அப்ப செத்து
அஞ்சாறு நாளாகல
சொத்தப் பிரிக்க
பங்காளில ரண்டுபேறும்
பஞ்சாயத்த கூட்டிட்டானுக,
தெண்னந்தோப்ப நானெடுத்துக்குர
வாழத்தோப்ப நீவெச்சுக்கன்னா
அண்னங்கார, அப்ப
அத்தோரம் இருக்கற
நஞ்சைய நான் வெச்சுக்கர
ஊருக்கு வெளிய இருக்குற
கரிசக்காட்ட நீவெச்சுக்கன்னா தம்பி,
இவனுக இப்படியிருக்க
பட்டுப்பொடவைய பாதியா
பிரிச்சுக்கலாம்,
காசுமாலைய உருக்கி நான்
நெக்லஸ் செஞ்சுக்குற,
ஒட்டியாணத்த வித்து நீ
வளையல் பண்னிக்கனா
மருமக,
ஒத்தையா இருக்குற
ஆத்தாலப்பத்தி எவனும்
பேசல, இவனுககிட்ட
சோறு வாங்கி திங்கறதுக்கு
பதிலா அவரோடவே போரேன்னு
பாலுங்கிணத்துப் பக்கமாப்போனா
ஆத்தா.
Bookmarks