Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 38

Thread: இன்னும் இருக்கு வாழ்க்கை

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    இன்னும் இருக்கு வாழ்க்கை

    மூன்று பேர்தான் வந்திருந்தார்கள்.மாப்பிள்ளையும் அவருடைய சித்தப்பா,சித்தி மட்டுமே கலந்துகொண்ட பெண்பார்க்கும் படலம்.காஃபி,சிற்றுண்டி எல்லாம் முடிந்ததும்,கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் அலசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தது. பையன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு நாக்பூரில் ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருப்பதால்...ரொக்கமும்,தங்கமும் தாரளமாகவே தருவதாய் வித்யாவின் தந்தை ஒத்துக்கொண்டார்.

    மாப்பிள்ளை பையனுக்கு பெற்றோர் இல்லாததால் சித்தப்பாவும் சித்தியும்தான் முன்னின்று திருமணத்தை நடத்தப்போவதாகசொன்னார்கள்.புகுந்த வீட்டில் பிக்கல் பிடுங்கல் இருக்காது,மகள் நிம்மதியான திருமண வாழ்க்கையை நடத்த முடியுமென்று சந்தோஷப்பட்டுக்கொண்டார்கள் வித்யாவின் பெற்றோர்.பத்திரிக்கை அடிக்கப்பட்டுவிட்டது.திருமணவிழா மும்பையிலேயே நடத்தப்படுமென்று முடிவு செய்யப்பட்டது.

    தன் பங்குக்கு சில பத்திரிக்கைகளை எடுத்துக்கொண்டு அன்று அலுவலகம் வந்தாள் வித்யா.முதல் பத்திரிக்கையை தன் மேலதிகாரிக்கு கொடுத்துவிட்டு பின் தன் சக ஊழியர்களுக்கும் கொடுத்து வரவேற்றாள்.சதீஷிடம் கொடுக்கும்போது மட்டும் லேசான நடுக்கத்தை உணர்ந்தாள்.ஏற்கனவே அவன் வித்யாவை காதலிப்பதாகச் சொல்லி இவள் சம்மதம் கேட்ட போது..தான் தன்னுடைய பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லி அவனுடைய காதலையும் அவனையும் நிராகரித்துவிட்டாள். அதனால் தன் கல்யாண பத்திரிக்கையை அவனிடம் தருவதற்கு தயங்கினாள்.உள்ளுக்குள் லேசான உறுத்தல்.சதீஷ் நல்லவன்.அமைதியான குனம்.எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன்.அவனை நிராகரிக்க எந்த காரணங்களும் இல்லையென்றாலும்,தன் கொள்கைக்காக அவள் அப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது.சதீஷும் அவளின் பெற்றோர்களை சந்தித்து சம்மதம் கேட்டதற்கு சாதி, அந்தஸ்து, எனக் காரணங்கள் காட்டி வித்யாவின் தந்தை அவனுக்கு வாசல் காட்டிவிட்டார்.

    கிடைத்த பத்திரிக்கையை வாங்கிக்கொண்ட சதீஷ் ஒரு அடிபட்ட பார்வையை வித்யாவை நோக்கி செலுத்தினான்.அதை அவசரமாகத் தவிர்த்து,உடனே நகர்ந்தாள்.

    திருமணம் மிக விமரிசையாக நடந்தது.மாப்பிள்ளை பக்கத்தில் சொற்ப உறவினர்களும் நன்பர்களும் மாத்திரமே இருந்தார்கள்.கொண்டாட்டங்களெல்லாம் முடிந்து தம்பதிகள் நாக்பூர் சென்று விட்டனர். ஒருவாரம் கழித்து வித்யாவின் பெற்றோர் நாக்பூர் சென்று இரண்டு நாள் மகளுடன் தங்கி ஒரு இல்லத்தரசியாக வாழத்தொடங்கி விட்ட மகளை பூரிப்புடன் பார்த்து சந்தோஷமாக வீடு திரும்பினர்.

    இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும்...அன்று பின்னிரவில் வித்யா தனியாக வீட்டுக்கு வந்தாள்.அவள் கோலத்தை பார்த்து இருவரும் அதிர்ந்து விட்டார்கள்.கையில் காதில்,கழுத்தில் இவர்கள் பூட்டி அனுப்பிய ஆபரணங்கள் எதுவுமில்லாமல்,கன்னிப்போன கன்னங்களுடன்,வாராத தலையும்,கலங்கிய கண்களுமாய் வந்திருந்த வித்யாவைப் பார்த்து பதறிப்போய்"என்னம்மா வித்யா என்ன நடந்தது...ஏன் இப்படி இந்த கோலத்தோட எந்த தகவலுமில்லாம இந்த நேரத்துல வந்திருக்கியே...."வரிசையாக கேள்விகள் கேட்டுக்கொண்டே கதவைத்திறந்து விட்டார். எந்த பதிலும் சொல்லாமல் உள்ளே வந்து அமர்ந்து தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு..வித்யா பேச ஆரம்பித்தாள்.
    "எல்லாமே தப்புப்பா....ஆசையாசையா ஒரே பொண்ணுன்னு என்னை வளர்த்து இப்படி ஒரு நரகத்துல தள்ளிட்டீங்களே..."சொல்லச்சொல்லவே துக்கம் தாளாமல் விசும்பி அழத்தொடங்கிவிட்டாள்.

    "அய்யய்யோ என்னம்மா என்னென்னவோ சொல்றியே..என்னதாம்மா நடந்தது"கேட்டவரை பார்த்துக்கொண்டே.."நடக்கக்கூடாததெல்லாம் நடந்துடிச்சிப்பா...உங்க மாப்பிள்ளை...த்தூ...அவனெல்லாம் மனுஷனே இல்ல..அவனோட வேலை பொய்,படிப்பு பொய்,சித்தப்பா சித்தி எல்லாருமே பொய்ப்பா.அவன் ஒரு பிம்ப்...இது அவனுக்கு நாலாவது கல்யாணம்..ஏற்கனவே மூணு பொண்ணுங்கள சீரழிச்சிருக்கான்...வேற வேற இடங்கள்ல..நாம அவனோட வலையில விழுந்துட்டோம்.பணத்துக்காக எத வேணுன்னாலும் செய்யறவன்.நீங்க போட்ட எல்லா நகைங்களையும் என்கிட்டருந்து பறிச்சிக்கிட்டான்.போய்த்தொலையுதுன்னு பாத்தா...ரெண்டு நாளைக்கு முன்னால வீட்டுக்கு ரெண்டு பேரக்கூட்டிகிட்டு வந்து என்னை கூட்டிக்குடுக்கறதுக்கு முயற்சி பன்னாம்ப்பா அந்த கேடுகெட்டவன்.ரொம்ப போராட வேண்டியிருந்ததுப்பா அந்த மிருகத்துக்கிட்டருந்து தப்பிக்கறதுக்கு..."தாளமாட்டாமல் அவள் அழுத அந்த அழுகையிலேயே தெரிந்தது எவ்வளவு வேதனையை அவள் அந்த நேரத்தில் அனுபவித்திருப்பாளென்று..தன்னையறியாமலேயே வழிந்த கண்ணீரை துடைக்கக் கூட தோணாமல்,தன் செல்ல மகளின் கைகளை ஆதரவுடன் பற்றிக்கொண்டார்.

    விசும்பல்களுக்கிடையே தொடர்ந்தாள்..."என்னோட மூர்க்கமான எதிர்ப்பை பாத்துட்டு..உன்னை நாளைக்குப் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு கதவை வெளிப்புறமா பூட்டிட்டு போயிட்டான். நான் எப்படியோ அந்த பில்டிங் வாட்ச்மேனைக் கூப்பிட்டு சொசைடி ஆபீஸ்லருந்து சாவிய வாங்கிட்டு வரச்சொல்லி, அந்த நல்ல மனுஷனோட உதவியால இங்க வந்து சேர்ந்தம்ப்பா.." எல்லாவற்றையும் கொட்டிவிட்டு கதறினாள்.
    என்ன சொல்வது,என்ன செய்வது என்று எதுவுமே தோன்றாமல் இருவரும் மகளின் அழுகையோடு தாங்களும் சேர்ந்துகொள்ளத்தான் முடிந்தது.

    நல்லவேளையாக வித்யாவின் அலுவலக மேலாளர் அவள் நிலையறிந்து மீண்டும் அதே வேலையை அவளுக்குத் தந்தார். நேர்ந்த துன்பங்களிலிருந்து வெளிவர இந்த வேலை மிகவும் உதவியாக இருந்தது.வித்யாவின் நிலையை அறிந்ததும் சதீஷ் துடித்துப்போய்விட்டான்.அவளுக்கு ஆறுதலாக எல்லோருமிருப்பதாக சொல்லி அவளைத் தேற்றினான்.முதல் முறையாக வித்யா சதீஷை வேறு கோணத்தில் பார்த்தாள்.இவனுக்கும் அந்த மிருகத்துக்கும் எத்தனை வித்தியாசம்...நான் இவனை நிராகரித்தது தவறோ என நினைக்கத்தொடங்கினாள். சிறிது நாட்க்களிலேயே எல்லா அதிர்ச்சிகளும் விலகி தெளிவானாள்.

    அன்று அலுவலகம் வந்ததும் அவள் பார்வை சதீஷின் மேசைபாக்கம் பாய்ந்தது.உடனே ஒரு தெளிவான முடிவோடு அவனை நோக்கி நடந்தாள்.
    "சதீஷ் உங்க கூட கொஞ்சம் பேசனும்'
    "என்ன வித்யா.."
    இங்க இல்ல டீ ரூமுக்கு போகலாம் வாங்க.."

    குழப்பமான உணர்ச்சிகளோடு சதீஷும் அவளை பின் தொடர்ந்தான்.

    " சதீஷ் நான் நேரடியாவே கேட்டுடறேன்....உங்களுக்கு இன்னமும் என் மேல அதே காதல் இருக்கா..?"

    சட்டென்று கேட்டதும் உடனே பதில் சொல்ல கொஞ்சம் திணறிவிட்டு சொன்னான்..
    "அப்கோர்ஸ் வித்யா...சாகுற வரைக்கும் அது இருக்கும்.நீதான் என்னை காதலிக்கலயே தவிர நான் உன்னை காதலிச்சது சத்தியம். ஏன் இப்ப இந்த கேள்வி?"

    "ரொம்ப சந்தோஷம் சதீஷ். என்னை கல்யாணம் செஞ்சுக்க உங்களுக்கு விருப்பமான்னு நான் கேக்கப்போறதில்ல..ஏன்னா அது நீங்க என் மேல வெச்சிருக்கிற காதலை அவமானப்படுத்துறமாதிரி ஆகிடும்.அதனால நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்"

    சதீஷ் சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் மெல்ல அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக்கொண்டான்.



    குறிப்பு: என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் இது. இதை நான் ஏன் உண்மைச்சம்பவம் பகுதியில் இடவில்லையென்றால்...இந்த கதையின் நாயகியைப்போல என் தோழி தைரியமாக முடிவெடுக்க துணிவில்லாமல் இன்னமும் தனி மரமாகத்தான் வாழ்கிறாள்.எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அவளை காதலித்த என் நன்பனோடு என் கற்பனையில் அவளைச் சேர்த்துவைத்தேன். கற்பனை கலந்துவிட்டதால் இது கதையாகிவிட்டது.ஆனால் இது உண்மையாக வேண்டுமென்பதே என் விருப்பம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் வெண்தாமரை's Avatar
    Join Date
    27 Jul 2007
    Location
    mukkadal sangamikkum
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    34
    Uploads
    0
    உண்மையானால் சந்தோசம்தான்.. எத்தனைபேர் வாழ்க்கையில் முடிவெடுக்க தெரியாத கோழைகளாக இருக்கிறார்கள்.. உண்மை சுட்டது..

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி வெண்தாமரை.என்னுடைய எதிர்பார்ப்பும் அதுதான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் வெண்தாமரை's Avatar
    Join Date
    27 Jul 2007
    Location
    mukkadal sangamikkum
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    34
    Uploads
    0
    ஏதோ வேகமாக எழுதி விட்டேன். வாழ்க்கையில் நிறைய பேருக்கு முடிவு எடுக்க தெரியாத கோழைகள் ன்னு.. அப்புறம் தான் தெரிந்ததது அதை சொல்லும் தகுதி எனக்கு இல்லை. உங்கள் தோழி நன்றாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.
    Last edited by வெண்தாமரை; 17-08-2007 at 10:23 AM.

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    தாய் தந்தையரைக்கூறி வாழ்க்கை பாழடிக்கும் பலர் நாம் கண்கூடு பார்க்கிறோம்... தம் சுயகெளரவத்திற்காக தம்பிள்ளைகளைப்பலிக்கடாவாக்கும் போது பிள்ளைகள் ஏன்தான் ஒத்துக்கொண்டு தம் வாழ்க்கையை சீரழிக்கிறார்களோ தெரியாது. வாழ்க்கை சீரழிந்தபின் பிரச்சனை பிள்ளைக்கு மட்டுமல்ல... பெற்றோருக்கும் தான் என்பதை ஏன் அறிகிறார்கள் இல்லை.........

    கதைக்குப்பாராட்டுக்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி அன்பு. திருமணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு.நிறைய பேர் ஏன் அதை தைரியமாக எதிர் கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.தன் விருப்பத்தை சொல்ல,ஆணோ,பெண்ணோ இருவருக்கும் உரிமை இருக்கிறது.அதை வெளிப்படுத்த தவறும்போதுதான் இப்படி அனர்த்தங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    உண்மையாகும் சிவா. நிச்சயம் நீங்கள் நினைப்பதுபோல நடக்கும்.

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ஆரென்.நல்லதையே நினைப்போம்...நம்புவோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு சிவா,

    அந்தஸ்து.இத்யாதி பார்ப்பதில் தவறில்லை..
    மனவிருப்பும், நேர்மை போன்ற இன்றியமையாதவையும் இருக்கும்போது..
    அந்தஸ்து, சாதி மட்டுமே பார்ப்பது − இப்படி முடியலாம்..

    காதல், பெரியோர் நிச்சயத்தவை −
    இருவகைத் திருமணங்களிலுமே
    இவ்வகை ஆபத்துகள், விபத்துகள் நேரலாம்..

    (ஆசை படத்தில்.. ஒரு ஆளின் முகத்தைப்பார்த்தாலே சொல்லிடுவேன்
    அவன் எப்படின்னு என சொல்லும் பூர்ணம் விசுவநாதன் நினைவு வருகிறது... வித்யாவின் அப்பாவை ''பார்க்கும்போது'')

    முடிந்தவரை தவிர்க்கவேண்டும்.. உள்ளுணர்வால். விசாரிப்புகளால்..
    முடியாதபோது நிவர்த்திக்கவேண்டும்..

    உங்கள் கற்பனைப் பின்சேர்ப்பு போல..


    பாராட்டுகள் சிவா..


    (வெண்தாமரையின் இரண்டாவது பின்னூட்டம் எனது வாக்குமூலமும் கூட)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆச்சர்யமாக இருக்கிறது....மிகச் சரி இளசு..வித்யாவின் அப்பா பார்ப்பதற்கும் பூர்ணம் விஸ்வநாதனைப்போலத்தான் இருப்பார் மற்றும் சில குணங்களும் அப்படித்தான்.
    அந்த மட்டுமேசொல்லிவிட்டது சரியான அர்த்தத்தை.இதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும் ஏமாற்றங்களும்,ஏமாற்றப்படுதலும் தவிர்க்கப்படும். நன்றி இளசு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இளசு அண்ணாவின் விமர்சனத்தை மீறி சொல்வதற்கு ஏதும் என்னிடம் இல்லை. நிச்சயிக்கபட்ட திருமணமா காதல் திருமணமா என்னும் விவாதத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை. இரண்டிலுமே முட்கள் உள்ளது என்பதை மட்டும் உணர முடிகிறது சிவா. நீங்க கைதேர்ந்த எழுத்தாளன் என்பதை நிரூபித்து வருகிறீர்கள். தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருங்கள்.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி அமரன்.மன்றப் பெருந்தகையோரின் பெருந்தன்மையால்தான் என் எழுத்தாளனென்ற வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது..இல்லையென்றால் எப்போதோ அச்சானி கழண்டு குப்புறக் கவிழ்ந்திருக்கும்.நிஜமாகவே நீங்கள் சொன்ன நிலையை அடைய முயற்சிப்பேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •