Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: தலையணை சுகம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1

    தலையணை சுகம்

    பட்டினத்தார் துறவியாக ஊர் ஊராக அலையும் போது நடந்த நிகழ்ச்சி இது.

    ஒரு முறை அசதியில் வயல் வரப்பில் தலை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற பெண்கள் இருவர் 'இந்தச் சாமியாரைப் பாரேன். எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் தலைக்கு தலையணை வேணுங்கற சுகம் மட்டும் போகலையே. தலைக்கு வரப்பு தேவைப்படுது பாரு' என்று சொல்லிக் கொண்டே சென்றனர். அதனைக் கேட்டுத் துணுக்குற்றப் பட்டிணத்தார் உடனே வரப்பில் இருந்து தலையை எடுத்து வயல் வெளியிலேயே வைத்துக் கொண்டு உறங்கினார்.

    அவ்வழியே சென்ற பெண்கள் மீண்டும் திரும்பி வந்தனர். அப்போது பட்டினத்தார் வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே வைத்திருப்பதைப் பார்த்து, 'ஆகா. இந்தச் சாமியாரைப் பாரடி. ஒரு சொல் பொறுக்க மாட்டேங்கறார். நாம தலையணை சுகம் தேவையா இவருக்குன்னு கேட்டோம். உடனே வரப்புல இருந்து தலையை எடுத்துக் கீழ வச்சுட்டாரு. என்ன இருந்தாலும் நம்மளை யாரும் தப்பா சொல்லிடக்கூடாது, இன்னும் நான் என்ற எண்ணம் போகலை பாரு' என்றாள் அந்தப் பெண்.

    படிக்காத அந்தப் பெண்களின் அறிவின் பெருமையை எண்ணி வியந்தார் பட்டினத்தார்.

    பின்னர் பட்டினத்தார் உணர்ந்து கொண்டார் வந்தது வேறு யாருமல்ல, அம்பிகைதான் என்று.
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    தவறு செய்தாலும் சுட்டிக் காட்டினால் பொறுக்காத மக்கள் நிறைய உண்டு இங்கு...

    ஆனால் ,தனக்கு தெரியாததை யார் சொன்னாலும் கேட்டு மேற்கொள்கின்ற பட்டினத்தாரின் பாங்கு வியக்க வைக்கின்றது...
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிகப்பெரிய தத்துவங்களையும்..மிகச்சாதாரனமாக சொல்வது கிராமத்து பெண்களுக்கே உரிய அரிய திறமை.பட்டுத்தான்.....பட்டினத்தாராய் ஆனார் அந்த பட்டினத்தார்.....ஆனால் இப்போதெல்லாம் எத்தனைப் பட்டும் திருத்திக்கொள்ளாத பட்டனத்தார்தான் அதிகம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுவையான சம்பவம். சொல்வது யாராகினும் நல்லது எனில் கவனத்தில்கொள்ளவேண்டும் என்ற கருத்து விதைத்த சம்பவம். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அழகுராஜ்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நல்ல கதை நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    இந்த கதையை படித்ததும், எனக்கு முல்லாவும் அவரது மகனும் குதிரையில் சென்றக்கதைத்தான் ஞாபகம் வருகிறது.

    இருவரும் ஒரு குதிரையில் அமர்ந்து செல்லும்போது, அவ்வழி வந்த மனிதர்கள் "பாரு, இரண்டு பேர் ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு செல்வதை??" என்று சொல்ல, உடனே, முல்லா, தான் இறங்கிக்கொண்டு, மகனை மட்டும் குதிரையில் அமர்த்திவிட்டு, அவர் குதிரையுடன் நடந்து சென்றார்.

    பிறகு வந்த மனிதர்கள், "பாரு, வயதானவன் நடந்து வர, சின்ன பையன் குதிரையில் அமர்ந்து வருவதை??" என்றுக் கூற, உடனே, பையன் இறங்கிக் கொண்டு தந்தையை குதிரையில் ஏற்றிவிட்டான்.

    பிறகு வந்த மனிதர்கள், "பாரு, சின்ன பையன் நடந்துவர, பெரிய மனிதர் குதிரையில் அமர்ந்து வருகிறார்". என்று கூற. "என்னடா இது?? பெரிய வேதனையாக போய்விட்டது" என்று, இருவரும் இற்ங்கிக்கொண்டு, குதிரையுடன் நடந்து சென்றனர்.

    பிறகு வந்தவர்கள், "பாரு, குதிரையை வைத்துக்கொண்டு இருவரும் நடந்து செல்வதை??" என்று கூற. முல்லா மிகவும் குழம்பிப்போனார். பிறகு "இனி சொந்தமாக முடிவு எடுப்பது" என்று முடிவு எடுத்தார்.

    நன்றி அழகு.. பெரியோர்களின் வாழ்வில் நிறைய நிகழ்ச்சிகள், நெஞ்சை உருக்குவதாகவும், வாழ்க்கைக்கு முக்கியமானதாகவும் இருக்கும். நன்றி.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    அருமையான கதைகள் தந்த அழகுக்கும் தளபதிக்கும் நன்றிகள்....

    வளர்க உங்கள் கதைகள்..
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பட்டினத்தார் கதையும் முல்லா கதையும் சிறப்பாக இருந்தன.....

    நாம் நமக்காக வாழவேண்டும்... அடுத்தவருக்காக வாழக்கூடாது...

    நன்றி நண்பர்களே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இரு கதைகளும் அருமை...

    சொந்த புத்தி வேண்டும்... நான் என்ற நினைப்பு மாறனும்.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    பட்டினத்தார் , முல்லா கதைகள் − சொந்த புத்தி வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன.. நல்ல கருத்தும் கதையும் தந்த அழகுக்கு வாழ்த்துக்கள்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    உன்னிடம் இருக்கும் மூளையை உபயோகித்து முடிவுகள் எடு. மற்றவர்கள் சொல்படி எதுவும் செய்யாதே என்று சொல்லும் கதைகள். நன்றாக இருக்கின்றன. தொடருங்கள்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2

    Smile

    சில விடயங்களில் நாமாகவே சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு அழகான எடுத்துக்காட்ட்டுக்கள் இரு அழகிய கதைகளும்.......

    அருமை அழகுராஜ், தளபதி!
    தொடர்ந்து இவ்வாறான கதைகளைத் தாருங்கள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •