Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: குளிர்நாட்டுக் காதல்?(சிறுகதை)

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    குளிர்நாட்டுக் காதல்?(சிறுகதை)

    புதுடெல்லியில் விமானம் ஏறும் போது இப்படி பேய்குளிர் இருக்குமென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.கஜகஸ்தானின் முக்கிய நகரமான அல்மாட்டியில் விமானம் தரையிறங்கியதும்..விமானத்திலிருந்து அனைவரும் இறங்கி வெளியே வந்தோம்.கடுமையான குளிர் முகத்திலைறந்தது.ஓட்டமாக ஓடி வந்து கட்டிடத்துக்குள் நுழைந்ததும்தான் கை கால்கள் ஆடாமல் அமைதியானது.
    பின்னர் எனக்கு வேலை கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் வந்தது,அங்கிருந்து மேலும் மூன்றரை மணி நேர பயணத்தில் உரால்ஸ்க் என்ற இடத்திற்கு வந்து..இருப்பிடம் சேர்ந்தது எல்லாம் இந்த கதைக்கு முக்கியமில்லை.

    முன்னாள் சோவியத் யூணியனிலிருந்து பிரிந்த இந்த நாடு இப்போது பொருளாதாரத்தில் நொண்டியடித்துக்கொண்டிருக்கிறது. இருந்தும்..நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைத்த சுதந்திரத்தை இந்த நாட்டு மக்கள் ஆசை தீர அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.லட்டு லட்டாய் பெண்கள்.ஆட்டோகிராப் படத்தில் சொல்லப்பட்ட ஒரு வசனத்தைப் போல "ச்செவச்செவன்னு திரியறாங்களே..இவிங்கள பெத்தாங்களா செஞ்சாங்களா" என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.நடனத்திலும் விருந்து கேளிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட எனக்கு அவர்களின் கலாச்சாரம் மிகவும் பிடித்துப்போனதில் எந்த ஆச்சரியமுமில்லை.அங்கிருந்த ஒரு இரவு விடுதிக்கு எல்லா சனிக்கிழமைகளிலும் நன்பர்களோடு போவது வழக்கமாகி விட்டது. இயல்பாகவே நன்றாக நடனமாடத் தெரிந்த என்னை..நடனத்தை மிகவும் விரும்பும் அந்த செவத்த குட்டிகளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதில் எப்போதும் என்னுடன் நடனமாடும் அலியா எனக்கு நல்ல இணையாகிவிட்டாள். முதல் மூன்று மாதங்கள் வெறும் ஆட்டம் கொண்டாட்டமென்றே போய்விட்டது.

    ஒருநாள் அலியா என்னிடம் "கண்ணன் நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோமா' என்று கேட்டதும் எனக்கு பகீரென்றது. அவர்களுக்கு இந்த ஒப்பந்த வாழ்க்கைமுறை சகஜமென்றாலும் ஒரு குடும்ப வாழ்க்கையில் பழக்கப்பட்ட எனக்கு இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னைப் பற்றி விளக்கிச் சொன்னேன்."அலியா நீ நினைப்பதைப்போல அல்ல..எங்கள் வாழ்க்கை முறை...எனக்கு ஒரு அழகான மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்..அவர்களின் சந்தோஷமான எதிர்காலத்துக்காகத்தான் நாங்கள் இப்படி நாடு விட்டு வந்து பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறோம். நீ சொன்னதை என்னால் நினைத்துக் கூட பார்கக முடியவில்லை மன்னித்துக்கொள்" என்றதும் அவள் முகம் வாடிவிட்டது.ஒண்றும் சொல்லாமல் எழுந்து போய்விட்டாள்.

    மார்ச் 8.....என் வாழ்க்கையை மாற்றி அமைத்த நாள். சர்வதேச மகளிர் தினமான அன்று அங்குள்ள பெண்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.அன்று வழக்கம்போல் இரவு விடுதியில் அவளை சந்தித்த போது எதுவுமே நடக்காத மாதிரி இயல்பாய் என்னுடன் சேர்ந்து நடனமாடினாள். நள்ளிரவு 12 ஆவதற்கு 15 நிமிடத்துக்கு முன்னால்..மெள்ள என் காதருகே கிசுகிசுத்தாள்"கண்ணன் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாமா.." ஆட்டத்திற்கு நடுவே இளைப்பாறிக்கொள்ள அப்படி வெளியே போவது வழக்கமென்பதால் நானும் அவளுடன் போனேன்.வெளியே வந்ததும்"கண்ணன் இப்போது நீங்கள் என்னுடன் என் வீட்டுக்கு வருகிறீர்கள்...மகளிர் தினத்தை வரவேற்கும் வகையில் என்னுடைய பெற்றோரும் சகோதரியும் நள்ளிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.உங்களை கட்டாயம் அழைத்து வருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்..புறப்படுங்கள்" என்று என் சம்மதத்தையோ,மறுப்பையோ எதிர்பார்க்காதவளாய்'டாக்சி" என்று அலறி அழைத்து என்னையும் அதனுள்ளே தள்ளி தானும் ஏறிக்கொண்டாள்.

    "அலியா... எனக்கு இப்படிப்பட்ட விருந்துகளில் விருப்பமில்லை ஏன் என்னைக் கட்டாயப்படுத்துகிறாய்"என்றதற்கு "கண்ணன் நீங்கள் நினைப்பதுபோல எந்த தவறும் இதில் இல்லை.என் பெற்றோர்கள் உங்களை சந்திக்க வேண்டுமென்று சொன்னார்கள் அதனால்தான் உங்களை அழைத்துப்போகிறேன் மறுக்காதீர்கள். அதுவுமில்லாமல் அவர்கள் இதுவரை எந்த இந்தியரையும் அருகிலிருந்து பார்த்ததில்லை...உங்களுக்கே தெரியும்தானே நாங்கள் இந்தியர் மேல் எத்தனை மரியாதை வைத்திருக்கிறோமென்று" என்று சொன்னதும் வேறு எதுவும் பேசத்தோன்றாமல் அமர்ந்துவிட்டேன்.இந்த இடத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சோவியத் யூனியனாக இருந்த போதிலிருந்து இந்த மக்களுக்கு இந்தியாவோடு மிக நல்ல அபிப்ராயமும் ஒரு பாசமும் இருக்கிறது.இப்போதும் ராஜ்கபூரின் படத்தை சிலாகித்து பேசுபவர்கள் நிறைய உண்டு.அதுவுமல்லாமல் அவர்களின் நாட்டு தொலைக்காட்சியில் வாரமிருமுறை இந்தி படங்கள் கசாக் மொழியில் சப்-டைட்டில் கொடுத்து ஒளிபரப்பப்படுகிறது.அதனாலேயே அங்கிருக்கும் பெண்களுக்கு இந்தியரென்றால் மிகவும் பிரியம்.

    விருந்து தடபுடலாக இல்லாமல், அவர்களின் குடும்ப உறுப்பினராக அலியாவின் அப்பா,அம்மா,மற்றும் அவள் தங்கை மட்டுமே இருந்தார்கள்.மிக நன்றாக உபசரித்தார்கள். எல்லா உணவு வகைகளையும் கரண்டியால் மட்டுமே சாப்பிடும் அவர்கள் விருந்தாளிகளுக்காக தயாரிக்கப்படும் பிரத்தியேகமான உணவான"பிஸ்பர்மாக்" என்ற உணவை மட்டும் கைகளால் உண்பார்கள்.அந்த சொல்லின் அர்த்தமே "கைகளால் உண்பது'...என்பதாகும்.உருளைக் கிழங்கும் குதிரை மாமிசமும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு உணவுவகை.அதை சாப்பிட்ட பிறகுதான் அது குதிரை மாமிசமென்று சொன்னார்கள் பாவிகள்.பரவாயில்லை சம்பிரதாயத்துக்காக குடித்த "வோட்கா"அந்த ருசியையெல்லாம் உணரவிடவில்லை.ஆனால் கொடுமை என்னவென்றால் அவர்கள் சம்பிரதாயமே ஒவ்வொரு கை உணவு உண்பதற்கு முன்னும் ஒரு சிறிய கோப்பை வோட்காவை அருந்த வேண்டுமென்பதுதான்.சாப்பிட்டு முடிப்பதற்குள்...எனக்கு தட்டாமாலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.நான் திரும்ப என் இருப்பிடத்துக்கு போக வேண்டுமென்று சொல்லவந்ததைக் கூட சொல்லத் திராணியில்லாமல் படுத்துவிட்டேன்.

    எப்போது தெளிந்தேன் என்ற நினைவில்லாமல் இரண்டு மூன்றுமுறை தூக்கத்திலிருந்து எழுந்து பின் மீண்டும் உறங்கியிருக்கிறேன். சரியாக தெளிந்தபின் பார்த்தால்..மின்னல் தாக்கியதைப்போல அதிர்ச்சி. என்னருகே அலியா.......தலைபாரம் தாங்க முடியாமல் இரண்டு கைகளாலும் நெற்றியை அழுத்தி பிடித்துக்கொண்டு கண்ணை மூடினால்...காற்றில் கோட்டுச்சித்திரங்களாய் என்னெனவோ வந்து போனது.அவசரமாய் எழுந்து என் இருப்பிடம் வந்து சேர்ந்தேன். மிகச் சுத்தமான அதிர்ச்சியிலிருந்தேன்.யோசிக்கத் திராணியில்லாமல் சட்டையை மாட்டிக்கொண்டு..கடைக்குப் போய் ஒரு வோட்கா பாட்டிலை வாங்கிவந்து..கடகடவென பாதி பாட்டிலை வாயில் கவிழ்த்துக்கொண்டதும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் மறந்து உறங்கிவிட்டேன். இருட்டியபிறகுதான் கண்விழித்தேன். பசிப்பது போல ஒரு உணர்வு இருந்தாலும் சாப்பிட பிடிக்காமல்...என் நிலையை யோசிக்கத்தொடங்கினேன். என் மீது எனக்கே வெறுப்பாகிவிட்டது.ஏன்...ஏன் என்று என்னையே கேட்டுக்கொண்டதில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.மீதமிருந்த வோட்காவை குடித்துவிட்டு உறங்கிவிட்டேன்.

    காலை விடிந்ததும் கொஞ்சம் தெளிவு கிடைத்த மாதிரி இருந்தது.ஆனது ஆகிவிட்டது. இதில் என் தவறை விட, எனக்குள்ளே போன வோட்காவின் தவறுதான் அதிகம் என்று ஒரு சப்பைக்கட்டு சமாதானம் சொல்லிக்கொண்டு..வேலையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
    அந்த வாரம் முழுவதும் அலியாவை நான் பார்க்கவே இல்லை. வழக்கமாய் சனி இரவுகளில்தான் பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த சனியன்று போகப்போவதில்லையென்று முடிவுடன் அறையிலேயே இருந்தேன். என்னுடன் பணிபுரியும் நன்பர்கள், வழக்கத்தைப் போலவே இன்றும் என்னை அழைத்துச்செல்ல வந்துவிட்டார்கள். நான் வருவதாயில்லை என்று எத்தனையோ சொல்லியும் ரொம்பவும் கட்டாயப்படுத்தி கூட்டிப்போய்விட்டார்கள்.

    அன்றுநிகழ்ந்த அந்த அலியாவுடனான சந்திப்புத்தான் எங்கள் இருவரையும் இணந்து வாழ கட்டாயப்படுத்திவிட்டது.மனைவி,குழந்தை என்று எல்லாம் சொல்லியும் அவள் கேட்பதாயில்லை.கடைசியில் "உனக்கு இருபது எனக்கு நாப்பது எப்படி சரியாகுமென்று" அந்த அஸ்திரத்தையும் தொடுத்துப்பார்த்துவிட்டேன்.நான் விரும்புவது உங்கள் இதயத்தைத்தான் உங்கள் வயதையல்ல என்று செண்டிமென்டாக பேசி என்னை பலவீனப்படுத்திவிட்டாள்.அதற்குபிறகு இருவரும் வசிக்க தனியாக வீடு பார்த்து,அலுவலகம் முடிந்து நேராக வீடு வந்து..என்று வாழ ஆரம்பித்து விட்டோம். கொஞ்ச நாள் பழகினால் வீட்டில் வளரும் நாய்,பூனையிடத்திலேயே ஒரு பிணைப்பு வரும்போது..ஒரு பெண் மீதா வராது...வந்துவிட்டது.வீட்டுக்கு தொலைபேசுவது குறைந்துவிட்டது.இங்கு செய்யும் செலவை சரிகட்ட மனைவியிடம் பொய் என்று என் பாதை மிகத்தவறான திசையில் போவதை உணராமல்...மந்திரத்துக்கு கட்டுப்பட்டவனைப்போல் என் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன்.இருவருக்குள்ளும் ஈடுபாடு அதிகமாகிவிட்டிருந்தது.

    இந்த சமயத்தில் ஒருநாள் ஒரு உணவு விடுதியில் உணவருந்திக்கொண்டிருந்த போது,வேறு ஏதோ நிறுவனத்துக்கு வேலைக்கு வந்திருந்த யாரோ இரண்டு தமிழர்கள் எங்கள் மேசைக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது. அதில் ஒருவன் என் நிலையில் இருக்கிறானென்பதும், அவனுக்கு அப்படி செய்வது சரியல்ல என்று இன்னொருவன் சொல்லிக்கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.அந்த இன்னொருவன் பேசியது என்னை சவுக்கால் அடிப்பதைப் போல் இருந்தது
    "ராஜேஷ் உனக்கு பிடித்த மாதிரி இவள் இருக்கிறாள்,உன் தேவையையெல்லாம் சரியாக உணர்ந்து செய்கிறாள்,அதனால் இவளை நீ மிகவும் விரும்புவதாகச் சொல்கிறாயே...உன் மனைவியை நினைத்துப்பார். கடல் கடந்து போயிருக்கிற கணவன் கை நிறைய பொருளோடு வருவானென்றா அவள் காத்திருக்கிறாள்.உன்னை மட்டுமே எதிர்பார்த்து உனக்காக காத்திருக்கும் அவளுக்கும்,அவளை விரும்புவதாய் சொல்லும் யாரோ ஒருவன் கிடைத்து,அவளும் அதில் மயங்கி,நீ இங்கு செய்வதை அவளும் அங்கு செய்தால் உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா...?"முகத்தில் அறைந்ததைப்போல இருந்தது அவன் கேட்டது.என்னால் அலியாவிடம் முன்பைப்போல இருக்க முடியாமல்,விட்டு விலகவும் முடியாமல் ஒரு அவஸ்தையில் இருந்த போதுதான்..ஒருநாள் அலியா சொன்னாள்.

    "கண்ணன் சில நாட்களாக நானும் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்.அடிக்கடி உங்கள் மனைவியின் புகைப்படத்தையும்,பிள்ளைகளின் புகைப்படங்களையும் பார்த்து கண்ணீர் விடுகிறீர்கள்.என்னால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது.உங்கள் பணி முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை நாம் சேர்ந்திருந்தால் இன்னும் நம் அந்நியோண்யம் அதிகமாகிவிடும்.பிறகு நீங்கள் ஊர் திரும்பிப் போனாலும் முன்பைப்போல உங்கள் மனைவியிடம் அதே அளவு நேசத்துடன் இருக்க முடியாது. அந்த நிலை உங்களுக்கு வரவேண்டாம்.நாம் பிரிந்துவிடுவோம்.முடிந்தால் இந்த வேலையை விட்டுவிட்டு திரும்பப் போய்விடுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது"என்று சொல்லிவிட்டு ஏற்கனவே முடிவு செய்திருந்தவள் போல அவளுடைய எல்லா உடைமைகளையும் எடுத்துவைத்திருந்தவள்,அனைத்தையும் எடுத்துக்கொண்டு என் முகத்தைக்கூட திரும்பிப்பார்க்காமல் போய்விட்டாள். அவள் சொன்னதிலிருந்த உண்மை சுட்டது. அடுத்தநாளே ராஜினாமா எழுதிக்கொடுத்துவிட்டேன்.

    திரும்பவும் "உரால்ஸ்க்" விமான நிலயத்தில் நடுக்கத்தோடு விமானத்துக்காக காத்திருந்தேன். ஆனால் இந்த முறை நடுக்கம் குளிரால் அல்ல......
    Last edited by சிவா.ஜி; 19-08-2007 at 04:38 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    நல்ல சிறுகதை.நிஜமான நிகழ்வுகளை அழகான கற்பனையில் வடித்திருக்கிறீர்கள்.
    இணையத்தில் ஒரு தோழன்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கருத்துக்கு நன்றி இக்ராம்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் வெண்தாமரை's Avatar
    Join Date
    27 Jul 2007
    Location
    mukkadal sangamikkum
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    34
    Uploads
    0
    கதை நன்றாக இருந்தது..

    உண்மையை உறைத்தது..

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உரைத்த உண்மை உறைத்தால் சில தவறிழைத்த உள்ளங்கள் திருந்தும்.நன்றி வெண்தாமரை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அழகாக கதையை கொண்டு சென்று உண்மையையும் அப்படியே உரைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்....

    எம்மை மட்டும் யோசிக்கும் நாம் ஒரு கணம் உற்றவளுக்காகவும் நினைத்தால் தெளிந்துவிடுவோம்....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி அன்புரசிகன்.இந்த கதையில் நான் சொல்லவந்ததே இந்த கருத்துதான்.தவறை செய்துவிட்டு அதற்கு ஆயிரம் சப்பைக்கட்டுகள் கட்டினாலும்...அது தவறுதான்.ஆனால் திருந்தவேண்டும் அதுதான் தேவை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாராட்டுகள் சிவா..

    உன்னை மற்றவர் எப்படி நடத்தவேண்டும் என விரும்புகிறாயோ
    அப்படியே நீ மற்றவர்களை நடத்தவேண்டும்..

    இந்த சகமனித மரியாதை நடத்தைக்குப் பிறகுதான்எல்லாமே − அன்பு, பாசம், நட்பு, உறவு எல்லாமே!


    உன் வாழ்க்கைத்துணை எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறாயோ
    அப்படி நீ நிச்சயம் இருக்கவேண்டும்..
    இந்த அடிப்படை மரியாதையற்ற எந்த உறவும்
    அஸ்திவாரம் இல்லாத கட்டடமே!


    பல காரணங்களுக்காக பிரிந்து வாழு(டு)ம் தம்பதியருக்கான
    காலத்துக்கேற்ற நல்ல கதை...

    மீண்டும் பாராட்டுகள்..


    (முதல் இரு பத்திகளில் சுஜாதா நடை அளவுக்கு ஒரு ஒயில்..
    அடுத்தடுத்து வோட்கா அடித்ததுபோல் அந்த நடை ம(ய)ங்கி விட்டதே..)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான் இளசு...தன்னைப்போலவே தன் இணையையும் மதித்து,உணர்வுகளை உணர்ந்து வாழும் மனிதரின் வாழ்க்கை மரியாதைக்குட்பட்டது.
    நீங்கள் சொன்ன் பிறகுதான் மீண்டும் படித்துப்பார்த்தேன்....சரிதான்...நடையில் ஒரு தொய்வு வந்து விட்டது.மிகவும் நீட்டாமல்,சொல்லவந்ததை சுருங்கச்சொல்ல வேண்டுமென்பதாலேயே அதிகமாக நடையில் கவனம் செலுத்தவில்லை.போகப்போக சுருங்கச் சொல்லவும்,அதை சுவாரசியமாகச் சொல்லவும் பழகிவிடுமென்ற நம்பிக்கை இருக்கிறது.அருமையான பின்னூட்டம் ஒரு 10 கோப்பை பூஸ்ட்(வோட்கா அல்ல) சாப்பிட்டது போல உள்ளது.மனம் நிறைந்த நன்றி இளசு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சிவா உங்கள் கதைகளில் கனமும் தரமும் விலைவாசிபோல ஏறிகொண்டே போகிறது. நிஜத்தில் சில கண்ணன்களையும் ராஜேஷ்களையும் பார்த்திருகிறேன். என்ன காரணம் சொன்னாலும் ஏற்கமுடியாத தவறு. கற்பு என்பது நெறி பிறழாது இருப்பது. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. கண்ணனை விட அலியா கற்பில் உயர்ந்துள்ளாள். தவறு செய்யத்தூண்டினாலும் தடம்மாறிய ரயிலை தடம்புரளாது செய்த அவள்மூலம் பெண்மைக்கே உரிய கூர்மையான பார்வையும் தூர நோக்குப் பார்வையும் கூறி பெண்மைய பெருமைப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது. சந்தர்ப்பம் கிடைத்தும் கோடுதாண்டாது இருப்பவன்/ள் கற்புடையவன்/ள்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    . சந்தர்ப்பம் கிடைத்தும் கோடுதாண்டாது இருப்பவன்/ள் கற்புடையவன்/ள்.


    உண்மைதான் அமரா..
    இல்லாதபோது உண்ணாதிருப்பது பட்டினி..
    கிடைத்தும் தவிர்ப்பதே விரதம்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது. சந்தர்ப்பம் கிடைத்தும் கோடுதாண்டாது இருப்பவன்/ள் கற்புடையவன்/ள்.
    அமரன் அற்புதம்...மிகப்பெரிய சத்தியம் இது. மனதுக்குள் வக்கிரங்களை வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்காததால் நல்லவர்களாய் உலவும் எத்தனையோ அழுக்கு உள்ளம் கொண்டோர் இங்கு உண்டு.நீங்கள் சொல்வதுபோல் சந்தர்ப்பம் கிடைத்தும் அதை சாதகமாக்கி கொள்ளாதவர் மிகச்சிறந்தவர். மிக்க நன்றி அமரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •