இப்படிதான் நாட்டில் நல்லவனுக்கு கிடைக்கும் மரியாதையை விட கெட்டவர்களுக்கு கிடைப்பது அதிகம் ஏன் பெண்ணே இன்னுமா உன் மனது நல்லவனை ஏற்க மறுக்கிறது இந்த நல்ல நண்பனின் மனதிற்க்காவது நீ புது வாழ்க்கை தொடருவாயா
தொடரவேண்டும் என்றா அன்பு கட்டளையுடன் உன் நண்பர்கள்
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
இந்தக்கதையை மேலெழுப்பிய முரளிக்கு மிக்க நன்றி. நன்பர்கள் அனைவரின் விருப்பப்படி இப்போது என் தோழி என் நன்பனை ஏற்றுக்கொண்டு நலமாக வாழ்கிறாள். காலம்தாழ்த்திய முடிவுதானென்றாலும், இப்போதாவது இந்த நல்லமுடிவை எடுத்தாளே என்று மகிழ்கிறேன். அவளுடைய தந்தை இறந்துவிட்டார். தாயும், இப்போது அவர்களுடன்தான் இருக்கிறார். ஒரு குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்கள். அதுவும் அழகாக வளர்கிறதாம். இந்தமுறை மும்பை போகாததால் அவர்களை சந்திக்கமுடியவில்லை. நன்பன் மூலம் அறிந்துகொண்டேன். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நம் உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி முரளி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நண்பர்களது பிரார்த்தனை பலித்துவிட்டது.
ஆமா...
ஏன் இந்தப் பதிவு என்று புரியல்லீங்க...
*****
நல்லதொரு சமூகநிகழ்வுக் கதையை, மீள எழுப்பிய முரளி அவர்களுக்கு நன்றி.
*****
இன்றைய நிலையில் உண்மைக் கதையாகிவிட்டது.
இணைந்துகொண்டவர்களுக்கு வாழ்த்துகள்.
*****
ஒரு இனிமையான பாடல் வரிகள் நினைவில்...
“இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று”
பிள்ளைகளின் இல்லற வாழ்வைத் தீர்மானிக்கும் பெற்றோர்,
வரட்டு கௌரவம், அந்தஸ்து, சாதி என்பவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்துவது,
இவ்வாறான விபரீதங்களையும் பெற்றுத் தரும் என்பதற்கு இந்த(உண்மை)க் கதை ஓர் எடுத்துக்காட்டு.
இது எமது சமுதாயச் சாபம் என்றுகூடச் சொல்லலாம்.
பெற்றோர், தம் பிள்ளைகளுக்கான இணையைப் பற்றி தீர அறிந்து கொள்ள வேண்டும்.
இது பெற்றோரின் தலையாய கடமையும் கூட.
நல்ல வேலையிலுள்ள வசதி படைத்த ஒரு மாப்பிள்ளை, அல்லது அவரது குடும்பம்,
பெண் வீட்டாரிடம் பெரும் சீதனத்தைக் கேட்கையிலேயே,
அங்கு குணத்தை விட பணத்தின் எதிர்பார்ப்பே அதிகமாகவுள்ளது என்பது வெளிப்பாடு.
அப்படியிருக்கையில், அதனை விளங்கிக் கொள்ளும் தன்மை ஏன் நம்மிடையே இல்லாமல் உள்ளது?
இதுவும் நமது சாபமோ?
வாழ்க்கையைக் கேட்பவர்கள், உதாசீனம் செய்யப்படுகின்றார்கள்.
வாழ்க்கைக்காக விலையை நிர்ணயிப்பவர்கள், கொண்டாடப்படுகின்றார்கள்.
களையப்படவேண்டிய மடமை.
சிவா.ஜி அவர்களின் நண்பர்களின் வாழ்க்கை,
இவ்வளவு காலத்திற்கு முடங்கியிருந்ததற்கு என்ன காரணம்?
பெற்றோர் நல்லதை நினைத்துச் செய்தார்கள். தவறாகிவிட்டது.
அப்படியே விட்டுவிடுவதா?
சமுதாயத்தின் தேவையற்ற கட்டுகளுக்குள்,
ஏன் கட்டுப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கவேண்டும்?
உடை கிழிந்துவிட்டால் மாற்றிக்கொள்ளும் நாம்,
வாழ்க்கையின் கிழியல்களுக்குத் தையல் கூடப் போட மறுப்பதேன்?
இவர்களின் வாழ்க்கை,
வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கப் பின்னிற்கும் ஒவ்வொருவருக்கும்,
ஒரு உந்துசக்தியாக அமையட்டும்.
பாராட்டுக்கள் சிவா.ஜி...
Last edited by அக்னி; 22-09-2008 at 11:56 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வித்யா மலர்கள் என்று நினைத்து
முட்களில் நடந்தவள்,
முட்களில் நடந்ததால்
மனம் கிழிந்து போனவள்!
அந்த பேதை பெண்ணை
வாழ வைத்த சதீஷ்சிடம்
நிராகரிப்பின் வலி
பாரமாகி கிடந்தாலும்
காதல்
அப்படியே இருந்தது
பாராட்டுக்குரியது.
வாழ்துக்கள் சிவா.
அக்னியின் பின்னூட்டம் சொல்லும் கருத்துகள் அனைத்தும் மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டியவை. சில பெற்றோர்கள் இப்படித்தான் அந்தஸ்து பார்த்து தன் மகளின், அல்லது மகனின் வாழ்க்கையை குழப்பமாக்கிவிடுகிறார்கள்.
திறனாய்வு புலி என்பது மீண்டும் அழுத்தமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது இந்த பதிவில். நன்றி அக்னி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக்க நன்றி பால் ராசய்யா அவர்களே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைக்க மனமில்லாமல் அழுதுகொண்டிருக்கிறேன்...சிவா அண்ணா...
உலகம் எத்தனை விநோதமானது....
அவளுக்கான எனது பிரார்த்தனைகள் தொடரும்..
மனசை பாதித்துவிட்ட சம்பவம் இது..இன்னும் நாலு நாளைக்கு எனக்கு தூக்கம் வராது...
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி ஷிப்லி. மென்மையான உள்ளம் உங்களுடையது. கவி பிரசவிக்கும் உள்ளமல்லவா....?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
எந்த பெற்றோரும் தன் மகளின் வாழ்வு கெட நினைக்க மாட்டார்கள். சில சமயங்களில் நல்லவர்களூம் தவறான முடிவு எடுப்பது உண்டு.
புத்தியுள்ள மனிதரெல்லாம்.... என்ற கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வருகிறது.
தவறுதல் மனித இயல்பே அல்லவா? சரி. தெரியாமல் தவறு நடந்துவிட்டது...!
நல்வாழ்வுக்கு வேறு வழியே இல்லையென்றால் மரபுகளை மீறி மறுமணம் செய்வதில் என்ன தவறு?
மரபுகளும், பழக்க வழக்கங்களும் மனிதர்கள் நல்லபடி வாழவே ஏற்படுத்தப்பட்டன. மனதுக்குள் குமைந்து வருந்துவதற்கல்லவே..?
நல்ல கதைக்கு நன்றிகள் நண்பரே.
கீழை நாடான்
நிச்சயமாக எந்தப் பெற்றோரும் தெரிந்து தவறிழைப்பதில்லை. ஆனால் சில வேண்டாத பிடிவாதத்தாலும், சில அந்தஸ்து, சாதி என்ற பாகுபாட்டினாலும், மகளின்/மகனின் விருப்பம் அறியாது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். நன்றாக அமைந்தால் நல்லது. அதுவே வித்யாவுக்கு நேர்ந்ததைப்போல ஆகிவிட்டால் அனைவருக்குமே வருத்தம் தானே.
தங்கள் பின்னூட்டக் கருத்துக்கு நன்றி கீழைநாடான்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks