Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 26

Thread: காய்க்காத மரமொன்று

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    காய்க்காத மரமொன்று

    காந்தாரியின்
    கருவில்லா வயிற்றின்
    கந்தகத் தவிப்பை
    என்னுள்ளும் உணர்கிறேன்...
    அவள் பெற்ற வரம் நான் பெற
    அவள் வாழ்ந்த
    யுகமல்லவே இது!

    பிஞ்சுக்கால்களின்
    கொஞ்சல் உதைகளை
    கதைகளில் மட்டுமே கேட்டு
    கண்களோடு என்
    கருவறையும் கலங்குகிறது!

    வற்றிய வயிற்றின் மீது
    தலையணை வைத்து
    தாயாகிப்பார்க்கிறேன்..!

    என் வீட்டிலும் மாங்கன்று...
    புளிப்பாய் மாம்பிஞ்சு...
    உமிழ்நீர் சுரக்கவில்லையே....!

    காய்க்கின்ற மரம்தான்
    கல்லடிபடும்...
    காய்க்கா மரமெனக்கு
    ஏனித்தனை சொல்லடிகள்...?

    இரணமான மனதை
    உணவாக்கிக் கொள்வதே
    குஞ்சீன்ற வல்லூறுகள்தானே..!

    கருப்பை மறந்தது
    தன் பொறுப்பை
    கடவுளும் கேட்கவில்லை
    என் விருப்பை....!

    கறுப்போ..சிவப்போ
    அழகோ...அவலட்சனமோ,
    ஆணோ..பெண்ணோ
    அடிவயிறு வளர
    ஆண்டவன் அருள வேண்டும்
    அம்மா என்றென்னை
    அழைக்க வேண்டும்...!
    Last edited by சிவா.ஜி; 23-08-2007 at 07:55 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post

    காய்க்கின்ற மரம்தான்
    கல்லடிபடும்...
    காய்க்கா மரமெனக்கு
    ஏனித்தனை சொல்லடிகள்...?

    பாராட்டுகள் சிவா!

    சொந்த வேதனை − கூடுதலாய் சமூக உலைவாய்
    சுமத்தும் வேதனை..

    பாதிக்கு உரியவன் ஆண் என்றாலும்
    வேதனை முழுமையும் விடிவது பெண் தலையில்..

    மருத்துவக்காரணங்கள்.. நிவாரணங்களை மீறி
    நித்தம் நித்தம் நம் பெண்களின் மன ரணங்கள்..


    இல்லை எனும்போது வரும் வேதனைகளில்
    இவ்வேதனை எத்தனை கொடுமையானது!

    வடித்த விதம் அருமை சிவா.. மீண்டும் பாராட்டுகள்!

    மீனாகுமாரின் அனுபவக்குறளில் மக்கட்பேறு பற்றிய பகுதியில்
    அவர் அழகாய் இதன் மறுபக்கம் எழுதியிருப்பதைப் படியுங்கள்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி இளசு.செய்யாத தவறுக்காக குற்றம் சொல்லப்படும்போது ஏற்படும் வேதனை,வலி...தாங்க முடியாதைவை.கையில்லா,காலில்லா...ஏன் இதயமே இல்லாதவர்கள் கூட புகழப்படும்போது..பிள்ளையில்லா பெண் மட்டும் ஏன் குதறப்படுகிறாள்..அர்த்தமற்ற சமூக செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.
    Last edited by சிவா.ஜி; 22-08-2007 at 07:35 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆண்,பெண் இருவருக்கும் சமபங்கு இருந்தாலே இல்லறம் சிறக்கும் என்று சொல்பவர்கள் மழலை தொடர்பான விடயத்தில் பெண்ணை நோக்கியே சுட்டு விரலை நீட்டுவது வழக்கமாகிப் போய் விட்டது. சுட்டு விரல் ஆட்காட்டியின் காட்டிக்கொடுப்பின் வழிபற்றி பாயும் கணைகளின் உக்கிரங்கள்...அப்பப்பா சொல்லி மாளாது. அர்ஜுனனே தோற்று விடுவான். சுற்றம் மட்டும்மா அப்படி? கண்டவர்கள் எல்லாம் சுட தட்டிக்கேட்கவேண்டிய கொண்டவன் தினமும் கொல்வான். ஏன் இப்படி? யாரும் யோசிப்பதில்லை.
    ஆணோ பெண்ணோ யாருக்கும் உலகை அறிமுகப்படுத்துவோர் பெற்றோர். வளர்த்து கணவன்,மனைவி என்ற பட்டம் சூட்டுவோரும் அவர்களும் நண்பர்களும் (பொதுவாக). ஆனால் அவளுக்கு அம்மா பட்டம் கொடுக்கவேண்டியது அவன். அவனுக்கு அப்பா அந்தஸ்து கொடுக்கவேண்டியவள் அவள். அது நடக்காத போது இருவருக்குமே கோபம் வரவேண்டும். அப்படியா நடக்கிறது. ஒட்டுமொத்த கோபத்தையும் ஆண்வர்க்கம் குத்தகைக்கு எடுத்துவிடுகின்றது. எவ்வகையான நியாயம் இது? இது மாறவேண்டும்/மாற்றப்படவேண்டும்.

    கவிதைகுறைவில்லா நிறைமாதக் கர்ப்பினி போல பொலிவுடன் உள்ளது. பல இடங்களில் வலிபார்த்து வலிக்கிறது. சில இடங்களில் சுருக்கி வலிக்கிறது.

    இரணமான மனதை
    உணவாக்கிக் கொள்வதே
    குஞ்சீன்ற வல்லூறுகள்தானே..!


    இனத்தை இனம் அடித்துச் கொல்வது மனித இனம் எனச் சொல்லப்படுவோரிடம்தான் உள்ளது சிவா. பாராட்டுக்கள். தொடருங்கள். இப்படி ஒரு கவிதை இனி வராதிருக்க முயற்சிப்போம்.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிகச்சரியான கருத்துக்கள் அமரன்.ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவிலே வைத்த ஒரு நியதியை...பெண்ணுக்கெதிரே பயண்படுத்தும் ஈரமற்றோரில் பல பெண்களே இருப்பதுதான் கொடுமையான விடயம்.விஞ்ஞானம் எத்தனைதான் வளர்ந்தாலும்,அறிவியல் உண்மைகள் எத்தனைதான் உரைத்தாலும்...உரைக்காது இந்த ஜென்மங்களுக்கு.
    நன்றி அமரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    காந்தாரியின்
    கருவில்லா வயிற்றின்
    கந்தகத் தவிப்பை
    என்னுள்ளும் உணர்கிறேன்...
    அவள் பெற்ற வரம் நான் பெற
    அவள் வாழ்ந்த
    யுகமல்லவே இது
    கந்தகத்தவிப்பை இந்தியர்களாகிய நீங்கள் உணர்ந்திருப்பீர்களோ
    இல்லையோ இலங்கையர்களாகிய எங்களுக்குத்தெரியும் அதன் கொடுமையை அருமையான வார்த்தை பிரயோகம்



    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பிஞ்சுக்கால்களின்
    கொஞ்சல் உதைகளை
    கதைகளில் மட்டுமே கேட்டு
    கண்களோடு என்
    கருவறையும் கலங்குகிறது!

    வற்றிய வயிற்றின் மீது
    தலையணை வைத்து
    தாயாகிப்பார்க்கிறேன்..!

    என் வீட்டிலும் மாங்கன்று...
    புளிப்பாய் மாம்பிஞ்சு...
    உமிழ்நீர் சுரக்கவில்லையே....!

    காய்க்கின்ற மரம்தான்
    கல்லடிபடும்...
    காய்க்கா மரமெனக்கு
    ஏனித்தனை சொல்லடிகள்...?

    இரணமான மனதை
    உணவாக்கிக் கொள்வதே
    குஞ்சீன்ற வல்லூறுகள்தானே..!

    கருப்பை மறந்தது
    தன் பொறுப்பை
    கடவுளும் கேட்க்கவில்லை
    என் விருப்பை
    மனத்திரையில் காட்சியை உருவாக்கி அவள் சோகத்தை உணர்த்துகிறது உங்கள் வரிகள்


    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கறுப்போ..சிவப்போ
    ஆழகோ...அவலட்சனமோ,
    ஆணோ..பெண்ணோ
    அடிவயிறு வளர
    ஆண்டவன் அருள வேண்டும்
    அம்மா என்றென்னை
    அழைக்க வேண்டும்


    தாய்மை எனும் உன்னத பதவியை அடைய அவள் படும் துரை கண் முன் கொண்டூவந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    காந்தாரியின்
    கருவில்லா வயிற்றின்
    கந்தகத் தவிப்பு..


    அவளுக்கு உடைந்துபோக பிண்டமிருந்திருக்கும். உலகோரை அழிக்க துண்டம் விழுந்திருக்கும். புளி கரைத்த (கந்தக) வயிற்றுக்குள் புழுவுண்டாவது அனைவரும் சொல்லும் விஷயம். பிள்ளையுண்டாவது விரும்பும் விஷயம்.

    பிண்டமொன்று உருளக் கண்டால் கரும்பாகும் கைகள். தொட்டுத் தடவி நெஞ்சில் விதைக்கும் கற்பனைப் பயிற்கள். எதுவுமின்றி வற்றியதாய் நிலவக்கண்டால்??

    சேயாவது பிறப்பின் உரிமை
    தாயாவது பெண்மையின் முழுமை,

    இரண்டும் தருவது பெண்களின் கடமை. இல்லாதிருப்பது பிரச்சனைகளின் செழுமை. தினம் தினம் புழுங்குவதும் அந்த புழுங்கள் பற்றாதென்று புழுவை தீயிலெரிப்பது போல வார்த்தைகளும் (சொல்லடிகள்...) நினைக்கவொண்ணா துன்பங்கள்.. ஆனாலும்... இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் பெரும்பாலும் கருவுண்டாவது செய்யப்படுகிறது. அல்லது விருப்பமிருந்தால் செயற்கை கருவுண்டாதலும் உண்டு...

    இயற்கை என்றாவது தோற்கும்போது செயற்கை தலைதூக்கும். பிள்ளைப் பேறு அல்லாதவர்களுக்கு எவரோ ஒருவர் பிள்ளை இருக்கக்கூடும்.. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

    வாழ்த்துக்கள்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அமரரே! கலக்குறீர் விமர்சனத்தில்.. வாழ்த்துக்கள்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    நல்ல கவிதை.பாராட்டுக்கள் சிவா.ஜி..
    "காய்க்கின்ற மரம்தான்
    கல்லடிபடும்...
    காய்க்கா மரமெனக்கு
    ஏனித்தனை சொல்லடிகள்...?"



    சிந்திக்கவைக்கும் வரிகள்.தொடரட்டும் உங்கள் சேவை
    இணையத்தில் ஒரு தோழன்

  10. #10
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    தாய்மை என்பது எவ்வளவு சுமைகளின் பின் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம் என்பதை வரிகளில் கொண்டு வந்தீர்கள் வாழ்த்துக்கள் சிவா

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பிள்ளையில்லா கொடுமை... அது
    எல்லையில்லா கொடுமைதான் ...

    கரு உருவாகாததை நினைத்து
    உருவான கரு...

    இந்தக் கவிதை.. தொடருங்கள் சிவா
    Last edited by ஷீ-நிசி; 22-08-2007 at 06:14 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பத்துமாத சுமை தாங்க,
    ஏங்கும் மனதிற்கு..,
    நித்தமும் சுமை ஏற்றும்,
    சொல்லின் கனதிகள்...

    உயிர் தங்காத கருவறை...
    வசை தாங்காத இதயவறை...
    கழுவேற்றப்படுகின்றது..,
    தாய்மை..!

    அபாரம்... சிவா.ஜி...
    ஒரு பூக்காத செடியின் சலனங்கள்,
    வேதனையின் நடுக்கங்களே...
    துள்ளலாட்டங்கள் அல்ல...
    என்று உணர்த்தும் கவிதை...
    Last edited by அக்னி; 22-08-2007 at 10:04 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •