வானுக்கும், பூமிக்குமான
வானுயர்ந்த பாதையில்....
வெள்ளை மேகமொன்று,
பிள்ளை வடிவில் இறங்கியது!
பூமியின் எல்லையில்!
எந்த தேவதைக்கு
பிறந்த தேவதையோ?!
தேவதைகள்,
வானில்தானே இருக்கும்!!
பூமிக்கு இறங்கியதால்,
இந்த பூமியும் வானமாகியது!!
கருப்பு வெள்ளை வர்ணமாகியது!
தேவதை பிரசவித்த..
தேவ பிள்ளையின்
பிம்பத்தை பிரசவித்ததில்..
நீரலைகளெல்லாம்,
தேனலைகளாய் ஆனது!
பிஞ்சு மேகத்தின்
பஞ்சு பாதம் பட்டதும்...
நீரிலிருந்த செவ்விதழ்களெல்லாம்,
ஒவ்வொன்றாய் மேலேறி,
செந்நிறப் பூக்ககளாகின!
மேக குழந்தையின்,
பொன்னிறப் பூக்கரங்களிலே!
வெட்கமென்ன?!
வெள்ளுடை தரித்த,
வெண்பிஞ்சுமேகமே!
கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!
Bookmarks