மன்ற உறவுகளே,கவிதையால் எதையும் செய்யலாம்.சாம்ராஜ்யங்களையே மாற்றக்கூடியது கவி வரிகள். இங்கு நாம் அப்படி எதுவும் செய்யவேண்டாம்.
எல்லோரும் இன்புற்றிருக்க சிரிக்க வைக்கலாம்.[U]நகைச்சுவையாய்[/ஊ]மட்டுமே கவிதைகள் படைப்போம்,அவை படைத்தவரையும்,படித்தவரையும் மனம் விட்டு சிரிக்க வைப்பதாய் இருக்க வேண்டும்.நம்மைச்சுற்றி எத்தனையோ நிகழ்வுகள்..அதிலிருந்து அமுத சுரபியாய் கவிதைக்கான கரு கிடைத்துக்கொண்டே இருக்கும்.அதனால் கவலையின்றி கவிதை படைக்க தொடங்குங்கள்.சந்தோஷப்படுத்த தெரிந்த அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
உதாரணமாக
நான் டாடா காட்டினால்
அவள் பாட்டா காட்டுகிறாள்
அவளுக்கென்ன தெரியும்
அடி வாங்குவதற்கென்றே
நான் தினம் பேட்டா
வாங்குபவனென்று!
பேட்டா−தினப்படி(இதிலும் அடி...!)
Bookmarks