோற்றுபோனது என் உள்ளம்.

    தேடிக்களைத்து சோர்ந்து இருக்கையில் வகுப்புக்கள் மீண்டும் கூடும் நேரம் ஆரம்பித்தது. எனக்கு முதலில் படித்த பள்ளியின் நியாபகம் வரவே..அதே போல் மணி அடித்ததும் மதியமும் வகுப்பு தொடங்கும் என நினைத்து என் வகுப்பு அறையிலேயே அமர்ந்து கொண்டேன். அப்போது மதிய நேரத்திற்கான வகுப்பு ஆரம்பித்தது.

    நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டிற்கு என் வகுப்பில் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் மீண்டும் புதிய முகங்கள் என்று அறியாமல் மதிய வகுப்பு பிள்ளைகளுடன் அமர்ந்து கொண்டேன் அதே முதல் வரிசையில்.

    2 மணி நேரம் ஓடியிருக்கும். வகுப்புக்கள் நடந்த வண்ணம் இருந்தன. நான் மும்முறமாக வகுப்புக்களை கவனித்துக் கொண்டு இருந்தேன். என் அம்மா என் முன் கலங்கிய கண்களுடன் பள்ளிக்கு என் வகுப்பிற்கு தேடி வந்திருந்தார் தனியாய். என்னைப் பார்த்து மேலும் அழத்தொடங்கினார். ஒன்றும் புரியாமல் விழித்தேன் இப்போதும்.

    நடந்தது இது தான்.

    பள்ளி விட்டு வீடு வராததால் அம்மா தவித்து,புலம்பி, அழுதவண்ணம் சாலையில் எல்லா இடத்திலும் தேடி பின் கடைசியாய் என் பள்ளி வந்து தலைமை ஆசிரியரை சந்தித்துக் கூறியிருக்கிறார். அவரும் கனிவான குரலில் உங்கள் மகள் எங்கும் சென்றிருக்க மாட்டாள். பள்ளியில் உள்ள எல்லா வகுப்புக்களையும் சென்று பார்த்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
    அம்மாவும் ஒவ்வொரு வகுப்பாக தேடி அழுதழுது வந்திருக்கிறார்.
    கடைசியாய் என் வகுப்பிற்கு வந்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையிடம் பேசி என்னை அழைத்துச் சென்றார்.

    மதிய உணவு பற்றிய எண்ணமோ... பசியோ என்னை ஆட்கொள்ளாது இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது எனக்கு இன்று வரை. வகுப்பு கவனித்த வண்ணமே அனைத்தையும் மறந்து கிடந்தேன் என்று அம்மா சொல்லி இன்றும் கேளி செய்வதுண்டு.

    அன்று முதல் என் அம்மாவே வந்து என்னை பள்ளியிலிருந்து கூட்டிச் சென்றது வேறு விசயம். நான் இதற்காக அடிவாங்கவே இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

    கலங்கிப் போன அம்மாவின் முகம் இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.
    அவரின் நேசத்தை மிக வலுவாக என்னும் விதைத்தது இந்த நிகழ்ச்சி.
    Last edited by பூமகள்; 01-09-2007 at 05:40 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile

    ஐநூறு கடந்த அன்புத் தங்கைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் முதலில்.................!

    ரொம்பவே இரசித்தேன் பூமகள் உங்கள் கொக்கரக்கோகுமாங்கோவை..........!

    நட்பு பாராட்ட ஆளின்றி தனி தேவதையாய்
    சரி, சரி அப்படியே வைச்சுக்குவோம்...........!

    நல்ல தமிழில் நகைச்சுவை கலந்து சம்பவத்தை விபரித்த விதம் அருமை பூமகள்!.

    தொடர்ந்து இணைந்திருந்து கலக்கிக் சிறப்பிக்க ஓவியனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    சுவையான 500 பதிவு, மழலை சம்பவம், மிகவும் சுவாரஸ்யமாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்க*ள்

    அன்றைய அப்பாவி பிஞ்சுகளின் எண்ணங்கள் எவ்வளவு பசுமையாக இருக்கும் தெரியுமா!! ஆனால் இன்றோ!! ம்ம் எல்லாம் படுகில்லாடிகலா இருக்குங்கோ!!!


    அம்மாவின் அன்பு, அக்கறை இவை இரண்டிற்க்கும் சரிநிகர் எதுவுமே இப்பூவுலகில் இல்லை.

    எனக்கு 10வயசிலிருந்தே அம்மாயில்லை அதனால் உங்களை காண கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு!!!

    எழுத்துலகில் தங்களுக்கு சிறந்த எதிர்காலமுண்டு, என் ஆசிகள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அன்பு ஓவியன் அண்ணா தான் என்னை முதன்முதலில் வரவேற்றது. இப்போதும் எனது 500 வது பதிப்பிற்கு முதல் பதில் அவரிடம் இருந்து வந்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

    உங்களின் ஆசியுடன் தொடர்கிறேன் இனிதே நம் மன்றத்தில்.

    உங்களின் 500 இ−பணம் அன்பளிப்பிற்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.
    நன்றிகளோடு,
    Last edited by பூமகள்; 01-09-2007 at 06:31 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நிஜம் தான் அக்கா. இன்றும் அந்த மழலை பருவ நினைவுகள் பசுமரத்தாணி போல் பதிந்து போய் கிடக்கின்றன.
    அதன் வெளிப்பாடே இந்த படைப்பு. எனக்கு கவி தவிர இப்படி படைப்பது புதிது. பயத்துடனே தான் படைத்தேன். ஆனால் உங்களால் ரசிக்கப்பட்டது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
    நன்றிகள் ஓவியா அக்கா.

    எனக்கு 10வயசிலிருந்தே அம்மாயில்லை அதனால் உங்களை காண கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு!!!
    உங்கள் மனத்தை என் படைப்பு காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் அக்கா. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்....
    உங்களுக்கு அன்பான மகிழ்வான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    என்னை உங்கள் தங்கையாக பாவிக்க வேண்டும் என்பது என் ஆசை. ரக்சா பந்தன் திரியில் என் பெயரை சகோதரி லிஸ்டில் நீங்கள் விட்டு விட்டீர்கள்.........! ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்............... போங்க கா...
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    பூமகளே....உங்கள் அம்மா ரொம்பத்தான் பாசமாய் இருக்கிறார்.உங்கள் 500 வது பதிப்பை அழகாக வழங்கி இருந்தீர்கள்.உங்கள் இலக்கியப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
    இணையத்தில் ஒரு தோழன்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மிக்க நன்றிகள் இக்ராம் அண்ணா. அம்மாவென்றாலே பாசம் தானே..!
    அனைத்து அம்மாக்களும் அப்படித்தான்.
    உங்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள் சகோதரரே..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அன்பு பூமகள் அருமையான படைப்பு ஒவ்வேரு மனிதனுக்கும் குழுந்தை பருவம் ஒரு அமிர்தம் அதை ஞபாகத்தில் வைத்து எழுதியது மிக மிக அருமை சம்பவங்கள் மனதில் எவ்வளவு அழமாக பதிந்துள்ளது என்று உங்கள் கதையில் அழகாக வெளிபடுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து இதை பொன்ற அருமை படைப்புகள் தர
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மிக்க நன்றிகள் மனோஜ் அண்ணா. உங்கள் அனைவரது பள்ளிபருவத்தையும் ஒரு கணம் கண்முன் என் படைப்பு கொண்டுவந்தால் அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும்.
    உங்களின் உடன் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    நிஜம் தான் அக்கா. இன்றும் அந்த மழலை பருவ நினைவுகள் பசுமரத்தாணி போல் பதிந்து போய் கிடக்கின்றன.
    அதன் வெளிப்பாடே இந்த படைப்பு. எனக்கு கவி தவிர இப்படி படைப்பது புதிது. பயத்துடனே தான் படைத்தேன். ஆனால் உங்களால் ரசிக்கப்பட்டது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
    நன்றிகள் ஓவியா அக்கா.

    உங்கள் மனத்தை என் படைப்பு காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் அக்கா. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்....
    உங்களுக்கு அன்பான மகிழ்வான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    என்னை உங்கள் தங்கையாக பாவிக்க வேண்டும் என்பது என் ஆசை. ரக்சா பந்தன் திரியில் என் பெயரை சகோதரி லிஸ்டில் நீங்கள் விட்டு விட்டீர்கள்.........! ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்............... போங்க கா...
    அடடே, எனக்கு அம்மா இல்லை என்று நான் வருந்தினாலும் என்றும் மற்றவர்களின் அனுதாபத்தை தேடியதில்லை, உங்கள் கருணைக்கு நன்றி.

    ஓ மை லவ், ரக்ஷ பந்தன் என்ற பண்டிகை ஆண்களுக்கு, ஒரு சகோதரனின் கடமையை மறக்க கூடாது என்று சொல்லவே அந்த பண்டிகை கொனண்டாடப்படுகின்றது.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அம்மாவின் பாச மழை இன்னும் தொடரட்டும்.....

    பூமகளின் பதிவு மழை இங்கு இன்னும் தொடரட்டும்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    அடடா, அம்மாவின் அன்பும், குழந்தையின் தவிப்பும் ஒரு காவியத்தையே படைத்து விட்டது. பூமகள். 500வது பதிப்பு அசத்தல்...
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •