நானும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேனென உறுதியளிக்கிறேன்
நானும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேனென உறுதியளிக்கிறேன்
கீழேயுள்ள எனது தீபாவளி கவிதையை பிரசுரித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்....
பளபளக்கும் புத்தாடை
பந்தாவாய் அணிந்திடுவோம்
மத்தாப்புச் சிரிப்போடு
மழலையாய் மாறிடுவோம்
அடுத்தவரை மகிழ்வித்து
நாமும்கூட மலர்ந்திடுவோம்
கெடுப்பவரையும் கெட்டோரையும்
நல்வழிக்கு அழைத்திடுவோம்
அடக்குமுறை அகற்றிடுவோம்
அடிமைமுறை ஒழித்திடுவோம்
கொடுமைகளை கண்டபோது
பட்டாசாய் வெடித்திடுவோம்
விருந்தினரை வரவேற்பதில்
புஸ்வானமாய் பூத்திருப்போம்
பரபரப்பாய் பணிபுரிந்து
தரச்சக்கரமாய் சுழன்றிடுவோம்
யானைவெடிச் சத்தமாய்
உண்மைதனை எடுத்துரைப்போம்
ஊசிவெடி போலேநாம்
உரிமைக்குக் குரல்கொடுப்போம்
ஆயிரம்வாலா அதிர்வைப்போல்
அடுக்கடுக்காய் பேசிடுவோம்
சாட்டையின் முயற்சியாக
இறுதிவரை சிரித்திருப்போம்
சீனிவெடி லக்ஷ்மிவெடி
சீறிப்பாயும் ராக்கட்வெடி
அணுகுண்டு அதிர்வேட்டு
அதிநவீன வெடிகளோடு
கொளஷ்ட்ராளையும் சுகரையும்
கொஞ்சம்கொஞ்சம் மனதில்வைத்து
தித்திக்கும் பலகாரங்கள்
திகட்டத்திகட்ட தின்றுவிட்டு
வராததைநினைத்து வருந்திடாமல்
வந்ததைவைத்துக் கொண்டாடிடுவோம்
கஷ்ட்டங்களை வெடித்திடுவோம்
கவலைகளை கொளுத்திடுவோம்
வாழ்த்துக்களுடன்
சி. சசிகுமார், திருச்சி.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. நான் இந்த வலை தளத்திற்கு புதியதாக சேர்ந்திருக்கிறேன். என்னால் புதிய மின் நூல்களை தள-ஏற்றமும் செய்ய இயலவில்லை. பதிவிறக்கமும் செய்ய இயலவில்லை.
சற்றே புரியும் படியாக விளக்க முடியுமா ?
New Post / New Thread எவ்வாறு உருவாக்கம் செய்ய முடியும் ?
Post Reply என்று தான் வலை பக்கத்தில் உள்ளது. மிக குழம்பி உள்ளேன்..
போகர் எழுதிய அரிய வகை மின் நூல் இங்கே இணைத்துள்ளேன்.
இது போன்று தங்கள் மின்னூல்களை பதிவேற்ற பதிவிறக்க தங்கள் பண்பட்டவர் பட்டம் பெறவேண்டும் அதற்க்கு இருபத்தி ஐந்து பதிவுகளேனும் பதிவிட வேண்டும் ...இது போன்ற தகவல்களை அறிய மன்ற விதிமுறைகளை தெளிவுற படிக்கவும் ...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
தாங்கள் புதிய பதிவுகள் பதிவிட வேண்டும் என்றால் குறிப்பாக எந்த மன்றத்தில் பதிவிட விரும்புகிறீர்களோ அந்த மன்றத்திற்கு சென்று அங்கே இருக்கும் நியூ thread எனும் பொத்தானை அழுத்தி பதிவிடலாம் ..ஒரு எடுத்துகாட்டிற்கு மல்லி மன்றம் செல்லும் இந்த தொடர்பை அழுத்துங்கள்..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
விதிமுறைகள் பயனுள்ளதாக உள்ளது
தமிழ் மன்றத்தின் விதிகளை படித்தேன். மன்றத்தின் விதிகளுக்கு கட்டுபடுவேன் என உறுதியளிக்கிறேன்.
அனைவருக்கும வணக்கம். என்னுடைய பெயர் மோகன். இங்கே குறிப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.
சிறப்பான விதிமுறைகள் பண்பு பலப்பட வாய்ப்பதிகம்
all
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks