கன்னிகை; அந்தக் காரிகை;
அவளழகைத்
துல்லியமாய் வரைய
இல்லையொரு தூரிகை!
கறையில்லாத
கற்பும் பொற்பும் அமைந்தவள்;
ஒர்
பொண்ணுக்குரிய
நான்கு குணங்களும்
ஒரு சேரச் சமைந்தவள்!
நீள் விழி
நிலம் பார்க்க நடப்பவள்;
தக்க வரன்
தனக்கு வாய்க்க வேண்டுமெனக்
குல தெய்வத்தைக்
கும்பிட்டவாறு கிடப்பவள்!
ஏழை என்பதால்.
Bookmarks