Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: பிஞ்சு மேகம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    பிஞ்சு மேகம்





    வானுக்கும், பூமிக்குமான
    வானுயர்ந்த பாதையில்....

    வெள்ளை மேகமொன்று,
    பிள்ளை வடிவில் இறங்கியது!
    பூமியின் எல்லையில்!

    எந்த தேவதைக்கு
    பிறந்த தேவதையோ?!

    தேவதைகள்,
    வானில்தானே இருக்கும்!!

    பூமிக்கு இறங்கியதால்,
    இந்த பூமியும் வானமாகியது!!
    கருப்பு வெள்ளை வர்ணமாகியது!

    தேவதை பிரசவித்த..
    தேவ பிள்ளையின்
    பிம்பத்தை பிரசவித்ததில்..

    நீரலைகளெல்லாம்,
    தேனலைகளாய் ஆனது!

    பிஞ்சு மேகத்தின்
    பஞ்சு பாதம் பட்டதும்...

    நீரிலிருந்த செவ்விதழ்களெல்லாம்,
    ஒவ்வொன்றாய் மேலேறி,
    செந்நிறப் பூக்ககளாகின!
    மேக குழந்தையின்,
    பொன்னிறப் பூக்கரங்களிலே!

    வெட்கமென்ன?!
    வெள்ளுடை தரித்த,
    வெண்பிஞ்சுமேகமே!

    கொஞ்சம் நிமிர்ந்து பார்..
    உன் பார்வையில்,
    பஞ்சாக மாறட்டும் -எங்களின்
    நஞ்சான மனங்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    அற்புதமான கவிதை..அழகூட்டும் படம்

    "கொஞ்சம் நிமிர்ந்து பார்..
    உன் பார்வையில்,
    பஞ்சாக மாறட்டும் -எங்களின்
    நஞ்சான மனங்கள்"

    ஆழமான சிந்தனையை தூண்டும் வரிகள்.வாழ்த்துக்கள் நண்பா
    இணையத்தில் ஒரு தோழன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி இக்ராம்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    புதிதாய் பிறந்த மேகமாய், வெண்துணி சுருட்டலுக்கிடையே பிரகாசிக்கும் முகம்...எத்தனை அழகு. விவரிப்பும் வர்ணனையும் பிரமாதம்.வாழ்த்துக்கள் ஷீ.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி சிவா....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    அழகான சொல் அலங்காரம் கொண்டவரிகள் அந்த வெண்மேகம் போல வாழ்த்துக்கள்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    புதிதாகப் பிறந்த சின்னஞ்சிறு பிஞ்சின் கொஞ்சும் சிரிப்பும், பஞ்சு மேனியும் வெண்வானில் உலாவரும் கருநிலாவும் ஒன்றை ஒன்று விஞ்ச உலகத்திடம் கெஞ்சும் என் மனம் "இம்மழலைக்காக ஆவது மாறமாட்டாயா? மழலையாலாவது மாறமாட்டாயா?". அதே கேள்வி ஷீயின் மனதில் இருந்தது போலும். கவித்துவமாக வெளிபட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தேவதை தானே.

    கறுப்பு வெள்ளைப் படத்தில் வண்ணங்களைத் தூவி வர்ண ஓவியமாக்குகிறது வரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும். அந்த வண்ண வார்த்தைகளில்

    வெட்கமென்ன?!
    வெள்ளுடை தரித்த,
    வெண்பிஞ்சுமேகமே!


    இந்த வார்த்தைகள் ஒட்டிக்கொள்கின்றன. மின்னல்கள் பல வெட்டுகின்றன. ஏன் இந்த வெட்கம்.? குனிந்து இருப்பதால் வெட்கமாகத் தெரிகிறதா? அவள் வரவில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள் வெட்கத்தை மலரச்செய்ததா? பாழ்பட்ட உலகில் பாலான நான் வந்து விட்டேனே என்பதலா? எதுவும் இல்லை. ஷீயின் ஜால தேனமுத கவிதையின் அழகினால் தன்னழகு குறைந்ததது என வெட்கித்தலைகுனிகிறது வெண்மேகப் பிஞ்சு. பாராட்டுக்கள் ஷீ. தொடருங்கள்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி இலக்கியன்....

    நன்றி அமரன்... மிக மிக அழகிய விமர்சனம்.....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    காட்சியழகுக் கவிஞர் என்று இளசு அண்ணா சொன்னதில் ஐயம் எள்ளளவிலும் இல்லை....

    நிஜத்தில் யாரேனும் வருவார்களா என்று ஏங்கியது போய் நிழலிலாவது வரக்கூடுமா என்று ஐயப்பட்டு பாடும் ஒர் கவி. பிள்ளையாகட்டும் பெருமாளாகட்டும் துயர் துடைக்கவேண்டாம், துயர் ஏற்படுத்தாதவாறாவது வரலாமில்லையா?

    தேவதைகளின் நிழல் கண்டதில்லை நாம்... தேவதைகளை மிக அருகிலே வைத்துக் கொண்டே. உருவாக்கப்படும் தேவதைகள் நம் தேவைகளுக்கு உரு மாற்றப்படுகிறது.. வானில் இருப்பவைகளை துர்தேவதைகளாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.. மண்ணில் கிடக்கின்றன எண்ணில்லாதவைகள்.

    பஞ்சாக மாறி பறந்துபோகட்டும், நஞ்சு மனங்கள்.

    நெஞ்சிலே வடு சுமந்தவர்கள் அஞ்சியாவது சாகட்டும் என்று வரம் கேட்டிருக்கலாம்.. பஞ்சாக மாறியென்ன சாதகமா செய்வார்கள்.. கெஞ்சிக் கூத்தாடி நிழல் பட்ட இடத்தை நிற்கவைத்து கும்பிட வைத்தாலும் அஞ்சிலார் அவர்கள்.... நஞ்சு மனங்கள் நஞ்சாகவே இருக்கட்டும். பஞ்சுடையோரைக் காக்கச் சொல்லுங்கள். காற்று பட்டு விலகும் மேகமாய் காதல் பட்டு விலகட்டும் என்று நினைப்போரை முதலில் காப்பற்றலாமே!!

    கவிதை எதுகைகள் நிறைந்து அழகாய் அமைந்திருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அமரனின் விமர்சனம் அட்ட்காசமாகவும் இருக்கிறது... தொடர்க மக்களே!

    படத்திற்கு 100,
    கவிதைக்கு 200
    அழகுக்கு 100

    அமரனுக்கு விமர்சனம் 100

    வாழ்த்துக்கள் நண்பர்களே!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மிக சிற்பான ஒரு கவிதை படத்தை கருவாக கவிதை வடித்துள்ளது கவிதையில் உண்மையம் மென்மையும் மிக மிக அருமை ஷீ
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    கவிதை வரிகள் மனதை கொள்ளை கொள்கின்றன. பிஞ்சு தேவதை, நஞ்சு மன வார்த்தை பிரயோகம் இன்றைய மனித சமூகத்தின் சுயநல உலகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பாராட்டுக்கள் அழகான, அக்கரையுள்ள உள்ள கவிதைக்கு..!
    அன்புடன்,
    இதயம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி ஆதவா.. கவிதையின் வேறு கோணத்தில் அலசியது....

    நஞ்சு பஞ்சாகவோ... ஆகாமலோ போகட்டும்.... பஞ்சாக இருப்பது நஞ்சாக வேண்டாமே... உண்மைதானே....

    நன்றி மனோஜ்... ந*ன்றி இத*ய*ம்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •