Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: இன்னுமோர் வெள்ளிக் கிழமை விடியல்.......

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Unhappy இன்னுமோர் வெள்ளிக் கிழமை விடியல்.......

    அன்பான மன்ற உறவுகளே, இந்த பதிவு இந்த மன்றத் தாயின் மடியில் எனது ஏழாவது ஆயிரத்தைத் தொடும் பதிவு, இந்த பதிவும் எனது ஆறாயிரமாவது பதிவைப் போலவே உணர்ச்சி மயமானது. உண்மையாகக் கூறின் அதனை விட கடுமையான துன்பியல் சம்பவத்தைத் தாங்கியது. அதனாலேயே இதனைப் பண்பட்டவர் பகுதியில் பதிக்கின்றேன். வழமை போல என்னிடமிருந்து ஜாலியான ஒரு பதிவை எதிர்பார்ப்பவர்கள் தயவு செய்து இந்த பதிவினைத் தொடர்ந்து வாசிக்க வேண்டாம்.

    இந்த பதிப்பினை வாசிக்க விரும்புவோர் இதுவரை எனது 6000 வது பதிப்பான ஒரு வெள்ளிக் கிழமை விடியலை படிக்கவில்லையெனின் அதனை ஒரு முறை படித்து விட்டு இதனைத் தொடர்ந்தால் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.

    ________________________________________________________________________________________________________________________


    அதே காலப் பகுதி, நான் தொடர்ந்து அதே பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். முன்பு நிகழ்ந்த அந்த மோசமான வெள்ளிக் கிழமை விடியலில் தழும்புகள கிட்டத்தட்ட மறைந்து கொண்டிருந்தன என்றே கூறலாம். ஆனால் அதே காலப் பகுதியில் ஆனையிறவு இராணுவத் தளம் மீதான போராளிகளின் வலிந்த தாக்குதல் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. போர் அரங்கிற்கும் அப்போது நாம் இருந்த ஜெயந்தி நகர் (இந்த ஜெயந்தி நகரிலேயே நான் குறிப்பிட்ட அந்த கிளிநொச்சி இந்து மகாவித்தியாலயம் என்ற பாடசாலை அமைந்திருந்தது) பகுதிக்கும் கணிசமான தூரம் இருந்தமையால் ஓரளவு போர் அச்சம் இன்றியே நாம் இருந்தோம்.

    ஆனாலும் அவ்வப்போது போர் முனை இழப்புக்களால் மக்கள் குடியிருப்புக்கள் மீதான எறிகணை (Artillery attacks) மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களை மிலேச்சத்தனமாக அரச படைகள் நடாத்துவதுண்டு. ஆனால் எறிகணைத் தாக்குதல் எங்களுக்கு ஓரளவு பழகி விட்டிருந்தமையால் அதனை இலகுவாக பாதுகாப்பாக எதிர் கொள்ளும் வழி அறிந்திருந்தோம். எறிகணை தாக்குதல் எங்கள் பகுதிக்கு மீது நடாத்தப் படுவதென்றால் ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து நடாத்தப் பட வேண்டும். ஒரு எறிகணை இராணுவ முகாமில் இருந்து புறப்பட்டால் அது புறப்படும் வெடி ஓசை முதலிலே கேட்கும் பின்னர் அந்த எறிகணை எங்கள் பகுதியை நோக்கி வந்தால் அது வரும் இரைச்சல் ஓசை கேட்கும் (இதனை ஷெல் கூவுது என்று நாம் சொல்லுவோம்) பின்னர் அது விழுந்து வெடிக்கும் ஓசை கேட்கும். இந்த இரைச்சல் ஓசையை வைத்து அந்த எறிகணை எந்த திசையை நோக்கி நடாத்தப் படுகிறதென்று கூறக் கூடிய வல்லமை எங்களுக்கு காலத்தின் கட்டாயத்தால் தானே கூடி வந்திருந்தது. அதனால் இராணுவத் தளத்தில் இருந்து வந்த எறிகணை எங்கள் பகுதியைத் தாக்க முன்னர் எங்களால் பதுங்கு குழிக்குள் ஓடிச் சென்று பாதுகாப்பாக நிலையெடுக்க கூடியதாக இருந்தது. ஆனால் விமானத் தாக்குதல் கொஞ்சம் பிரச்சினையாக இருந்ததுண்டு, அதாவது நாம் பொது இடங்கள், வீதிகள் போன்ற இடங்களில் நிற்கும் போது இந்த விமானங்கள் வந்து மாட்டிக் கொண்டால் கொஞ்சம் பிரச்சினை தான். போர் விமானங்கள் குண்டு வீச்சுடன் நிறுத்தாமல் மக்களைத் துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடுகளை நடாத்திய சம்பவங்களும் ஏராளம் உண்டு.

    இப்படியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன முதல் நான் விபரித்த வெள்ளிக் கிழமை விடியல் நடந்து ஒரு நான்கு மாதம் இருக்கும் இன்னும் ஒரு வெள்ளிக் கிழமை அன்று நடக்க இருக்கும் கோரத் தாண்டவம் தெரியாமல் விடிந்து தொலைத்தது. வழமை போல பாடசாலைக்குப் புறப்பட்டுப் போனேன், அன்று வெள்ளிக் கிழமை என்பதால் மனதில் ஏராளம் ஏராளமான சந்தோச அலைகள். ஏனென்றால் வெள்ளியை அடுத்துத் தானே வார விடுமுறை நாட்களான சனி கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் வருமே, அதனால் சிறியவனாக இருந்த என் மனதினுள்ளும் அந்த வார விடுமுறை பற்றி ஏராளம் கனவுகள் சிறகடிக்க நானும் ஒரு சிறு பறவையாகவே சிறகடித்துப் பாடசாலைக்கு போனேன்.

    அன்று எங்கள் பாடசாலையில் ஒரு சிரமதான நாள், அதானால் அன்று பல குழுக்கள் குழுக்களாகப் பிரிந்து பாடசாலை வளாகத்தைத் தூய்மைப் படுத்தும் வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தோம். சிறியவர்களான எங்களை பெரிய மாணவர்களும் மாணவர் தலைவர்களும் (Prefects) வழி நடாத்திக் கொண்டிருந்தனர். அப்போது நான் எங்கள் பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையிலுள்ள பகுதியைத் துப்புரவு செய்யும் வேலையில் இருந்தேன். எங்களை சில மாணவர்த் தலைவர்கள் நெறிப் படுத்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது நேரம் காலை 9.30 இருக்கும் திடீரென வானிலே ஒரே இரைச்சல், பயத்துடன் நிமிர்ந்து பார்த்தால் இரு சியாமசெட்டி ரக தாக்குதல் விமானங்கள் எங்கள் பாடசாலை இருந்த பகுதியை நோக்கி வட்டமிடத் தொடங்கின. நாம் பாடசாலை வளாகம் எங்கும் சிதறி ஓடினோம், அப்போது நான் எடுத்த ஒரு முடிவு பாடசாலை மைதானப் பக்கமாக ஓடுவதென்று, ஏனென்றால் பாடசாலையில் மைதான வெளியிலே கட்டடங்கள் இல்லாமையால் குண்டு வீச்சினால் கட்டடங்களுள் மாட்டிக் கொள்ளும் அவலம் இருக்காது. அதானல் அது பாதுகாப்பு என்று நினைத்தேன். உடனே அதைச் செயற்படுத்த முனைந்து மைதானத்தை நோக்கி ஓடினேன்....

    நான் மைதானத்தினுள் பிரவேசிக்க முற்பட்ட போது ஒரு மாணவத் தலைவர் என்னை மைதானப் பகுதிக்குப் போக விடாமல் தடுத்து என்னை எதிர்த் திசை நோக்கி ஓடுமாறு செய்தார். அவர் என்னை மறித்தது ஒரு வேப்ப மரத்தடியில் வைத்து, அப்போது விமானங்களில் ஒன்று குண்டை வீசுவதற்காக வேகமாக தரையை நோக்கிப் பேய் இரைச்சலோடு வர நான் என்ன செய்வதென்று அறியாமல் விழிக்க என்னை அந்த வேப்ப மரத்துக்கு அருகே இருந்த வேலியைக் கடந்து பாடசாலை வளாகத்தை விட்டு விரைவாக ஓடுமாறு கத்தினார் அந்த அண்ணா. நானும் வேலி தாண்டி ஓடினேன், ஓடினேன் ஓடிய வேகத்தில் கால் இடறி ஒரு பள்ளத்தில் விழுந்தேன். எழுந்து பார்த்தால் அந்த பள்ளம் ஒரு பாது காப்புக்காக வெட்டப்பட்ட ஒரு திறந்த வகைப் பதுங்கு குழி. அங்கே ஏற்கனவே இன்னும் சிலர், அதில் ஒரு ஆசிரியரும் இருந்தால் என் கையைப் பிடித்த அவர் பயப் படவேண்டாம் என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார். அப்போது முதலாவது குண்டு வெடித்துச் சிதறும் ஓசை கேட்டது, தொடர்ந்து இன்னமும் மூன்று குண்டுகள் எல்லாமே எங்கள் பாடசாலைகளைச் சூழவே வீழ்ந்து வெடித்தன.

    முதல் குண்டு எங்கள் பாடசாலை மைதானத்திம் மத்தியில் விழுந்துள்ளது உணரப் பட என் இதயம் பதை பதைத்தது. அந்த அண்ணா மட்டும் என்னை மறிக்காது விட்டிருந்தால் இன்னேரம் என்னிலை.......?, என்ற கேள்வி மனதில் எழ முதுகுத் தண்டு சில்லிட்டது. ஒரு வாறாக பதுங்கு குழியை விட்டு வெளியேற வெளியே ஒரே புகையும் கந்தக வாசமும் வரவேற்றது. எங்கும் ஒரே ஓலங்கள், இந்த முறை எங்கள் பாடசாலையில் பலர் காயமுற்றிருந்தனர். முதலாவது குண்டு வீச்சு பாடசாலையைச் சுற்றியே நடந்திருக்க இந்த தடவை பாடசாலை வளாகத்தினுள்ளேயே குண்டுகள் வீழ்ந்து வெடித்திருந்தன.

    அப்போது யாரோ சொன்னார்கள் என்னை மைதானத்துள் போக விடாமல் தடுத்த அந்த அண்ணா (அவரது பெயர் சத்தியமூர்த்தி) முதலாவது குண்டு வீச்சிலே படுகாயமடைந்து விட்டாரென, தலையிலே மோசமாகக் குண்டடிபட்ட சத்தியமூர்த்தி அண்ணாவை அவர் என்னை வைத்து மறித்து திசை மாற்றி அனுப்பிய அதே வெப்பமரத்தடியில் இருந்து கண்டெடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அறிந்தேன். என்னுயிரைக் காப்பாற்றிய அந்த தெய்வத்தின் உயிரைக் காப்பாற்று கடவுளே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

    ஆனால், ஆனால் கொஞ்ச நேரத்திலே ஒரு செய்தி எங்களை இன்னும் ஒரு குண்டுவீச்சாக வீடு வந்து தாக்கியது, தெய்வங்களும் என்னைக் காப்பாற்றிய தெய்வத்தைக் கைவிட்டு விட்டனவென்று.......

    நெஞ்சம் கனக்க, கண்கள் பனிக்க என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை.....
    ஏன், ஏன் இப்படி?
    என்ன செய்தார் அந்த அண்ணா?
    காலையில் புறப்பட்டு பாடசாலை வந்தது தான் அவர் தப்பா?
    இல்லை படித்து முன்னேறி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைத்தது தான் அவர் தப்பா......?

    என்று ஆயிரம் ஆயிரம் விடை கிட்டா கேள்விகளுடன் நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.....

    காலங்கள் உருண்டன அந்த அண்ணனுக்கு கூட பிறந்த இரு தம்பிகள் இருவரும் கல்வி கேள்விகளில் சிறந்த இரட்டைப் பிறவிகள், ஒரு நாள் ஒன்றாகவே சேர்ந்து இருவரும் தங்களை தாங்களாகவே விடுதலைப் போராளிகளுடன் இணைத்துக் கொண்டனர்.......

    இந்த இரண்டாவது வெள்ளிக் கிழமை விடியலும் மீள முதலாவது வெள்ளிக் கிழமை விடியலில் நான் எடுத்த முடிவை மேலும் வலுவாக்கின........

    போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!
    Last edited by ஓவியன்; 31-08-2007 at 10:54 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகின்றார்கள் என்பதை உரக்கச்சொல்லியிருக்கின்றீர்கள்.

    இது கதையல்ல நிஜம்!!!!!

    இப்படியான ஓராயிரம் ரணமான கதைகள் நம் நெஞ்சங்களில் ஏராளம்....................

    நான் யாழில் பிறந்தவன் அல்ல என்றாலும் யாழ்தந்த மைந்தர்களின் நல் நண்பன் நான்!!.... என்ற வகையில் என் நெஞ்சை பிளிந்தெடுத்தது உங்களது இந்த இரண்டாவது வெள்ளிக்கிழமை விடியல்

    ( உங்கள் 7000 ஆம் பதிப்புக்கு எனது வாழ்த்துக்கள் )
    Last edited by Narathar; 31-08-2007 at 12:32 PM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மீண்டும் மீளமுடியா துயர் கொள்ளவைத்து விட்டீர் ஓவியரே..
    எங்கள் கண்கள் பனிக்கிறது. உங்களை காப்பாற்றிய அந்த அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
    போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!
    சரியாகச் சொன்னீர் அண்ணா. உண்மை.
    உங்களின் 7000 வது பதிப்பு என்றும் எங்கள் நெஞ்சில் நீங்கா துயராய் இருக்கும் 6000 வது பதிப்பைப் போலவே..

    உங்களுக்கு முதலில் பின்னூட்டம் இட எண்ணினேன்.. நாரதர் முந்திக்கொண்டார்..................
    நன்றிகள் ஓவியன் அண்ணா.
    Last edited by பூமகள்; 31-08-2007 at 11:26 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post

    உங்களுக்கு முதலில் பின்னூட்டம் இட எண்ணினேன்.. நாரதர் முந்திக்கொண்டார்..................
    .[/COLOR][/FONT]


    நான் வாசிக்காமலே பின்னூட்டம் கொடுத்தேன்
    நீங்கள் வாசித்திவிட்டு பின்னூட்டம் கொடுத்துள்ளீர்க*ள்
    அந்தவகையில் நீங்கள் தான் முதலிடம்......

    அழவேண்டாம் அன்புத்தங்கையே
    Last edited by Narathar; 31-08-2007 at 12:38 PM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி நாரதர் அண்ணா....!!:nature-smiley-008:
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    நெஞ்சம் கனக்க, கண்கள் பனிக்க என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை.....
    ஏன், ஏன் இப்படி?
    என்ன செய்தார் அந்த அண்ணா?
    காலையில் புறப்பட்டு பாடசாலை வந்தது தான் அவர் தப்பா?
    இல்லை படித்து முன்னேறி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைத்தது தான் அவர் தப்பா......?

    என்று ஆயிரம் ஆயிரம் விடை கிட்டா கேள்விகளுடன் நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.....

    காலங்கள் உருண்டன அந்த அண்ணனுக்கு கூட பிறந்த இரு தம்பிகள் இருவரும் கல்வி கேள்விகளில் சிறந்த இரட்டைப் பிறவிகள், ஒரு நாள் ஒன்றாகவே சேர்ந்து இருவரும் தங்களை தாங்களாகவே விடுதலைப் போராளிகளுடன் இணைத்துக் கொண்டனர்.......

    இந்த இரண்டாவது வெள்ளிக் கிழமை விடியலும் மீள முதலாவது வெள்ளிக் கிழமை விடியலில் நான் எடுத்த முடிவை மேலும் வலுவாக்கின........

    போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!

    இதற்கு காலம் நிச்சயம் தன் பதிலை சொல்லும்......
    கடவுள் கருணையானவர்..... நிச்சயம் நியாயம் தீர்ப்பார்.....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    அன்பு ஓவியன் அவர்களுக்கு,உங்கள் உண்மை சம்பவம் படிக்கும் போது என் இதயம் கனத்து விடுகிறது.

  8. #8
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    ஏழாயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by Narathar View Post
    போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகின்றார்கள் என்பதை உரக்கச்சொல்லியிருக்கின்றீர்கள்.

    இது கதையல்ல நிஜம்!!!!!

    இப்படியான ஓராயிரம் ரணமான கதைகள் நம் நெஞ்சங்களில் ஏராளம்....................
    இவ்வாறான ரணங்கள் பல நம் நெஞ்சத்திலே புதைந்து கிடப்பது உண்மையே, அந்த ரணங்களை இங்கே மன்றிலே அன்பு உறவுகளுடன் பகிர்ந்து கொள்கையில் ஒரு வகை மன நிறைவு கிடைக்கிறது என்பதாலேயே இங்கே பதிவாக்கினேன்.

    மிக்க நன்றிகள் அண்ணா உங்கள் புரிதலுக்கும் பின்னூட்டத்திற்கும்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by பூமகள் View Post
    உங்களுக்கு முதலில் பின்னூட்டம் இட எண்ணினேன்.. நாரதர் முந்திக்கொண்டார்..................
    நன்றிகள் ஓவியன் அண்ணா.
    அன்பான தங்கைக்கு!

    உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்......
    யார் பின்னூட்டம் முதலில் இட்டாலென்ன எல்லோரும் ஒரே உறவுகள் தானே........
    என்ன செய்வது நெஞ்சமெல்லாம் மீள முடியாத துரமிருப்பதால் பதிவுகளும் அப்படியே பிரதிபலிக்கின்றன போல.......

    இனிமேல் இவ்வாறான பதிவுகளின் எண்ணிக்கையை கொஞ்சம் குறைக்க நினைத்துள்ளேன் சகோதரி!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மலர் View Post
    இதற்கு காலம் நிச்சயம் தன் பதிலை சொல்லும்......
    கடவுள் கருணையானவர்..... நிச்சயம் நியாயம் தீர்ப்பார்.....
    உண்மைதான் மலர்!

    அந்த நம்பிக்கையே நம்மை இன்னமும் வாழ வைக்கின்றது.......
    மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு........

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சாராகுமார் View Post
    அன்பு ஓவியன் அவர்களுக்கு,உங்கள் உண்மை சம்பவம் படிக்கும் போது என் இதயம் கனத்து விடுகிறது.
    Quote Originally Posted by பிச்சி View Post
    ஏழாயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி சாராகுமார் மற்றும் பிச்சி!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •