Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: நண்பனே...!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    நண்பனே...!

    நண்பனே...!

    காற்று காற்று வாங்க
    கடற்கரை போகையில்
    கடலை வட்டமிடும்
    பறவை பார்ப்பதில்லையா...?

    இலை நறுக்கவென
    கொல்லை ஏகுகையில்
    அம்மியுடன் மல்லுக்கட்டும்
    ஆடு அறிவதில்லையா....?

    பனங்காய் பொறுக்கவென
    வடலியை நாடுகையில்
    காவோலையை வளைக்கும்
    காளை காண்பதில்லையா...,

    காலியாய் கிடந்த காணி
    பாரமாகும் காரணி தேடுகையில்
    சுடுமணல் கும்பியில் நடமிடும்
    கோழி தெரிவதில்லையா....?

    போகுமிடம் எங்கும்
    போதி மரங்கள் இருந்தாலும்
    உனக்கு மட்டுமேன்
    கிட்டுவதில்லை புத்தர்நிலை...?

    உருவத்தை அழித்து
    நிழலையேன் தேடுகிறாய்
    உச்சியில் சூரியன்
    பார்த்துச் சிரிக்கையில்..?

    எழுதிவிட்டு யோசித்தால்
    அர்த்தம் மறையுமென்
    கவிதைகள் போலல்ல
    நமது வாழ்க்கை..!

    எத்திசை நோக்கினும்
    உனைபார்த்து புன்னகைக்கும்
    மோனாலிசா ஓவியம்.....!

    கலங்களுக்கு மட்டுமல்ல
    காலங்களும் உள்ளதடா
    காலாவதி திகதி...!

    காலத்தை பத்திரப்படுத்தும்
    களமமைக்க புறப்படு
    காலத்தை பதப்படுத்தி
    கவிதை வடித்திடு....!
    Last edited by அமரன்; 09-09-2007 at 04:15 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    போகுமிடம் எங்கும்
    போதி மரங்கள் இருந்தாலும்
    உனக்கு மட்டுமேன்
    கிட்டுவதில்லை புத்தர்நிலை...?

    மிகவும் பிரமாதமான வரிகள்..... வாழ்த்துக்கள் அமர்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்க்கையைப்புரிந்து கவிதை வடித்தீர்கள் அமரன்
    வாழ்த்துக்கள் நல்ல அறிவுரை

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    போகுமிடம் எங்கும்
    போதி மரங்கள் இருந்தாலும்
    உனக்கு மட்டுமேன்
    கிட்டுவதில்லை புத்தர்நிலை...?
    சூப்பரான வரிகள்....பாராட்டுக்கள்.....அமரன்....தொடர்ந்து கலக்குங்க...
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Smile

    Quote Originally Posted by அமரன் View Post
    நண்பனே...!
    எத்திசை நோக்கினும்
    உனைபார்த்து புன்னகைக்கும்
    மோனாலிசா ஓவியம்.....!


    காலத்தை பத்திரப்படுத்தும்
    களமமைக்க புறப்படு
    காலத்தை பதப்படுத்தி
    கவிதை வடித்திடு....!
    மோனாலிசா புன்னகையோடு அழகான ஒப்புமை திசை எங்கும் மகிழ்ச்சியே என்று கூறுவது. காலத்தை வசப் படுத்தும் விந்தை கற்றுத் தந்தது உங்கள் கடைசி வரிகள்.. அற்புதம் அமர் அண்ணா.

    வாழ்த்துக்கள்..அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    அற்புதம் அமர் வாழ்த்துக்கள்

    வாழ்வை வீணாக்கித் திரியும் ஒர்
    நண்பனுக்கும் அன்போடு கூறும்
    ஒரு அறிவுறை இதனை விட
    சிறப்பாக கூற முடியாது...

    ஷீ ரசித்த அதே வரிகளை நானும் ரசித்தேன்
    அழகிய கற்பனை வளம் வாழ்த்துக்கள் அமர்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி நண்பர்களே...!உங்கள் ஒவ்வொருவரின் வரிகளும் உற்சாகம் அளிக்கும் மருந்துகள். .பூமகள்,இனியவள் இருவரும் கவிதை சார்ந்த எனது அலைவரிசைக்கு கிட்டத்தில் வந்துள்ளீர்கள்.மிக்க நன்றி.

    -அமரன்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அழகான கவிதைவரிகளில் நண்பருக்கு புத்திமதி. நன்றாக இருக்கிறது, படிக்க சுவையாகவும் இருக்கிறது. அதுவே இந்த கவிதையின் வெற்றி. பாராட்டுக்கள்.


    நன்றி வணக்கம்
    ஆரென்

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நண்பனே...!

    காற்று வாங்கவென
    கடற்கரை போகையில்
    கடலை வட்டமிடும்
    பறவை பார்ப்பதில்லையா...?


    போகுமிடம் எங்கும்
    போதி மரங்கள் இருந்தாலும்
    உனக்கு மட்டுமேன்
    கிட்டுவதில்லை புத்தர்நிலை...?
    எவ்வளவு அரிய உண்மை நிலையை அறியத் தந்திருக்கிறீர்கள்..வாழ்க்கைப் பாடம் வாழும் நேரங்களின் ஒவ்வொரு நொடியிலுமிருக்கிறது..அதை அறியா மனிதன் அறியாமையில் ஆழ்ந்து விடுகிறான்..புத்தருக்கு கிட்டியது ஏன் சாதாரணுக்கு கிட்டவில்லை...அவனும் புத்தரின் புத்தியிலிருந்து யோசித்தால் பார்க்கும் மரங்களெல்லாம் போதிமரமே....

    உருவத்தை அழித்து
    நிழலையேன் தேடுகிறாய்
    உச்சியில் சூரியன்
    பார்த்துச் சிரிக்கையில்..?

    கலங்களுக்கு மட்டுமல்ல
    காலங்களும் உள்ளதடா
    காலாவதி திகதி...!

    காலத்தை பத்திரப்படுத்தும்
    களமமைக்க புறப்படு
    காலத்தை பதப்படுத்தி
    கவிதை வடித்திடு....!

    நில்லாது ஓடும் காலநதிக்கும் காலாவதியுண்டு...அது காத்திருக்கும் காலைத்தை கருத்துடன் பயன்படுத்தினால் கொடுங்காற்றிலும் குலையா கலமாக நிற்கலாம்....வசீகரிக்கும் வரிகளில் வன் உண்மை.

    எழுதிவிட்டு யோசித்தால்
    அர்த்தம் மறையுமென்
    கவிதைகள் போலல்லாது

    எத்திசை நோக்கினும்
    உனைபார்த்து புன்னகைக்கும்
    மோனாலிசா ஓவியமாய்
    ஆக்கிடு உன்வாழ்க்கை...!
    அழகான உவமையில் ஆயிரம் அர்த்தமுரைக்கும் வரிகள்.மோனாலிசா ஓவியத்தின் அர்த்தம் பொதிந்த புன்னகையைப்போல வாய்ப்புகள் உன்னைப்பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறது...அதை வசப்படுத்தி நிறைவுப் புன்னகை பூக்கவைப்பது உன் கையில்தான் உள்ளது....வாழ்க்கைப்பாடமெடுத்த முத்தாய்ப்பு வரிகள் அருமை அமரன்.
    கொஞ்சம் இடைவெளிவிட்டு வந்த அமர முத்திரையணிந்த அழகு கவிதை.வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி ஆரென் அண்ணா.
    சிவா..புரிதலுடன் கூடிய பின்னூட்டம். நன்றி.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தேடிய இலக்குகள் தனியே
    தென்பட...
    பூமி ஏகாந்தமல்ல...
    நாடிய திசைகள் யாவும்,
    பயன்படுத்தினால்,
    நாமும் பண்படுவோம்...
    பலன் தருவோம்...

    கலங்களுக்கு மட்டுமல்ல
    காலங்களும் உள்ளதடா
    காலாவதி திகதி...!
    காலாவதி திகதி
    உணராதவன்,
    காலம் முழுதும் அவதி...

    பாராட்டுக்கள் அமரன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி அக்னி. அழகான பின்னூட்டம் பாராட்டுக்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •