பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது கும்பகோணம் அருகே ஒரு கல்லூரிக்கு வந்திருந்தார். ஏராளமான மக்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். இந்நிலையில் கல்லூரிஆசிரியர்களுக்குத் தினந்தோறும் அவர்களது வீடுகளிலிருந்து மதியச்சாப்பாட்டைத் தூக்கிவரும் ஒரு மூதாட்டியும் அங்கே நின்றிருந்தார். அந்த அம்மாவின் இடுப்பில் ஒரு கூடை நிறைய சாப்பாட்டு தூக்குகள். இவ்வளவையும் சுமந்து கொண்டு அவர் முதலமைச்சரைப் பார்க்கப் போராடிக் கொண்டிருந்தார்.
தலைவர் வரும் வழியில் அவர் அருகில் அந்த கிழவி நெருங்கிவிட்டார். காவல்துறையினரும். மற்றபிரமுகர்களும் அந்த அம்மையாரைப் பிடித்துக் தள்ளி ஓரங்கட்டிவிடப் பார்த்தனர்.
விடுங்கய்யா நான் ஐயாகிட்ட ஒண்ணு கேக்கணும்" என்று கத்தினார் அந்த அம்மா. இதைக் கேட்ட தலைவர்,அந்த அம்மாவை விடுப்பா, இங்கே வாங்கம்மா என்ன கேக்கப் போறீங்கன்னேன்" என்றார். தலைவரே தன்னை அழைக்கிறார் என்ற மகிழ்ச்சி தாளமுடியாமல் அந்தத் தாய் "ஐயா என்ன மாதிரி ஆதரவு இல்லாத எத்தனையோ கெழம் கட்டைங்க இப்படி சாப்பாடு கூடை தூக்கி பொழைக்கிறோம். இது நிச்சயமில்லாத வருமானமய்யா...! கை காலு விழுந்துச்சுன்னா எங்கள யாரு காப்பாத்துவா..! என்று பட பட வென்று பேசினார். இதைக் கேட்டுக் கெண்டு பக்கத்தில் நின்ற ஒரு பிரமுகர், அந்தக் கிழவி ஏதோ பண உதவி கேட்கிறார் என்று நினைத்து, தன் பையிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
இது யாருக்கையா வேணும் இன்னிக்கு நீங்க இதக் கொடுத்துப்புட்டுப் போயிடுவீங்க..இது நிரந்தரமா எங்க பசிய ஆத்திப்புடுமா? எங்கள் மாதிரி வயசானவங்களுக்கு காமராஜ் ஐயா நெனச்சா நிரந்தரமா ஏதாவது செய்ய முடியும்" என்றபடி அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் அந்த மூதாட்டி, அந்தத் தாயின் வேண்டுகோளையும், ஆதங்கத்தையும் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த தலைவர், ஆகட்டும்..பார்க்கலாம்! என்றபடி நகர்ந்தார் காமராஜ்.
காரில் ஏறியவுடன்" இந்த மாதிரி ஆதவில்லாத ஒண்டிக் கட்டைகளுக்கு மாசம் எவ்வளவு ஆகும்..? அதிகாரிகள் சொன்னார்கள் ஒரு இருபது ரூபா ஆகும்.
சென்னை வந்து சேர்ந்த மறுநாளே மாநிலம் முழுக்க உள்ள ஆதரவற்ற முதியவர்களின் புள்ளி விவரத்தை சேகரிக்கச் சொன்னார். அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்று ஒரு பட்ஜெட் போடச் சொன்னார் பத்தே நாளில் "முதியோர் பென்சன் திட்டம்" தயாராகிவிட்டது. மாதம் தோறும் இருபது ரூபாய் அவர்களுக்கு நிரந்தரமாய் கிடைக்க வழி செய்தார் தலைவர். நன்கொடையாக வாங்க மறுத்த இருபது ரூபாயை சட்டப்பூர்வமாகவாங்கி மகிழ்ந்தார் கும்பகோணம் முதாட்டி..
Bookmarks