மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 4 லில் உள்ள லொள்ளபுரி மந்திராசலோனை ரகசியக்கூட்டம் அருமையாக உள்ளது.....
வாத்தியாரே உமக்கும் ஓவியருக்கும் ஏதாவது இதுவா.... இந்த காய்ச்சு காய்ச்சுகிறீர்....ஹா ஹா
ஓவியரே ஒரு பெண்ணை கட்டி கொண்டதற்கே ஓவ்வொருத்தரும் அழுது கொண்டு நாய் படாத பாடு பட்டு அலைகிறார்கள்...... பரவாயில்லை நீர் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்....(பின்ன 36 பேருகிட்ட அடி வாங்குறதுன்னா சும்மாவா)லொள்ளு : பற்றாகுரைக்கு ஓவியருக்கு 36 மனைவிகள் இருந்தனராம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
மன்னரே...ஓவியரை இந்த காச்சு காச்சிட்டீங்களே...மந்திரி பதவியை ராஜினாமா பண்ணிட்டு போயிடப்போறார்....எதுக்கும் இன்னொரு ஆள ரெடி பண்ணி வெச்சுக்குங்க....காச்சறதுக்கு...சூப்பர் வாத்தியாரே...அசத்துறீங்க.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இங்க வந்து விமர்சிக்கவே பயமா இருக்கு..! அப்புறம் லொள்ளர்புரி வரலாற்றில் என் பேரையும் எழுதிட்டா.? அப்படியெல்லாம் செய்ய மாட்டார் நம்ம லொள்ளர் புரி வேந்தர்..!
போரில் கால் பிடரியில் அடிக்காமல் முகத்தில் அடித்து புறமுதுகிட்டு ஓடிய சக்ரவர்த்தி லொள்ளுவாத்தியார்.... வாழ்க.. வாழ்க..!!!
அன்புடன்,
இதயம்
அனுப்புநர்
வாத்தியாரின் விசிறிகள்
தமிழ் மன்றம்
பெறுநர்
சக்கரவர்த்தி லொள்ளுவாத்தியார்
லொள்ளபுரி
பொருள்
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 5 வெளிவராததை கண்டித்து
வீராதி வீர
கவலோல வளையா அட்சி புரிந்த
சூராதி சூர
எதிரிகளிடம் புற முதுகு கண்ட
வரலாறு கண்ட
பல போர்களில் விழ்ந்து புண் கண்ட
லொள்ளபுரி சக்ரவர்த்தி
மாவீரன் லொள்ளுவாத்தியார்
அவர்களுக்கு என் முதற்கண் வணக்கம்
கொலை நோக்கு பார்வை கொண்ட மன்னவே தாங்கள் தங்களின் வீர தீர வரலாற்றை எதிரிகளிடம் புற முதுகு காட்டி ஓடிவந்த காலத்தால் அழியாத மண்சுவற்றில் எழுதி வருகிறீர் என்பதை இந்த நாடே அறியும்...
ஆட்டின் கண்ணீரை காணமாட்டாது பிரியாணி ஆக்கிய பெருந்தகையே உம்முடைய வரலாற்றை இந்த உலகமே காணவேண்டாமா....
அட்சய முனைக் காவலன்........
மாமமன்னன் ஓவியன் உம் சபை மந்திரியா..........?
நீர் எவ்வளவு காவல் வேண்டுமானாலும் வைத்துகொள்ளும் நான் உம் நாட்டை பிடிக்காமால் விடுவதில்லை
− தருங்காபுரி வீரன் மனோஜ்
போன்ற பல அந்நிய நாட்டு சதிகளை முறியடித்த லொள்ளரே....
உமக்கு என்ன ஆயிற்று
நீதி தவறா மன்னவரே ஐந்தாவது பாகத்தை ஆசையோடு காண ஓடோடி வந்த எங்களை காண விடாது ஏமாற்றி வீட்டீரே.....
விரைவில் மாவீரன் லொள்ளுவாத்தியார் − ஐந்தாவது பாகத்தை இனிப்புசுவை,காரச்சுவை.... இல்லை இல்லை அது என்ன.....ங்..ங்.. நியாபகம் வந்துட்டு... சொற்சுவை பொருட்சுவை குறையாது தரும்படி மிரட்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
Last edited by மலர்; 05-09-2007 at 04:29 AM.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
அய்யோ யாரிது மலரா.....அடங்கொப்புரானே என்னா போடு போடுது இந்த பொண்ணு.மலர் அசத்திட்டீங்க நீங்களே ஒரு வரலாறு படைக்க வேண்டியதுதானே...மிக அருமையாய் எழுதுகிறீர்கள்
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
லொள்ளுவாத்தியார் நிரைய அடி வாங்கி பழக்கபட்டவர் பிச்சி
நன்றி பூமகள் மற்றும் இலக்கியன்
ஆமாம் சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி கம்முனு கதை எழுதீட்டு இருந்தவன அட்சயமுனை காவலனு ரவுசு பன்னினா நாம அதவிட ரவுசு பன்னுவமுல்ல
ஓவியரு அப்படி எல்லாம் போக மாட்டாரு. அடுத்த ஆளா நீங்களே சொல்லிருங்க காய்ச்சரதுக்கு. எனக்கு என்னவோ ஆசோ தான் ரொம்ப ஆர்வமா இருக்கிறார் போல தோனுது
ஞாயக படுத்தீட்டீங்களா, கவல படாதீங்க உங்களுக்கும் மிக பெரிய ரோல் கொடுத்துடலாம்.
மலர் நீங்கள் பதித்த பதிவு உனிகோடாக்கம் பன்னவில்லை. ஜன்க் (Junk)வார்த்தைகளா தெரிகிறது. சரி செய்து விடுங்கள்.
அடுத்த பாகம் யாரையும் காய்ச்சாமல் சிறிது ரொமான்ஸ் பாகமாக எழுதுகிறேன்.
Last edited by lolluvathiyar; 04-09-2007 at 01:26 PM.
அடடே! ஒரு 18 −ஆம் நூற்றாண்டே இங்கே உலாவிக்கொண்டிருக்கிறதே!
நடக்கட்டும், நடக்கட்டும்....
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
வாத்தியார்.. லொள்ளு என்ற உங்கள் முதல் பெயர் ஏற்றதுதான்...
அதே போல் மாவீரன் என்பது லொள்ளுதானே...??? :−)
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
மாவிரன் லொள்ளுவாத்தியார் பாகம் 5
பாகம் 4 - லொள்ளபுரி மந்திராசலோனை
அந்தபுரம்
(இதுவரை லொள்ளபுரி அரன்மனை, மந்திராச்லோனையை பார்த்து விட்டீர்கள். நம் கதைநாயகன் லொள்ளுவாத்தியார் இருக்கும் அவருக்கு கதைநாயகி இல்லாமல்ஒரு காவிய கதை இருக்கலாம்? அதுவும் அந்தபுரமும் காதல் காட்சிகள் இல்லாமல் இருந்தால் மக்களுக்கு பீலிங்ஸ் வந்து விடுமே. ஆகையால் இந்த பாகத்தில் நேயர்களை லொள்ளபுரி அந்த புரத்திற்க்கு அழைத்து செல்கிறோம்.)
சலக் சலக் என்று ஒரு சத்தம். அது என்ன சத்தம். படகு வலிக்கும் சத்தம் போல இருக்கிறதே.
ஆம் மாவிரன் லொள்ளுவாத்தியார் லொள்ளபுரி நாட்டில் சுற்றிலிம் தன்னீர் சூல்ந்த ரம்மியமான இடத்தில் தான் தன் அந்தபுரத்தை அமைத்திருகிறார். அங்கு தான் இப்பொழுது படகில் போய் கொண்டிருகிறார். கூவம் நதியில் கொஞ்சும் எழிலை ரசித்த வன்னம் மெய் மறந்து தன் படகில் போய் கொண்டிருந்தார். நதிகறையின் இருபுரத்திலும் அடர்ந்து வளர்ந்திருக்கும் பசுமை ததும்பிய காட்டாமனக்கு செடிகளும், பார்த்தீனிய செடிகளும், எருக்களாம்பால் செடிகளும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு தங்கள் அழகை வெளிபடுத்தின. அதன் கிலைகளில் மீது அமர்ந்து காக்கைக*ள் கானம் பாடியது லொள்ளுவாத்தியாருக்கு தெய்வீக கானம் பாடியது போல இருந்தது
படகு மெல்ல அந்தபுரத்தை நெருங்கி விட்டன. நமது மன்னன் லொள்ளுவாத்தியாருக்கு தன் பட்டமகிஷியை பார்க்க ஆவல் கரைபுரண்டு ஓடியது. வானுயர அந்தபுரத்தை பெருமூச்சுடன் பார்த்தார். சந்திரன் வெளிச்சத்தில் அந்தபுரம் ஜொளித்தது. மாவிரன் லொள்ளுவாத்தியாரின் பார்வை அந்தபுர நிலாமுற்றத்தின் மீது சென்றது. நிலா முற்றத்தில் அவருடைய தர்மபத்தினி நின்று கொண்டிருந்தாள். பூரன சந்திரனின் கிரகனங்கள் அவளின் பட்டு கன்னங்களில் மீது பட்டு தெரித்து மின்னியது. நமது லொள்ளுவாத்தியார் ரானியை பார்த்தார் நிலாவை பார்த்தார். இதில் எது சந்திரன் என்று அவருக்கு குழப்பம் உண்டாகியது.
அந்தபுரத்தை நெருங்கியவுடன், அரன்மனை உள்ளே அவசரமாக நமது காதல் மன்னன் மாவீரன் லொள்ளுவாத்தியார் கட்டுக்கடங்கா ஆவலுடன் பிர*வேசித்தார். அவரை அந்தபுரத்து சேடிபெண்கள் வரவேற்றனர். ஆனால் ரானி வராததை கண்டு ஏமாற்றம் அடைந்தார்.
ஒரு சேடி : "மூவுலகை ஒரு குடையில் கீழ் ஆண்ட மன்னன் மாவீரன் லொள்ளுவாத்தியாரே, நமது இரண்டு நாள் நீங்கள் வராததால் நமது ரானியார் கோவித்து கொண்டு மஞ்சத்தில் இருகிறார்"
இருக்கிற* இரண்டு கால் பாய்ச்சலில் மாவீரன் லொள்ளுவாத்தியார் படுக்கை அரையை நோக்கி ஓடினார். அங்கு அவருடைய ரானி குப்பற படுத்திருந்தார்
ரானி மகா ரானி
லொள்ளுவாத்தியாரை மணந்த பாக்கியசாலி யார் என்று வாசகர்களின் ஆவலை இதற்க்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று அவரை அறிமுக படுத்துவோம்.
மாவீரன் லொள்ளுவாத்தியாரின் மனைவி நாலு அடி உயரம் 48-36-48 சைசில் இருப்பார். இவருக்காகவே அந்தபுர வாயில் கதை மாற்ற வேண்டி இருந்ததாம். மாநிறமாக இருப்பார், ஆனால் அழகு மாவீரன் லொள்ளுவாத்தியாருக்கு கொள்ளை அழகாகவே காட்சி அளிப்பார். இரெண்டே இருண்டு பற்கள் மட்டும் அரை அங்குலம் தான் எந்தி இருக்கும். மற்றபடி நல்ல அழகிதான்.
லொள்ளபுரி நாட்டிற்க்கு பக்கத்தில் உள்ள அயோத்தி குப்பம் மன்னர் ஆதித்த கரிமுகத்தானின் செல்வ மகள் அவள். நமது மாவீரன் லொள்ளுவாத்தியாரை காதலித்து கரம் பிடித்தவர். (அந்த காதல் கதையை இன்னொரு பாகத்தில் பார்க்கலாம்) அடடே மாவீரன் லொள்ளுவாத்தியாரின் பட்ட மகிசியின் பெயரை சொல்லாமல் இழுத்தடிப்பது உங்களுக்கு கோபமா? திருபுவன சுந்தரி பெரியபிராட்டி கருப்பாயி தேவி என்பது அவரின் திருநாமம். நமது லொள்ளுவாத்தியார் அவரை சுருக்கமாக கருவாச்சி என்று செல்லமாக் அழைப்பாராம்.
லொள்ளுவாத்திர் மஞ்சத்துக்கு அருகில் சென்று கருப்பா ரானியின் தோளில் தனது வஜ்ரம் போன்ற கரத்தை வைத்தார். அவளோ அதை "உகும் :" என்று தட்டி விட்டார்.
லொள்ளு : "தேவி என் மீது கோபமா"
கருப்பா : "ஏன் இரண்டு நாள் வரவில்லை, என்னை பார்க்க"
லொள்ளு : "அரசாகத்தின் அவசர வேலை நிரைய இருந்தன, அதான் வரமுடியவில்லை, என் அழகே"
கருப்பா திரும்பி காதல் சாம்பார் கொட்டும் நமது லொள்ளுவாத்தியாரின் திரு திரு என விழிக்கும் கண்களை ஏறிட்டாள்.
அவளின் அந்த பார்வை லொள்ளுவாத்தியாரை நீர் சூழலில் சிக்கிய இலை போல திக்குமுக்காட செய்தன. உடனே தனது காதல் வசனங்களை ஆரம்பித்து விட்டார்.
லொள்ளு :
"என் கன்னே, பவள வாயே, கத்திரிகாய் செடியே, முர்ங்கை மரமே, தென்றலே, சுறாமீனே, ருசிக்கும் நண்டே.
குதிரை வால் முடி போல் இருக்கும் உன் தலைமுடியின் தன்மை என்னை மதி மயக்கி விட்டதடி
அதில் சூடியிருக்கும் எருக்களம்பால் பூவின் வாசம் என் இதயத்தை மயக்கி விட்டதடி
சகாரா பலைவனம் போல இருக்கும் உன் நெற்றி என் சிந்தை கலக்கி விட்டதடி
தவளை போன்ற உன் ஆழமான விழிகள் என் நெஞ்சை ஓட்டை போட்டுவிட்டதடி
கொக்கு போன்ற உன் மூக்கு எனக்கு இந்திரன் பல்லக்கை நினைவு படுத்ததடி
திமிங்கலத்தை போன்ற உன் இதழ்கள் என் உள்ளத்தை கொள்ளை கொண்டு போய் விட்டதடி
யானையை போன்ற உன் கன்னம் என்னை அதிர செய்து விட்டதடி
தென்னை மரம் போன்ற உன் கழுத்து என்னை சிறைபடுத்தி விட்டதடி"
கருப்பா : "நாதா போதும் உங்கள் வர்னனை, கழுத்து வரைக்கு தான் அனுமதி. அதற்க்கு கீழ் வர்னிக்க தனிக்கை செய்ய பட்டு விட்டது"
லொள்ளு :
"கன்னே, புயற்காற்றே, வெள்ளை பூண்டே, கொத்தமல்லியே
உன் இனிய குரல் தேங்காய் உடைப்பது போல் இனிய கானம் எழுப்பதடி
உன் அழகிய சிரிப்பு எருமை கனைத்தது போல் இருந்ததடி
உன் பார்வை, எனக்கு அயிரை மீனை நினைவு படுத்ததடி
என் காதல் புறாவே"
கருப்பா : "நாதா போதும் போதும், உங்கள் போன்ற கவி ஆற்றல் படைத்த உத்தமரை அடைய நான் எத்தனை பாக்கியம் செய்தவள்"
லொள்ளு : "தேவி, கருவாச்சி, எனக்காக உன் இனிய பாதங்களால் ஒரு நடனமாட கூடாதா"
கருப்பா : " நான் ஆட வேண்டுமென்றால் இந்த லொள்ளவன் பாட வேண்டும்"
லொள்ளு : "முதலில் நீ பாட வேண்டும், இதோ வீனை மீட்டு பாட நான் கேட்க ஆவலாய் ஓடோடி வந்தேன்"
கருவாச்சி தன் அழகிய கரங்களால் வீனையை மீட்டு இனிய கீதம் பாட ஆரம்பித்தாள்
லொள்ளார வேலனே வேலா
இசையிது
லொள்ளார வேலனே வேலா
நிறுத்தி விட்டாள்
லொள்ளு : "ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் கருவாச்சி, உன் பாட்டை கேட்க நான் உழுந்தடித்து ஓடி வந்தேன்"
கருப்பா : "சீ போ மன்னா எனக்கு வெக்கமாக இருக்கு, நீங்களே அனத்துங்கள் "
லொள்ளு :
"செந்தமிழ் நீர்மோரால்
நிலாவென குளிப்பாள்
பைந்தமிழ் இதழில்
கருவாட்டு குழம்பு தருவாள்
அதை பருகிட நாக்கை நீட்டுவான்"
இப்படியே இவர்கள் காதல் காட்சி நீண்ட நேரம் சென்றது. இனி நாமும் இவர்களின் தனிமையை உனர்ந்து அவர்களை தொந்தரவு செய்யாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவத் தான் சிறந்த பன்பாடு.
தொடரும்
போர் கோசம் - 6
(அடுத்த பாகங்களில் வழக்கம் போர் காட்சிகள் தொடங்கலாம்)
Last edited by lolluvathiyar; 12-09-2007 at 10:26 AM.
வாத்தியாரே உமது அந்தப்புரத்ததை எழுதி இந்தப்புரத்திலிருந்த்து எல்லோரையும் விரட்டி விட்டீரே இது நியாயமா....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks