Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: பாகப்பிரிவினை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0

    பாகப்பிரிவினை

    அப்ப செத்து
    அஞ்சாறு நாளாகல
    சொத்தப் பிரிக்க
    பங்காளில ரண்டுபேறும்
    பஞ்சாயத்த கூட்டிட்டானுக,

    தெண்னந்தோப்ப நானெடுத்துக்குர
    வாழத்தோப்ப நீவெச்சுக்கன்னா
    அண்னங்கார, அப்ப
    அத்தோரம் இருக்கற
    நஞ்சைய நான் வெச்சுக்கர
    ஊருக்கு வெளிய இருக்குற
    கரிசக்காட்ட நீவெச்சுக்கன்னா தம்பி,

    இவனுக இப்படியிருக்க
    பட்டுப்பொடவைய பாதியா
    பிரிச்சுக்கலாம்,
    காசுமாலைய உருக்கி நான்
    நெக்லஸ் செஞ்சுக்குற,
    ஒட்டியாணத்த வித்து நீ
    வளையல் பண்னிக்கனா
    மருமக,

    ஒத்தையா இருக்குற
    ஆத்தாலப்பத்தி எவனும்
    பேசல, இவனுககிட்ட
    சோறு வாங்கி திங்கறதுக்கு
    பதிலா அவரோடவே போரேன்னு
    பாலுங்கிணத்துப் பக்கமாப்போனா
    ஆத்தா.
    Last edited by rocky; 24-08-2007 at 03:52 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    பணம் பாதாளம் வரை பாயும் ராக்கி

    பணத்தின் முன் மனிதர்களின் பாசம் பினம் பெற்ற தாயும் உற்றஉறவும் சமம் அதை அருமையாக கவிதைவடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கிராமத்து வாடையில் ஒரு கவிதை. நாட்டாமை படத்துல முதல் காட்சி நிழலாடுகிறது. சொத்துக்களுக்காக சொந்தங்கள் அடித்துக்கொள்ள ஒப்பந்த பந்தம் போன இடத்தை நாடுகிறாள் ஒருத்தி. இவனுக கையால சோறு திங்கிறதை விட பால் வாங்கிக்கிறது மேலானது என முடிவுசெய்த முடிவு தீயாக சுடுகிறது. நிஜம் எப்போதும் சுடுமாமே...ரொம்ப வலிக்கிறது. ராக்கி. பாராட்டுக்கள். சிலையின் முகம் அடையாளம் காணமுடிகிறது. கவர்வதற்காக இன்னும் செதுக்கலாம். தொடருங்கள்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பெத்தெடுத்த உள்ளங்கள்,
    பித்துப்பிடிக்குது...
    சொத்துப்பிரிக்க அல்லாடும்,
    பிள்ளைகளைப் பார்த்து...

    கிராமிய நடையில் வந்த கவிதை அழகானாலும்,
    சில சொற்பதங்கள் எழுத்துப் பிழையா அல்லது, கிராமிய நடையா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.
    தவிர்த்து விட்டுப் பார்த்தால், கிராமிய வாழ்நிலைகளில், உயில் என்ற ஒன்று இல்லாமல்,
    பெரியோர்கள் முன்னிலையில்
    பிரித்துக் கொள்ளும், தீர்த்துக்கொள்ளும் அந்த சூழ்நிலையை
    மனக்கண்ணில் தெளிவாக நிறுத்திய கவிதைக்குப் பாராட்டுக்கள் ரொக்கி...
    தொடருங்கள்...

    வித்தியாசமான கவிதைக்காக 200 iCash.
    Last edited by அக்னி; 24-08-2007 at 07:15 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உத்த உசுரு போனதால அங்க ஒத்த உசுரு அல்லாடுது..மத்த மகனுங்க..சொத்தப் பிரிக்க சத்தம் போடறானுங்க.எத்தச்சொல்ல ஏதச்சொல்ல..பாவி மக்க பெத்தவள பரிதவிக்க விட்டுட்டாங்களே.....
    சம்பாதிச்சிக்க இதென்ன பணமா...அம்மாவ வாங்க முடியுமா...?
    அருமையான கவிதை ராக்கி.தொடருங்கள்...வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை ரொம்ப சூப்பர் ராகி அவர்கலே! கிராமத்து ஸ்டைலில் பின்னியிருக்கீங்க. ரொம்ப நல்ல கரு.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  8. #8
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    பணம் பத்தும் செய்யும் நல்ல கரு வாழ்த்துக்கள்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    அனைவருக்கும் நன்றி. அனைவரும் சொல்வதுபோல் எனது கவிதைகள் அனைத்தும் வசன நடையில் இருப்பது உண்மையே. அதற்கு காரணம் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக எழுத வேண்டும் என்பதற்காகவே, என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். எனக்கு கவித்துவமாக எழுதத் தெரியாது. நீங்கள்தான் கற்றுத்தர வேண்டும். இந்த பாகப்பிரிவினை கவிதையைக் கூட ஒரு வாரமாக கவித்துவமாய் எழுத முயற்ச்சித்து எனக்கே பிடிக்காததால்தான் இப்படி கிராமிய நடையில் எழுதினேன். என்னிடம் இருக்கும் கருவை உங்களிடம் சேர்க்க வேண்டும் என்பதே என் நோக்கம்.கவிதைபோல் எழுத முயற்ச்சித்து கருவைக்கெடுக்கக் கூடாது என்பதற்க்காகவே என் அறிவுக்கு எட்டும் எழிய வசன நடையில் எழுதுகிறேன். ஒப்பனைகளை அதிகமாக்கி சிற்ப்பத்தின் முகத்தை மறைக்க (கெடுக்க) நான் விரும்பவில்லை அறிஞர் அண்னா. என் முந்தைய கவிதையில் (கேள்விகள்) அனைவரும் குறிப்பிட்டது இறுதி வரிகள் நன்றாக இருந்தது, ஆனால் உறையாடல் போல் உள்ளது என்பதே. அதற்கு காரணம் அந்த இருதி வரிகள் மட்டுமே எனக்கு முதலில் தோன்றிய கரு, அந்த கருவைப் வைத்து மற்ற வரிகளை யோசித்ததாலேயே அப்படியாகிவிட்டது. மன்றத்தில் உள்ள மற்ற பெரியவர்களின் கவிதைகளைப் படித்துவிட்டு எழுதினால் ஓரளவு தேருவேன் என்ற நம்பிக்கையுள்ளது. நிச்சயம் முயற்சிப்பேன் ஆசி கூறுங்கள். மீண்டும் நன்றிகள்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கவிதை நடை எப்படி இருந்தது என்பது முக்கியமல்ல*
    கரு அதன் மடிப்புகளை மறைத்து விட்டது.

    வெறும் பாராட்டு கொல் கொல்ல இது கவிதை அல்ல*
    அனைத்து வீடுகளில் நடக்கும் நிஜம்.

    வீட்டுக்கு வீடு வாசபடி
    ( நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். சொந்த அனுபவமும் உன்டு)
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    கவிதை நடை எப்படி இருந்தது என்பது முக்கியமல்ல*
    கரு அதன் மடிப்புகளை மறைத்து விட்டது.

    வெறும் பாராட்டு கொல் கொல்ல இது கவிதை அல்ல*
    அனைத்து வீடுகளில் நடக்கும் நிஜம்.

    வீட்டுக்கு வீடு வாசபடி
    ( நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். சொந்த அனுபவமும் உன்டு)
    நன்றி வாத்தியார் அவர்களே.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கவிதை என்றால் எப்படியிருக்கவேண்டும்? நால் எதுகைமோனை வார்த்தைகள் , வார்த்தை ஜாலங்கள், அழகான கரு , அசத்தலான வரியமைப்பு என்றா? இல்லை. நம் கண்கள் காண்பதை ஒரு இடத்தில் குமித்து உருவாக்கினால் அதற்கு கவிதை என்று சொல்லலாம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அனைத்து வரிகளுமே கவிதைதான்...

    கவிதை கிராமத்து பாணியில் இருந்தாலும் வரியமைப்புகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். எழுத்து மற்றும் வார்த்தைப் பிழைகள் களைய முற்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் இயல்பாக எழுதுவதற்கும் கிராமத்திய பாணியில் எழுதுவதற்கும் வித்தியாசங்கள் ஏராளம். கிராமத்து பாணியில் எழுதுவது அதைக்காட்டிலும் சிரமம். அந்த மொழியை சரிவர உபயோகிக்காவிடில் சரியான பதம் கிடைக்காது.

    பெரும்பாலும் நகரத்தில்தான் இந்தமாதிரி நடக்கும். இன்றைக்கு காலம் செல்லும் வேகத்தில் பெற்றவர்களை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு தம்பதியருக்கும் தனக்கும் இம்மாதிரி வந்துவிடும் என்ற அச்சம் இருந்திருந்தால் தன் பெற்றவர்களை இம்மாதிரி கைவிடுவார்களா?

    பாலுங்கிணறு இல்லை ராக்கி, பாழுங்கிணறு.. பாழடைந்த கிணறு.

    ஒவ்வொரு பெற்றவர்களும் தனக்கென்று சொத்து வைத்துக்கொண்டு தன் மகன்களோடு இருக்கவேண்டும். இறுதி காலத்தில் மகன்களிடமோ மருமகளிடமோ கையேந்தவேண்டிய நிலை இருக்காது. அவர்களுக்கு மகள் என்று ஒருத்தி இருந்தால் அவளிடம் கூட பிச்சை கேட்கமுடியாது.

    நல்ல கவிதை. இன்னும் கொஞ்சம் முயற்சி வேண்டும்.. (குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி.. இன்னும் கவனம் செலுத்தினால் நல்லபடியாக வரலாம்..)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •