லொள்ளுவாத்தியாரின் வீர வாழ்கை நக்கல் வரலாறு
மன்ற உறுப்பினர்களே, கீழே கொடுக்கபட்டுள்ள
அரசியல் விளையாட்டு
என்ற ஆதவா ஆரம்பித்த ஒரு நக்கல் திரியில் ஓவியர் ஒரு கட்சி நடத்த மனோஜ் ஒரு கட்சி நடத்த நானும் லொள்ளர்கள் முன்னேற்ற கலகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்து அனைவரும் அவ்வபோது ரகளை செய்து வருகிறோம். பிரச்சாரம் கன்னாபின்னா என்று போய் கொண்டிருகிறது.
அதில் என்னிடம் மோத வேண்டாம் அப்புறம் என் வரலாற்றை சொல்ல வேண்டி வரும் என்று அடிக்கடி லொள்ளு நக்கல் பண்ணி வந்தேன். அப்போது ஓவியர் என்னை ஒரு கேள்வி கேட்டார். இவரு பெரிய ழோழர் பரம்பரை சும்மா பேச வந்துட்டாரு என்று. அதிலிருந்து நக்கலாக லொள்ளுவாத்தியார் வாழ்கை வரலாறு எழுத முடிவு எடுத்து இதோ பதித்து விட்டேன்.
இது முழுவதும் வித்தியாசமான கற்பனையே
லொள்ளுவாத்தியார் ஏதோ சாதாரண ஆள் என்று நினைத்து விடாதீர்கள், நாட்டுக்காக என்னேன்ன தியாகங்கள செய்த பரம்பரையில் இருந்து வந்தவர் என்பதை சுருக்கமாக கூறுகிறேன். லொள்ளுவாத்தியார் தந்தையார் ஜில்லுவாத்தியார் தஞ்சையை சேர்ந்தவர். இதிலிருந்தே தெரியவில்லை ழோழ நாட்டை சேர்ந்தவர் என்று. ஏதோ ஜில்லுவாத்தியார் பரம்பரை ராஜ ராஜ சோழருக்கு தளபதியாகவோ அல்லது மெய்காப்பளராகவோ இருந்திப்பார் என்று நினைக்க வேண்டாம்?
ஜில்லு வாத்தியார் சோழ அரசாங்கத்தில் வடாம்பாளூர் அரச பரம்பரை. எங்கள் மூதாதையார்களில் ஒப்பற்ற கழுவாமுடித்தேவர் என்று அரசர் ஒருவர் இருந்தார். .கிகி 600 ஆம் ஆண்டு சாளுக்கியருடன் நடந்த போரில் சாளுக்கியரை வென்று வீரமரணம் அடைந்தார். எப்படி என்றா கேட்கிறீர்கள் இவருடைய குதிரை இவர் மேல் விழுந்து நசுக்கி விட்டது. ஆம் இவருக்கு குதிரைக்கு தீனி போடும் வீர வேலை போர்களத்தில் சோழ சக்ரவர்த்தி தந்திருந்தார். ஆகையால் இவரை குதிரை கீழ் துஞ்சிய வடாம்பாளர் என்று அழைக்க பட்டார். இவரை பற்றிய திருகுனசம்மந்தமில்லார் பாடிய பாடல் ஒன்று கூட உள்ளதாம்.
பரிதி கீழ்
தடுக்காமல் விழுந்த
வடாம் பாளார்
கழுவா மடைய விந்தை
அருள் ஈசனே
லொள்ளு வாத்தியார் பரம்பரை எத்தனை நன்மைகள் செய்தார்கள் தெரியுமா. எத்தனை கோவில்கள் கட்டி தொண்டு செய்தார்கள் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள் ஆற்று மண்ணால் அதுவும் ஆற்றுக்கு நடுவிலே ஆற்றில் தண்ணீர் ஓடாத போது சுமார் 1000 மில்லிமீட்டர் உயரம் கோவில்கள் எழுப்பினார்கள். பசி என்று யார் வந்தாலும் 50 அரிசி தானம் செய்யும் தான பரம்பரை.
லொள்ளுவாத்தியார் தாயார் மதுரையை சேந்தவர். பாண்டிய வம்சத்தில் உதிர்த்தவர். ஆகையால் லொள்ளுவாத்தியார் உடலில் வீர சோழ பாண்டிய ரத்தம் ஓடுகிறதல்லவா? ஆங்கிலேயர் காலத்தில் லொள்ளுவாத்தியாரின் தந்தை ஜில்லுவாத்தியார் அனுராதபுரத்தில் உத்தியோகத்தில் இருந்தார். அனுராதபுரம் இப்பொழுது இலங்கையில் இருக்கிறது. அங்கு வளர்ந்த லொள்ளுவாத்தியார், ஆங்கிலேய அரசுக்கு எதிராக படு பயங்கரமாக போராடிய போராளிகளில் ஒருவர். ஆங்கிலேய அரசு லொள்ளுவாத்தியாருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து விட்டது.
ஆங்கிலேயரிடம் அகபடாமால் லொள்ளுவாத்தியார் தொண்டைமான் ஆற்றை அடைந்தார். அங்கு இருக்கும் தகவல் தெரிந்த ஆங்கிலேயர் லொள்ளுவாத்தியாரை ஹெலிகாப்டரில் துரத்தினார்களாம். வீரத்தில் சிறந்த லொள்ளுவாத்தியார் யானை இரவு என்ற கடல் பகுதியில் குதித்து கடலுக்கடியில் ஒழிந்து கொண்டார். இப்பொழுது தெரிந்து விட்டதா லொள்ளுவாத்தியாரின் தைரியத்தை கடலில் குதிக்க வேறு யாருக்கு இப்படி ஒரு தைரியம் வரும்.
(பி.கு யானை இரவு கடல் பகுதி இடுப்பளவு ஆழம் தான் இருக்கும்)
பிறகு இரவு கடல் அலையால் அடித்து வர பட்டு ராமேஸ்வரத்தில் ஒதுங்கினார். அங்கிருந்து ஆங்கிலேயர்கள் கன்னில் மன்னை தூவி வடக்கு சென்று விட்டார். லோக்மானிய திலகரை சந்திக்க போகும் வழியிலேயே லொள்ளுவாத்தியார் ஆங்கிலேயரிடம் மாட்டி கொண்டார். சில காலம் சிரையிலிருந்தார். கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் ஜீப் கவிழ்ந்ததால் வீரமாக தப்பித்து லொள்ளுவாத்தியார் மாறுவேடமிட்டு லாகூர் சென்றார். அங்கு லாலா லஜபுட் ராயிடம் சேர்ந்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரட முடிவு செய்தார். ஆனால் அங்கு ஒரு பிக்பாக்கட் வழக்கில் இவரை ஆங்கிலேய அரசு குற்றவாளியாக்கி பிடித்து அந்தமான் சிரையில் தள்ளி விட்டார்கள்.
இதோ ஆங்கிலேய அரசுக்கு எதிராக இவர் மீது போட பட்ட வழக்குகள்
1. தபால் பெட்டியை திருடி இரும்பு கடையில் விற்றது
2. சிறை சாலையிலும் சிறைக் கம்பி திருடி, கடத்த முயன்றது
இப்படி பல வழக்குகள்.
ஒரு நாள் ஜப்பான் அந்தமானை பிடித்து விட்டது. நேதாஜி சிறை கைதிகளை விடுவிக்க சொன்னதினால் விடுதலை செய்ய பட்டு சென்னைக்கு பக்கத்தில் கடலில் குதித்து இறக்கி விடபட்டனர். மீண்டும் இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராம பல வீர தீர செயல்களை செய்தார்.
போஸ்டர்கள் மீது சாணி அடித்தது
பிரிட்டிஷ் போலீசின் தொப்பியை திருடுவது
போலிஸ் ஜீப்பை பஞ்சர் செய்வது
இப்படி பல வீர சாகசங்கள் செய்திருகிறார்
காந்தியை சந்தித்து அவருடன் போராட குஜராஜ் கூட சென்றார். ஆனால் அதற்குள் சுதந்திரம் கிடைத்து விட்டது.
இது தான் லொள்ளு வாத்தியாரின் வீர வரலாறு.
இப்பொழுது தெரிந்ததா லொள்ளுவாத்தியார் பரம்பரை எப்படி பட்ட பரம்பரை என்று இன்னும் ஏன் யோசிக்க வேண்டும் லொள்ளுவாத்தியாரின் லொள்ளர்கள் முனேற்ற கலகத்தில் ரத்தம் கொதிக்கவில்லை.
லொள்ளுவாத்தியாரின் பரம்பரையை பற்றி இன்னூ ஏதாவது மயிர் கூச்சும் தகவல் வேண்டுமா?
Bookmarks