Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: ஆன்மீக கதைகள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1

    ஆன்மீக கதைகள்

    சிலம்பை மட்டுமே அறிந்த லட்சுமணன்!


    சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றபோது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி ராமனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுக்கொண்டே சென்றாள் சீதை.


    அனுமன் அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரித்து வைத்திருந்து கிஷ்கிந்தாபுரிக்கு ராமர்&லட்சுமணர் வந்தபோது கொடுத்தான்.


    அந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்த ராமர், அவை சீதை அணிந்திருந்தவைதான் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். காதணி, கழுத்து ஆபரணம், கைவளையல்கள் என ஒவ்வொன்றிலும் சீதையின் முழுவடிவம் மனக்கண் முன் தோன்றி ராமரை மேலும் வருத்தியது.


    தம்பி லட்சுமணா, இந்த ஆபரணங்களைப் பார்! இவை அனைத்தும் உன் அண்ணி அணிந்திருந்தவை அல்லவா? எனத் தாங்கொணாத் துயரத்துடன் தம்பியிடம் கேட்டார்.


    லட்சுமணன் கலங்கிய கண்களுடன் காதணியை எடுத்தான். உடனே விலக்கி அப்பால் வைத்தான்! வளையல் களை எடுத்தான். விலக்கி அப்பால் வைத்தான்! கழுத்தில் அணியும் ஆபரணத்தை எடுத்தான். அதையும் அப்பால் வைத்தான்! அடுத்து காலில் அணியும் சிலம்பை எடுத்தான்.

    உடனே,

    அண்ணா... இது அண்ணியினுடையதுதான். சந்தேகமே இல்லை என்று குரலில் வருத்தம் தோயச் சொன்னான்.


    அண்ணியின் பாதங்களைத் தவிர திருவுருவத்தை அவன் ஏறெடுத்தும் பார்க்காதவன். பாதசேவை மாத்திரம் செய்தவன். எனவே, பிராட்டியின் மற்ற ஆபரணம் எதையும் அவன் பார்த்ததில்லை. திருவடியில் அணிந்திருந்த சிலம்பை மாத்திரம் அடையாளம் கண்டு சொன்னான்.
    Last edited by alaguraj; 29-08-2007 at 11:26 AM. Reason: heading change
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    அண்ணி அம்மாவுக்கு சமம்....அம்மாவை எதுக்கு அப்படி பார்க்க வேண்டும்??????????

    பப்பி

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    அந்த விரல் வேண்டும்

    கடவுள் ஒரு நாள் ஓர் ஏழையைக் காண பூலோகம் வந்தார். அந்த ஏழையைச் சந்தித்து,

    உனக்கு என்ன வேண்டும்?என்று கேட்டார்.

    ஏழையோ மிகுந்த ஆசையுடன், எனக்கு பணம், தங்கம், வைரம் எல்லாம் வேண்டும் என்றார்.

    கடவுள் ஒரு விரலை நீட்டி அங்கிருந்த பீரோவைத் தங்கமாக்கினார். ஆனால், ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்டி அந்த வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் தங்கமாக்கினார். அப்போதும் அவன் பேசாமல் இருந்தான். மீண்டும் கடவுள் விரலை நீட்டி அந்த வீட்டிலிருந்த பாத்திரங்களை எல்லாம் தங்க மாக்கினார். அப்போதும் அவன் சிரிக்கவே இல்லை. சோர்ந்துபோன கடவுள் ஏழையிடம்

    இன்னும் உனக்கு என்னதான் வேண்டும்?என்றார்.

    ஏழையோ, அந்த விரல் வேண்டும்! என்றான்.

    கடவுள் மயங்கிக் கீழே விழுந்தார்.

    ஆசைக்கு அளவுண்டு. ஆனால், பேராசைக்கு அளவேது?
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by alaguraj View Post
    சிலம்பை மட்டுமே அறிந்த லட்சுமணன்!


    சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றபோது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி ராமனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஆபரணங்களைக் கழற்றிப் போட்டுக்கொண்டே சென்றாள் சீதை.


    அனுமன் அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரித்து வைத்திருந்து கிஷ்கிந்தாபுரிக்கு ராமர்&லட்சுமணர் வந்தபோது கொடுத்தான்.


    அந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்த ராமர், அவை சீதை அணிந்திருந்தவைதான் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். காதணி, கழுத்து ஆபரணம், கைவளையல்கள் என ஒவ்வொன்றிலும் சீதையின் முழுவடிவம் மனக்கண் முன் தோன்றி ராமரை மேலும் வருத்தியது.
    ஆமாங்க, மரவுரி தரித்து ஆரண்யம் புகுந்த சீதா அத்தனை நகைகளை ஏன் கொண்டுசென்றார்?
    Last edited by தாமரை; 29-08-2007 at 11:40 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    அந்த ஆளு நம்ம இளசுன்னு நினைக்கிறேன்......நான் சொல்றது சரி தானே......

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    மரவிழுதா மலைப்பாம்பா?

    முரடனாயிருந்த தன் மகனுக்கு அரண்மனையில் வேலை வாங்கித் தந்தார் தந்தை. மகனுக்கோ வேலை பிடிக்கவில்லை. எனவே, உடனே தன் மனைவியைத் தேடி ஓடினான் மகன். வழியெங்கும் பேய்மழை. ஊரெல்லாம் வெள்ளம். கும்மிருட்டில் தட்டுத்தடுமாறி, ஆற்றைக் கடந்து, மரம் ஏறி வீட்டை அடைந்து கதவைத் தட்டினான். கதவைத் திறந்த அவன் மனைவிக்கு பகீர்என்றது. கணவன் நனைந்து வந்திருப்பதைக் கண்டாள்.

    இந்த மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்?என்றாள்.

    ஒரு கட்டையைப் பிடித்து.

    கட்டையா... வெள்ளத்தில் பிணங்களல்லவா மிதந்து போய்க் கொண்டிருக்கின்றன? சரி, மாடிக்கு எப்படி வந்தீர்கள்? கீழே கதவு பூட்டியிருந்ததே?

    மர விழுதைப் பிடித்து ஏறி வந்தேன்.
    மரவிழுதா? மரவிழுது ஏது எங்கள் வீட்டுக்கு? என்று வியந்து
    கைவிளக்கை எடுத்து வெளியே பார்த்தாள். மரத்தில் ஒர் மலைப்பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது.

    அப்படி என்ன அவசரம்? என்றாள்.

    உன்மேல் உள்ள அவ்வளவு ஆசை!

    அழியப்போகும் இந்த உடம்பின் மீது அவ்வளவு ஆசையா? இவ்வளவு ஆசையையும் ராமநாமத்தின் மீது வைத்திருந்தால் நல்ல கதியாவது கிடைக்குமே!

    ஒரு கண நேரம் அவளது வார்த்தையைக் கேட்ட அவன் உள்ளத்திலும் \ வானத்திலும் ஒரே நேரத்தில் மின்னல்வெட்ட உண்மையை உணர்ந்தான்.

    ராமநாம மகிமையைஉளப்பூர்வமக உணர்ந்து அமர கவியானான்.

    அவர்தான் பின்னாளில் துளசிதாசஸர் என்ற பெயரில் ராம பக்தராகப் போற்றப்பட்டார்.

    அவர் வடமொழியில் எழுதியதுதான் துளசி ராமாயணம் என்ற பிரசித்தி பெற்ற காவிய நூல்!
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    எள்ளைத் தின்றவன்

    வரகுண பாண்டியன் ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் திருவிடைமருதூர் சிவன்கோயிலுக்காக விளைந்த எள்ளை, கோயிலின் எதிரே காயவைத்திருந்தனர்.

    ஒருவன் வந்து ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து வாயில் போட்டபோது, மன்னன் பார்த்துவிட்டான். ஆனால், எள்ளை அள்ளியவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதைச் சாப்பிடுவதிலேயே குறியாயிருந்தான்.


    மன்னன் அவனை அழைத்து, சிவாலயத்தின் எள்ளைச் சாப்பிட்டால் தண்டனை கிடைக்கும், தெரியுமா?என்றான்.

    தெரியும் என்று நிதானமாகச் சொன்னதுடன் கிடைக்கப் போகும் தண்டனையை அனுபவிக்கக் காத்திருந்தவனைப் போல் சலனமில்லாமல் காணப்பட்டான்.

    உனக்கான தண்டனை என்னவென்று தெரியுமா? என்று கேட்டான் அரசன்.


    தெரியும்... அடுத்த பிறவியில் எருதாகப் பிறந்து, இந்த ஆலயத்தின் வேலைகளுக்காகப் பயன்படுவேன்! என்றான் மகிழ்வோடு.

    வாயைத் திற! என்றான் அரசன் அதட்டலாக. சொல்பவன் அரசனாயிற்றே என்று பயந்து, நடப்பது நடக்கட்டும் என்று வாயைத் திறந்தான் அவன்.

    பாண்டியன் உடனே அவன் வாயில் விரலைவிட்டு நாலு எள்ளை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டு சொன்னான்:

    நீ எருதாகப் பிறந்து ஆலயத்துக்கு உழைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், நானும் உன் வாயிலிருந்த எள்ளை முழு மனதோடு எடுத்துத் தின்றேன்.

    நானும் எருதாகப் பிறந்து உனக்கு ஜோடியாக வந்து நாமிருவரும் சிவாலயத் தொண்டுசெய்து மகிழலாம் என்றான்.

    எள்ளைத் தின்றவன், வரகுணபாண்டியனின் மேன்மையான உள்ளத்தை நினைத்து, வியந்து வாயடைத்துப் போய் நின்றான்.
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    [COLOR="Red"]அழியா ஊர் அண்ணா மலை[/COளோற்]


    கன்னட தேசத்தில் வீரசைவர்கள் அதிகம்.

    வங்காளம் காளியையும்,
    மகாராஷ்டிரம் கணபதியையும்,
    கேரளா மகாவிஷ்ணுவையும்,
    தமிழ்நாடு முருகனையும்

    அதிகமாகக் கொண்டாடுகிற மாதிரி,
    கர்நாடகம் சிவ வழிபாட்டில் ஆர்வம் உடையது. கழுத்திலேயே லிங்கத்தை அணிந்துகொள்ளும் லிங்காயத்துகள் கன்னடத்தில் அதிகம்.

    இப்படிப்பட்ட வீரசைவ ராக விளங்கிய ஒருவரை அண்ணாமலையின் அக்கினி ஈர்த்தது. அவர்தான் குகை நம சிவாயர்.

    அண்ணாமலையில் குகைகள் அநேகம். அதில் குடியிருந்து தவம் செய்த பல மகான்களில் ஒருவரே குகை நமசிவாயர். அவர் பெருமை அறியாத அவ்வூர் மக்கள் அவருக்கு இழைத்த துயரங்கள் அதிகம்!

    அவமானப்படுத்தும் ஆர்வத்தில் அவருடன் மோதியவர் அநேகம்!

    அத்தனையும் கடந்து அனலாக அமர்ந்தவர் குகை நமசிவாயர்.

    அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் இருந்து சம்பவம் ஒன்று சொல்வார்கள். ஆடு வளர்க் கும் இடைக்குலத்தார் ஒருவரது சினையாடு இறந்துவிட்டது. அதன் வயிற்றில் இரண்டு குட்டிகள் இருந்தன.

    குட்டிகளைப் பிரசவிக் குமுன் சினையாடு இறந்துவிட்டதால், இடையருக்குப் பெருநஷ்டம். எனவே, யாராவது அதன் மாமிசம் விரும்பி வாங்குவாரா என்று விலை பேச முயன்றார்.

    அந்த ஊர் மக்களில் வம்பன் ஒருவன், குகை நமசிவாயரைக் கேவலப்படுத்த நினைத் தான்.

    மலைமேல் உள்ள சாமியார் மாமிசப் பிரியன். ஆட்டை அவனுக்கு நல்ல விலைக்கு விற்கலாம்என்றான்.

    ஆடு மேய்ப்பவரும் அறியாமையுடன் குகை நமசிவாயரிடம் ஆட்டை விற்க வந்தான். வந்தவனது அறியாமையை உணர்ந்த நமசிவாயர், நாளை வந்து ஆட்டின் விலையை வாங்கிக் கொண்டு போ! என்று அனுப்பினார்.

    அண்ணாமலையார் ஆக்ஞை இல்லாமல் இறந்த ஆடு தம்மிடம் கொண்டு வரப்படவில்லை என்று உணர்ந்த குகை நமசிவாயர், கருணைக் கடலாகிய அண்ணாமலையாரை நினைத்து வெண்பா பாடினார்.

    விபூதியை இட்டார். துள்ளி எழுந்தது தாய்ஆடு. குட்டிகளை ஈன்றது. அதைத் தடவிக் கொடுத்து இலைதழைகளை உணவாக இட்டார் நமசிவாயர்.

    மறுநாள் ஆட்டின் விலை வாங்க வந்த இடையர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். குட்டிகளைத் தோள்மேல் சுமந்துகொண்டு தாயாட்டுக்குத் தழைகள் போட்டபடி ஊருக்குக் கூட்டி வந்தார்.

    ஊரே அதிசயம் உற்றது. ஆனால், இடையரைச் சுவாமிகளிடம் ஏவிவிட்ட வம்பனுக்கு இது வருத்தம் அளித்தது. சுவாமிகளை மட்டம்தட்ட அடுத்து ஒரு திட்டம் போட்டான். தனக்கிணையான வம்பர் ஏழெட்டு பேரைத் திரட்டிக்கொண்டு ஒரு நாடகம் நடத்தினான். ஆரோக்கியமான வாலிபன் ஒருவனை இறந்த மாதிரி பாடையில் படுக்க வைத்தான். சுவாமிகள் முன்வைத்து அவன் இறந்த மாதிரி அழுது நடித்தான். ஆட்டை எழுப்பிய மாதிரி இவனையும் எழுப்பித் தரவேண்டும் என்று வேண்டினான். அவ்வளவும் நாடகம். அவனைச் சுவாமிகள் எழுப்பியதும், அவன் சாகவே இல்லை என்பதைச் சொல்லி சுவாமிகளைக் கேவலப்படுத்த நினைத்தான்.

    பச்சை ஓலையில் படுத்திருந்த இளைஞனைப் பார்த்த குகை நமசிவாயர் அனைத்தையும் உணர்ந்தார். அலட்சியமாக, போனவன் போனவன்தான்... யார் இவனை எழுப்ப முடியும்? என்று கைகளைத் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார். ஹே! என்று அவரைக் கேலி செய்துவிட்டு எழுந்திரு... எழுந்திரு... இவன் சாகவே இல்லை!என்று கூத்தாடினான் வம்பன். அந்தோ... படுத்தவன் படுத்தவன்தான்... எழுந்திருக்கவே இல்லை. சுவாமிகள் வாக்கின்படி போயே விட்டான்!


    இப்படிப் பலர் குகை நமசிவாயர் மனம் நோக நடந்தபோதும் அண்ணாமலையைவிட்டு நீங்க அவருக்கு மனம் வரவில்லை.

    ஒருநாள் சீண்டல் அதிகமாகவே அந்த ஊர் மீது கோபம் வந்து, பாவிகள் வாழும் ஊர். கொலை செய்தாலும் கேள்வி கேட்க ஆள் இல்லாத கொடுமையான ஊர். வலிமைமிக்க இளைஞர்கள்கூட அழுது புலம்பும் ஊர். பாதகர் வாழும் ஊர் என்று திட்டித் திட்டிப் பாடிவிட்டு அழியும் ஊர் அண்ணாமலை என்று பாட அடியெடுத்தார் குகை நமசிவாயர்.

    சிவபெருமானோ குறுக்கிட்டு, அடேய்... நாம் இவ்வூரில் இருக்கிறோம்... பார்த்துப் பாடு! என்று குரல் கொடுத்ததும், உருகிப் போய் மனம் கசிந்து பாட்டை மாற்றி அழியா ஊர் அண்ணாமலை என்று பாடினார்.

    கோளர் இருக்குமூர், கொன்றாலும் கேளா ஊர்
    காளை யரே நின்று கதறும் ஊர் நாளும்
    பழியே சுமக்கும் ஊர். பாதகரே வாழும் ஊர்
    அழியா ஊர் அண்ணா மலை

    சொல்வேந்தர் சுகி சிவம் திருவண்ணாமலையில் ஆற்றிய சொற்பொழிவில் சொன்ன கதை இது..
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    வாசுகியும் ஊசியும்!



    திருவள்ளுவர் தினமும் உணவருந்தும்போது தன் மனைவி வாசுகியை அழைத்துத் தவறாமல் இலையின் அருகில் ஒரு கிண்ணத்தில் நீரும், அதனோடு ஓர் ஊசியையும் வைக்கச் சொல்வார்.

    அப்படியே செய்து வந்தார். எதற்கு இப்படி வைக்கச் சொல்கிறீர்? என்று ஒரு நாளும் தன் கணவரை அவர் கேட்டதில்லை.

    திருவள்ளுவர் முதுமையில் தளர்வுற்றிருந்தபோது வாசுகியை அருகில் அழைத்து, நான் தினமும் உணவருந்தும்போது இலையின் அருகில் ஒரு கிண்ணத்தில் நீரும், அதன் அருகில் ஒரு ஊசியையும் வைக்கச் சொல்வேன்.

    நீயும் இதுநாள்வரை தவறாமல் வைத்து வந்தாய். நான் எதற்கு அவ்வாறு வைக்கச் சொல்கிறேன் என்று நீ இதுவரை என்னைக் கேட்டதில்லை.

    அதன் காரணத்தை இப்போது கூறுகிறேன். நீ எனக்கு தினமும் உணவு பரிமாறும்போது அதில் ஒன்றிரண்டு கீழே சிந்திவிட்டால் அதை இந்த ஊசியால் எடுத்து, கிண்ணத்திலுள்ள நீரில் நன்றாக சுத்தம் செய்து இலையில் போட்டுக்கொள்ளத்தான் அப்படிச் செய்தேன்.

    ஆனால், அந்த ஊசிக்கான வேலை இதுவரை ஏற்பட்டதில்லை. ஒரு நாள்கூட உணவைக் கீழே சிந்தாமலேயே நீ பரிமாறியிருந்தாய் என்றார்.
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஹீம்..அதெல்லாம் அந்தக்காலம்.....இப்பல்லாம் துணைவியார் சீரியல் பார்த்துக்கொண்டே......."பசிச்சா போய் போட்டு சாப்பிடவேண்டியதுதானே...நல்ல கட்டத்துல நொய் நொய்ன்னுகிட்டு"−இப்படித்தான் சொல்கிறார்கள். என்னத்த செய்ய..திருமணத்தன்று மட்டும் வள்ளுவனும் வாசுகியும் போல வாழ்கன்னு வாழ்த்தறாங்க.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by puppy View Post
    அந்த ஆளு நம்ம இளசுன்னு நினைக்கிறேன்......நான் சொல்றது சரி தானே......
    ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ!

    பப்பி, எனக்கு அவ்வளவு வெவரம் பத்தாதுங்கோ!!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    ஆமாங்க, மரவுரி தரித்து ஆரண்யம் புகுந்த சீதா அத்தனை நகைகளை ஏன் கொண்டுசென்றார்?
    அது புதுசா துறவரம் தரிச்சா அப்படித்தான்... ரூல்ஸ் தெரியாம நகையெல்லாம் கொன்டு போயிருக்காங்க.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •