யதார்த்தத்தின் இடிபாடுகளில்
சிக்குண்டு சிதைந்துப்போன
என் சின்னஞ்சிறு உணர்வுகள்
இன்று என்நிலைகள் பலமாறியும்
ஏனோ துயில்கொண்ட துறவியாய்
துளிர்விட ம(ரி)றுக்கின்றன?!
யதார்த்தத்தின் இடிபாடுகளில்
சிக்குண்டு சிதைந்துப்போன
என் சின்னஞ்சிறு உணர்வுகள்
இன்று என்நிலைகள் பலமாறியும்
ஏனோ துயில்கொண்ட துறவியாய்
துளிர்விட ம(ரி)றுக்கின்றன?!
Last edited by சுகந்தப்ரீதன்; 27-08-2007 at 04:23 AM.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
துயில் கொண்ட துறவி என்றாவது துயிலெழ வாய்ப்புண்டு...ஆனால் மரித்துவிட்டால் மறு எழுச்சி இல்லை.உணர்வுகளை உடனே தட்டி எழுப்புங்கள்...அழகிய சிறு கவிதை..வாழ்த்துக்கள் ப்ரீதன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன். உணர்வுகள் எப்போது மரிக்கின்றனவோ அப்போதே மனிதனின் ஆன்மா மரித்து விடும். வெறும் கூடுதான் உலாவும். தொடருங்கள்.
துயில் கொண்ட துறவி..
கலைந்து
எழுகையில் ஞானப்பிறவி.
ஞானம் விழிக்கையில்
உணர்வுகள் துளிர்க்கும்
இதுதான் மனிதபிறவி.
-அமரன்
துறவியை ச்சீக்க்ரமே துயிழெழுப்புங்கள்...................
மரித்துவிட விடாதீர்கள்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
சின்னஞ் சிறு உணர்வுகள்
சிலிர்த்து,
வெளிப்படுத்தபட வேண்டியவை!
யதார்த்த இடிபாடுகளிடை
காணாமல் போக வேண்டியவையல்ல
சுகந்த ப்ரீதா.......
இடிபாடுகள் பெரிதாகும் முன்
தோண்டியெடுத்து உயிர் கொடுங்கள்
ஒரேயடியாக மரித்து விடாமல்....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks